search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "13 பேர் பலி"

    ஏற்காட்டில் ரூ.30 லட்சத்துக்கு 13 கடைகள் ஏலம் நடந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மாவட்ட ஊராட்சி குழுவுக்கு சொந்தமாக, 13 கடைகள் உள்ளன.

    அந்த கடைகள் ஏலம், சேலம் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர், மக்கள் பங்கேற்றனர். டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த ஏலத்தை மாவட்ட ஊராட்சி குழு செயலர் சேகர் நடத்தினர். தி.மு.க. தரப்பில் 5 கடைகளும், அ.தி.மு.க. தரப்பில் 5 கடைகளும், பா.ம.க. தரப்பில் 3 கடைகளும் என முன்கூட்டியே சுமூகமாக பேசி வைத்திருந்தனர்.

    இந்த மொத்தம் 13 கடைகள் ரூ.30 லட்சத்து, 99 ஆயிரத்து, 950-க்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவில் லாரி ஒன்றின் டயர் வெடித்து டெம்போ மீது விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
    மகாராஷ்டிராவின் கட்ச் நகரில் இருந்து நாக்பூர் நோக்கி உப்பு ஏற்றப்பட்ட லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரி மல்காபூர் பகுதியில் வந்தபொழுது திடீரென அதன் டயர் வெடித்தது.

    இதனை தொடர்ந்து அதன் ஓட்டுனர் லாரியின் கட்டுப்பாட்டினை இழந்து விட்டார். இதனால் அருகில் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்றின் மீது லாரி விழுந்தது. இதில் 13 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 5 பேர் பெண்கள். 3 பேர் குழந்தைகள். 3 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.  இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோர் செங்கற்சூளை தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு தங்களது கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். அவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
    மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #MexicoShooting
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாகாணம் அமைந்துள்ளது. வேராகர்ஸ் மாநிலத்தில் உள்ள மினாடிட்லன் நகரில் குடும்ப விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரூ மர்ம நபர் திடீரென அங்கு புகுந்தார். அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை, 5 பெண்கள், 7 ஆண்கள் என மொத்தம் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MexicoShooting
    இந்திய ரெயில்வேயில் சுமார் 1.3 லட்சம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. #IndianRailwaysVacancies
    புதுடெல்லி:

    பொதுமக்கள் தங்களின் வெளியூர் பயணத்துக்கு ரெயில்களையே தேர்வு செய்து வருகின்றனர். இதனால் அதிக தொழிலாளர்களை கொண்ட நிறுவனமாக இந்தியன் ரெயில்வே இயங்கி வருகிறது. அவ்வப்போது இந்தியன் ரெயில்வேயில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாவது வழக்கம்.

    இந்நிலையில், இந்தியன் ரெயில்வேயில் சுமார் 1.3 லட்சம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ரெயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெயில்வேயின் பல்வேறு துறைகளில் உள்ள 1.3 லட்சம் காலி பணியிடங்களுக்கு நாளை அறிவிப்பு வெளியாகிறது. இதற்கான விண்ணப்பங்களை வரும் 28ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். 
     
    ஜூனியர் கிளர்க், அக்கவுண்ட்ஸ் கிளர்க், டைப்பிஸ்ட், டிராபிக் அசிஸ்டெண்ட், கூட்ஸ் கார்ட், சீனியர் கிளர்க், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும்.

    மேலும், மார்ச் மாதத்திலும் தொடர்ந்து காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது என தெரிவித்துள்ளது. #IndianRailwaysVacancies
    மகாராஷ்டிராவில் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற விழாவில் நடனமாடிய 13 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #13yearoldgirldied
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கந்திவலி பகுதியில் அரசு சார்பில் கலை மற்றும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் 
    கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது நடனமாடிக் கொண்டிருந்த குழுவை சேர்ந்த 13 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். 

    இதையடுத்து அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிறுமியின் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    அரசு ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடனமாடிய 13 வயது சிறுமி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #13yearoldgirldied
    கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #CaliforniaBarShooting
    தவுசண்ட் ஓக்ஸ்:

    அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் மாணவர்கள் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி புளோரிடாவில் சட்டம் இயற்றப்பட்டது.
     
    இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.



    தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாருக்குள் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சுமார் 30 ரவுண்டுகள் சுட்டுள்ளான். இதில் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பாரை சுற்றி வளைத்தனர். அங்கு துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.

    இந்த தாக்குதலில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #CaliforniaBarShooting
    சென்னையில் கொலை வழக்கில் தொடர்புடைய 13 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். #goondasact
    சென்னை:

    சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் 9 பேரை கைது செய்தனர். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்தார்.

    சூளைமேட்டைச் சேர்ந்த ஜெயபால், குமரேசன், ராஜேஷ், ராஜு, விஜயகுமார், செங்கல்பட்டைச் சேர்ந்த முகமது ஜான், கோடம்பாக்கம் பிரசாத், நுங்கம்பாக்கம் ராஜா, பெரும்பாக்கம் சிவலிங்கம் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    மேலும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி தேவராஜ், கொலை வழக்கில் தொடர்புடைய திருவொற்றியூர் லோகநாதன், ஆர்.கே.நகர் ரவுடி தீனதயாளன், பெரியமேடு மணிகண்டன் ஆகியோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார். #goondasact

    டோக்கியோ நகரில் சுரங்கப்பாதையில் 1995-ம் ஆண்டு நிகழ்ந்த விஷ வாயு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 6 பேருக்கு நேற்று ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டன. #Japan #SubwayGasAttack
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில், 1995-ம் ஆண்டு, மார்ச் மாதம் 20-ந் தேதி ‘சரின்’ என்னும் விஷ வாயு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 ஆயிரத்து 800 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    இந்த தாக்குதலில் அம் ஷின்ரிக்யோ என்ற மத வழிபாட்டுக்குழுவின் தலைவரான ஷோகோ அசஹாரா (வயது 63) என்ற சாமியாருக்கும், அவரது குழுவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.



    இதில் 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களுக்கு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றமான டோக்கியோ மாவட்ட கோர்ட்டு 2004-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை ஜப்பான் சுப்ரீம் கோர்ட்டு 2006-ம் ஆண்டு உறுதி செய்தது. ஆனாலும் தண்டிக்கப்பட்டவர்கள் பல்வேறு வகையில் தூக்கில் இருந்து தப்புவதற்கு சட்டப்போராட்டங்கள் நடத்தி, அவை தோல்வியில் முடிந்தன.

    அதைத் தொடர்ந்து ஷோகோ அசஹாராவும், அவரது குழுவை சேர்ந்த 6 பேரும் இந்த மாத தொடக்கத்தில் தூக்கில் போடப்பட்டனர்.

    இந்த நிலையில் அந்தக் குழுவில் எஞ்சி இருந்த 6 பேரும் நேற்று ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர்.

    இது தொடர்பாக டோக்கியோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அந்த நாட்டின் நீதித்துறை மந்திரி யோகோ காமிக்கவா, “இது வரை இல்லாத மிகக் கொடிய குற்றம் ஆகும். இனி ஒரு முறை இப்படி நேர்ந்து விடக்கூடாது. இது ஜப்பான் மக்களை மட்டுமின்றி வெளிநாடுகளையும் உலுக்கியது. எனவே தான் தண்டிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் மிகுந்த கவனத்துடன் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நான் உத்தரவு போட்டு இருந்தேன்” என கூறினார்.  #Japan #SubwayGasAttack
    சென்னை வியாசர்பாடியில் குடிசை மாற்று வாரியத்தில் 13 மாடி கட்டிடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
    பெரம்பூர்:

    வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் உள்ளன. 3 மாடி கொண்ட இந்த வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்து விட்டு புதிதாக 13 மாடிகள் கொண்ட குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் கட்டுவதற்காகவும், அதனால் வீடுகளை காலி செய்யும்படி அங்கு வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    திடீரென்று வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் தரும்படி வலியுறுத்தினர். மேலும் 13 மாடி கொண்ட குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்றும் முன்பு இருந்த 3 மாடி கொண்ட குடியிருப்புகளை கட்டி தர வேண்டும் என்று கூறினர். இதை வலியுறுத்தி இன்று காலை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாசர்பாடியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

    சாலையோரம் கைகளை கோர்த்தப்படி அணிவகுத்து நின்றனர்.

    இதையடுத்து அங்கு எம்.கே.பி. உதவி கமி‌ஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர்கள் ஜோதிலட்சும், புகழேந்தி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ரஷிய, ஜப்பான் போரின்போது சுமார் ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ரஷிய போர்க்கப்பல், 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #SunkenRussian #Warship
    மாஸ்கோ:

    ரஷியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 1904-1905 ஆண்டுகளில் போர் நடைபெற்றது.  1905-ம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷிய நாட்டுக்கு சொந்தமான ‘டிமிட்ரி டான்ஸ்கோய்’ என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது.

    அது ரஷியாவுக்கு பேரிழப்பாக அமைந்தது. அந்த போர்க்கப்பலில், 189 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.13 லட்சம் கோடி) தங்கக்கட்டிகளும், நாணயங்களும் வைக்கப்பட்டு இருந்தன. இவை 5 ஆயிரத்து 500 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன.



    இந்த தங்க கட்டிகளும், நாணயங்களும் 2 லட்சம் கிலோ எடை உடையதாகும். இந்தக் கப்பலில் இருந்த சிப்பந்திகளில் 60 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும், 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    மூழ்கடிக்கப்பட்டு 113 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது இந்த போர்க்கப்பல், தென் கொரியாவில் உள்ளேஉங்டோ தீவு கடலில் 420 மீட்டர் ஆழத்தில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இடம், கடற்கரையில் இருந்து 1.6 கி.மீ. தொலைவிலேயே உள்ளது.

    தென்கொரியா, இங்கிலாந்து, கனடா நாடுகளை சேர்ந்த வல்லுனர்கள்தான் இந்த கப்பலை இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் இந்த கப்பலை 2 நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி படம் எடுத்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    அந்தப் படங்களில் இருந்து இந்த போர்க்கப்பல் பெரிதும் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    அதில் வைக்கப்பட்டு இருந்த தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் இப்போதும் இருப்பது கண்டறியப்பட்டால் பாதி அளவு ரஷியாவுக்கு வழங்கப்படும் எனவும், அதைப் பயன்படுத்தி வடகொரியா வழியாக தென்கொரியாவை ரஷியாவுடன் இணைக்கும் ரெயில்வே திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கோரப்படும் என தெரியவந்து உள்ளது.

    10 சதவீதம், போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள உள்ளேஉங்டோ தீவின் சுற்றுலா திட்டங்களுக்காக செலவிடப்படும்; அந்தக் கப்பலுக்காக ஒரு அருங்காட்சியகமும் நிறுவப்படும் என கூறப்படுகிறது.

    ஆனால் கிரெம்ளினில் உள்ள ரஷிய அதிகாரிகள், இந்தக் கப்பலில் தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் இருந்தால், அவற்றை மொத்தமாக தங்களிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.  #SunkenRussian #Warship  #tamilnews
    ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர். #AfghanAttack #AfghanTalibanKilled #AfghanCeasefire
    காந்தகார்:

    ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்து உள்ளார். தலீபான்களும் முதல் முறையாக 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள். இது ஆப்கானிஸ்தான் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த நிலையில், அங்கு காந்தகார் மாகாணத்தில், அர்பான்தாப் மாவட்டத்தில் நேஹ்கான் பகுதியில் அமைந்து உள்ள சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர்.

    அதிகாலை நேரத்தில் நடந்த இந்த தாக்குதலை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சுதாரிப்பதற்கு முன் பயங்கரவாதிகள், குருவிகளை சுடுவது போல அவர்களை சுட்டு வீழ்த்தி விட்டு தப்பினர்.இந்த தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர்.

    இந்த தாக்குதலை தலீபான் கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை காந்தகார் போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால் அது தொடர்பான கூடுதல் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

    இதேபோன்று கடந்த வெள்ளிக்கிழமை ஹெராட் மாகாணத்தில் ஷின்டான்ட் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 17 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.  #AfghanAttack #AfghanTalibanKilled #AfghanCeasefire
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டியில் பலியான 6 பேரின் உறவினர்கள் வராத காரணத்தால் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் பலியான 13 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சென்னை ஐகோர்ட்டில் 3 வக்கீல்கள் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

    அதன்படி பலியான 13 பேரின் உடல்களை மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலேயே அனைத்து உடல்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்படும் இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

    நேற்று முன்தினம் வரை 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மற்ற 6 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த 6 பேரின் உறவினர்கள் யாரும் வராததால் அந்த உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இன்றும் அந்த 6 பேரின் உறவினர்கள் வராத காரணத்தால் அந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. #Thoothukudifiring
    ×