search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "13 பேர் பலி"

    ஆந்திராவில் மைனர் பையனுக்கு 23 வயது பெண்ணை பெற்றோர் காதல் திருமணம் செய்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவன் 13 வயது சிறுவன். கர்நாடக மாநிலம் சனிக்கனூரை சேர்ந்த அய்யம்மாள்(23) என்பவர் சிறுவனின் உறவினர் ஆவார். இதனால் இருவரும் ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வந்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் இல்லாமல் காதல் மலர்ந்தது.

    மைனரான சிறுவனுக்கும், மேஜர் பெண்ணுக்கும் ஏற்பட்ட இந்த காதல் உறவு பெற்றோர்களுக்கு தெரியவந்தது. பெற்றோர்கள் இந்த விநோத காதலுக்கு பச்சைக்கொடி காட்டி சிறுவனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி உப்பரஹால் கிராமத்தில் திருமணத்தை நடத்தினார்கள்.

    இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மைனர் பையனுக்கு 23 வயது பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமணத்தை செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    இதை அறிந்ததும் மணமக்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டனர்.

    ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது இளம்பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமலை, மே.12-

    ஆந்தி£வில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது இளம் பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், கவுதாலம் மண்டலத்துக்கு உட்பட்ட உப்பரஹால் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும், கர்நாடக மாநிலம் சனிக்கனூரில் வசிக்கும் இந்த சிறுவனின் உறவினர் அய்யம்மாள் (23) என்பவருக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு உப்பரஹால் கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது.

    இவர்கள் 2 பேரும் உறவினர் என்பதால், ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வரும்போது, அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வி‌ஷயம் பெற்றோர் களுக்கு தெரியவரவே, 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியதை தொடர்ந்து, ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    ஏனெனில், 13 வயது சிறுவன் 'மைனர்' என்பது தெரிந்தும், அவனை 23 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர்களே எப்படி திருமணம் செய்து வைத்தனர் என்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுபற்றி அறிந்ததும், இளம்பெண் மற்றும் சிறுவன் ஆகியோருடன் 2 பேரின் பெற்றோர்களும் தலைமறைவாகி விட்டனர்.

    இருப்பினும், மைனர் சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. * * * திருமணம் முடிந்ததும் சிறுவனுக்கு முத்தம் கொடுத்த மணப்பெண். ( சமூக வலை தளங்களில் வெளியான படம்.)

    ×