என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களக்காட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் 3 பேருக்கு வலைவீச்சு
- நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி, கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 38).
- காந்திஜி மேலத்தெருவில் சென்ற போது, களக்காடு கோட்டை யாதவர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (35), முரளிதரன் (27), ரமேஷ் (54) ஆகியோர், முருகனின் மனைவி பொன்மலரின் தம்பி சதிஷ் என்பவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
களக்காடு:
நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி, கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருக்கும், களக்காடு காந்திஜி மேலத்தெருவை சேர்ந்த பொன்மலருக்கும் திருமணமாகியுள்ளது. தற்போது பொன்மலரும், அவரது குழந்தையும், தனது பெற்றோர் வீட்டில் உள்ளனர்.
சம்பவத்தன்று முருகன், தனது மனைவி குழந்தையை பார்ப்பதற்காக மாமனார் வீட்டிற்கு வந்தார். களக்காடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாமனார் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். காந்திஜி மேலத்தெருவில் சென்ற போது, களக்காடு கோட்டை யாதவர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (35), முரளிதரன் (27), ரமேஷ் (54) ஆகியோர், முருகனின் மனைவி பொன்மலரின் தம்பி சதிஷ் என்பவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்த முருகன் அங்கு சென்று என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், முரளிதரன், ரமேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து, முருகனை கற்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயம் அடைந்த முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வெங்கடேஷ் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்