என் மலர்
அமெரிக்கா
- தாக்குதலின்போது வான்ஸ் குடும்பத்தினர் வீட்டில் இல்லை
- சம்பவம் குறித்து வான்ஸோ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் ஓஹியோ இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் உள்ள ஜே.டி.வான்ஸின் வீட்டில் நள்ளிரவில் நடந்த தாக்குதலின் போது வான்ஸ் குடும்பத்தினர் வீட்டில் இல்லை என்றும், மர்ம நபர்கள் யாரும் வீட்டின் உள்ளே நுழையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல் ஜே.டி. வான்ஸ் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிரான இலக்கு தாக்குதலா என்பதை புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வான்ஸோ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நள்ளிரவில் வீட்டில் ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும், ஒரு நபர் ஜன்னலை சுத்தியலால் உடைத்து வீட்டிற்குள் நுழைய முயன்றதை ரகசிய சேவை அதிகாரிகள் கண்டறிந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டு சென்ற மறுநாள் ரஷியா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது.
- ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ் குற்றம்சாட்டி இருந்தார்.
கடந்த வாரம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லம் மீது ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. நோவ்கோ பிராட் பிராதியத்தில் உள்ள புதினின் அரசு இல்லத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதை பாதுகாப்பு படைகள் முறியடித்ததாகவும் ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தநிலையில் உக்ரைன் டிரோன் தாக்குதலில் புதினின் இல்லத்தை குறி வைக்கவில்லை என்று ரஷியாவின் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான ஏர்போர்ஸ் விமானத்தில் அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:-
ரஷிய அதிபர் புதினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தவில்லை என்பதை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அங்கு தாக்குதல் நடந்ததாக நான் நம்பவில்லை. அன்றைய தினம் ரஷிய அதிபருடன் தொலைபேசியில் பேசினேன். புதினும் இந்த விஷயத்தை எழுப்பினார். இந்த குற்றச்சாட்டால் நான் மிகவும் கோபம் அடைந்தேன்.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
20 அம்ச திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டு சென்ற மறுநாள் ரஷியா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது.
இது சமாதான முயற்சிகளை பலவீனப்படுத்தும் மாஸ்கோவின் முயற்சி தவிர வேறொன்றுமில்லை என்று ஐரோப்பிய அதிகாரிகள் வாதிட்ட பிறகு அமெரிக்காவின் இந்த முடிவை டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
- பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார்.
- நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும்.
மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரஷியா விடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை மேலும் அதிகரிப் போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டிரம்ப், "பிரதமர் மோடி ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று எனக்கு உறுதியளித்தார். இந்திய இறக்குமதிகள் மீதான 50 சதவீத வரிகள் அமலுக்கு வந்த சில வாரங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்க மாட்டோம் என்று என்னிடம் மோடி கூறினார். ஆனால் இந்தியா தொடர்ந்து எண்ணை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறது. ரஷியாவின் எண்ணெய் பிரச்சினையில் உதவா விட்டால், இந்தியா மீது நாங்கள் மேலும் வரிகளை உயர்த்து வோம்" என்று கூறினார்.
மேலும், "பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும், இந்தியா என்னை மகிழ்ச்சியடைய செய்வது முக்கியம்" என மிரட்டும் தொனியில் டிரம்ப் பேசியுள்ளார்.
ரஷியாவிடமிருந்து எண்ணை வாங்க மாட்டோம் என்று பிரதமர் மோடி டிரம்பிடம் கூறவில்லை என்றும் டிரம்ப்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் அத்தகைய உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்றும் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் டிரம்ப்பின் இந்த பேச்சு இரு நாடுகளுக்கும் இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் நடவடிக்கை.
- நியூயார்க் நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டு மக்களையும் இது நேரடியாகப் பாதிக்கும்.
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் துணை அதிபரை, தற்காலிக அதிபராக நியமித்து வெனிசுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ரஷியா, ஈரான், சீனா உள்ளிட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மதுரோவும் அவரது மனைவியும் நியூ யார்க் அழைத்து வரப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், அவர்கள் மீது பயங்கரவாத போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டு விசாரணை நடைபெறும் என்று அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்தது. மதுரோ நியூ யார்க் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தான் டிரம்ப் இடம் நேரடியாக தொடர்புகொண்டு தான் பேசியதாக மாம்தானி பேட்டியில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் நடவடிக்கை. இது அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டங்களுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது.
இந்தத் தாக்குதல் வெளிநாடுகளில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது, நியூயார்க் நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டு மக்களையும் இது நேரடியாகப் பாதிக்கும்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது நிர்வாகத்தின் முக்கிய நோக்கம் " என்று தெரிவித்தார்.
- புதிய அரசு அமையும்வரை வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றார் டிரம்ப் .
- ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.
வாஷிங்டன்:
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.
இதற்கிடையே, வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் வெனிசுலா அதிபர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- இதற்குப் பின்னால் ராகுல் காந்தியின் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
2020 பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 53 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை காயமடைந்தனர்.
தனது பேச்சுக்கள் மூலம் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 செப்டம்பர் முதல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் சமூக ஆர்வலருமான உமர் காலித், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் மனு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.
இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி மூத்த உறுப்பினர்களான ஜிம் மெகவர்ன் மற்றும் ஜேமி ரஸ்கின் தலைமையில், பிரமிளா ஜெயபால், ரஷீதா த்லைப் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ராவிற்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உமர் காலித் விசாரணை ஏதுமின்றி 5 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு எதிரானது.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே என்ற விதியின்படி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்.
விசாரணையைத் தாமதப்படுத்தாமல், சர்வதேசச் சட்டங்களின்படி வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க எம்.பி.க்களும் குரல் கொடுத்துள்ளனர்.
அமெரிக்க எம்.பி.க்களின் இந்தத் தலையீட்டிற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்றும், இதற்குப் பின்னால் ராகுல் காந்தியின் தொடர்பு இருப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
சிஏஏ
2019 இல் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கிறது.
ஆனால், குடியுரிமை வழங்குவதில் இருந்து முஸ்லிம்களை விலக்குவதால், இது பாகுபாடு காட்டுவதாகவும், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்பட்டது.
இது நாடு முழுவதும் பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களை போல குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஹெலிகாப்டர் டெலிகிராப் கேன்யனில் உள்ள மலைப்பகுதியில் மோதி விழுந்து நொறுங்கியது.
- ஹெலிகாப்டரில் பயணித்த 3 பெண்கள், விமானி பலியானார்கள்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் குயின் கிரீக் நகரில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அதில் 4 பேர் பயணம் செய்தனர்.
அந்த ஹெலிகாப்டர் டெலிகிராப் கேன்யனில் உள்ள மலைப்பகுதியில் மோதி விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 3 பெண்கள், விமானி பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரணை நடத்தி வருகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்க தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
- ஓவியத்தின் தொடக்க விலை ரூ.8.5 லட்சமாக இருந்தது.
- மேடையிலேயே இசைக்கு ஏற்ப நடனமாடியபடி இயேசுவின் உருவப்படத்தை வரைந்தார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டொனால்ட் டிரம்ப்பிற்கு சொந்தமான 'மார்-ஏ-லாகோ' (Mar-a-Lago) இல்லத்தில் ஒரு தொண்டு நிறுவன ஏல நிகழ்ச்சி நடைபெற்றது.
வெனெசா ஹோரபியூனா என்ற பிரபல கிறிஸ்தவ ஆன்மீக ஓவியர், மேடையிலேயே இசைக்கு ஏற்ப நடனமாடியபடி இயேசுவின் உருவப்படத்தை வரைந்தார்.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் ஏலத்தில் இயேசு ஓவியத்தை சுமார் ரூ.23 கோடிக்கு விற்றார்.
டிரம்ப் அந்த ஓவியத்தில் தனது கையெழுத்தைப் போட்ட பிறகு, அதன் மதிப்பு உயர்ந்து இறுதியில் $2.75 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு சுமார் ₹23 கோடி ஆகும்.
வெனெசா ஹோரபியூனா என்ற ஓவியர் வரைந்த இந்த ஓவியத்தின் தொடக்க விலை ரூ.8.5 லட்சமாக இருந்தது.
இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை முழுவதையும் டிரம்ப் St. Jude's குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஒரு உள்ளூர் ஷெரிப் அலுவலகத்தின் தொண்டு பணிகளுக்காக வழங்கப்பட்டது.
- சிட்டி ஹால் கட்டிடத்திற்கு அடியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத பழைய சப்வே ரெயில் நிலையத்தில் பதவியேற்றார்.
- டிரம்ப் இவரை 'கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்' என்றும் இவருக்கு வாக்களித்தால் நியூ யார்க் நகருக்கான நிதியை நிறுத்துவேன் எனவும் தெரிவித்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சித் தலைவரான 34 வயது ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கின் மேயராக இன்று பதவியேற்றார்.
நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.
புத்தாண்டு நாளான இன்று அதிகாலை (அமெரிக்க நேரப்படி), நியூயார்க் சிட்டி ஹால் கட்டிடத்திற்கு அடியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய சப்வே ரெயில் நிலையத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்தப் பதவியேற்பு விழாவின் போது அவர் அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திருக்குர்ஆன் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
நியூயார்க் மாநில அட்டர்னி ஜெனரல் லெட்டிட்டியா ஜேம்ஸ் இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
"இது எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்" என்று பதவியேற்ற பிறகு மம்தானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மம்தானி நியூயார்க் மேயராகப் பணியாற்றுவார்.
தேர்தலின்போது டிரம்ப் இவரை 'கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்' என்றும் இவருக்கு வாக்களித்தால் நியூ யார்க் நகருக்கான நிதியை நிறுத்துவேன் எனவும் மக்களை மிரட்டி இருந்தார்.
ஆனால் டிரம்ப் உடைய மிரட்டலை புறக்கணித்து நியூ யார்க் மக்கள் மம்தானியை தங்கள் தலைவராக தேர்வு செய்தனர்.
- அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது என ரஷியா குற்றம்சாட்டியது.
- இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார்.
வாஷிங்டன்:
ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது என ரஷியாவின் வெளியுறவு மந்திரி குற்றம் சாட்டினார்.
இச்சம்பவம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார். இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் மீது அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்து உள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-
ரஷிய அதிபர் புதின் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரது வீடு மீது தாக்குதல் நடந்ததாகக் கூறினார். இதனால் நான் மிகவும் கோபம் அடைந்தேன்.
ஒரு நாட்டின் தலைவரின் வசிப்பிடத்தைத் தாக்குவது தவறு. இதுபோன்ற செயல்களுக்கு இது சரியான நேரம் அல்ல.
எனினும் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதை மீறி தாக்குதல் நடந்து இருந்தால் அது மிகவும் மோசமான விஷயம். தாக்குதல் நடத்ததா என்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடிப்போம்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் எங்களுக்கு சில மிகவும் சிக்கலான பிரச்சனைகள் உள்ளன என தெரிவித்தார்.
உக்ரைன் ரஷியா இடையிலான போர் நிறுத்த முயற்சிகளுக்கு இந்தக் குற்றச்சாட்டு பெரும் முட்டுக்கட்டையாகக் கருதப்படுகிறது.
- தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர்.
- இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் சுற்றுலா சென்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த சாலை விபத்தில், 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் மேக்னா ராணி (24) மற்றும் கடியால பாவனா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர். இருவரும் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் அமெரிக்காவிலேயே வேலை தேடி வந்தனர்.
இந்நிலையில், இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் நேற்று முன் தினம் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர்.
சுற்றுலாவை முடித்து காரில் திரும்பியபோது மலைப்பாங்கான பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ராணி, புவனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ராணி, புவனாவின் உடல்களை விரைந்து இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புளோரிடாவில் அதிபர் டிரம்பை சந்தித்தார்.
- அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார்.
வாஷிங்டன்:
ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 20 அம்சங்கள் அடங்கிய திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்- அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, புளோரிடாவில் டிசம்பர் 28 அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க இருப்பதாகவும், இந்தச் சந்திப்பின்போது உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புளோரிடாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். அப்போது இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக, அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.






