என் மலர்tooltip icon

    உலகம்

    • கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • வேகமாக காரை ஓட்டி வந்த மர்ம நபர் அங்கிருந்த மக்கள் மீது இடித்து தாக்குதல் நடத்தினார்.

    பெர்லின்:

    ஜெர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மக்டேபர்க் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் அதிகமாக கூடியிருந்த கூட்டத்திற்குள் மர்ம நபர் ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்தார். அங்கிருந்த மக்கள் மீது இடித்து தாக்குதல் நடத்தினார்.

    இதில் பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என முதல் கட்ட தகவல் வெளியானது.

    கார் தாக்குதலை அடுத்து மார்க்கெட் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. பாதுகாப்புப் படையினர் அப்பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து விசாரணை நடந்துவருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

    கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் கூட்டத்துக்குள் கார் புகுந்து தாக்குதல் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.
    • டிரம்ப் ஜனவரி 12-ம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

    வாஷிங்டன்:

    சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். டிரம்ப் ஜனவரி 12-ம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் இத்தாலி செல்கிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா, பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோரை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதி வரை ரோம் நகருக்குச் செல்கிறார்.

    அதிபர் ஜோ பைடன் ஜனவரி 10-ம் தேதி அன்று போப் பிரான்சிசை சந்திக்கிறார். அப்போது உலகம் முழுவதும் அமைதியை முன்னேற்றுவதற்கான முயற்சிகளைப் பற்றி விவாதிப்பார் என தெரிவித்துள்ளது.

    ஜனவரி 12-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் அதிபர் ஜோ பைடன் செல்லும் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இது இருக்கலாம் என தெரிகிறது.

    • அமெரிக்காவிடம் இருந்த கச்சா எண்ணெய், கியாஸ் வாங்க வேண்டும் என வலியுறுத்தல்.
    • நேட்டோவிற்கு கூடுதலாக வழங்கும் நிதியை நிறுத்துவிடுவோம்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். தற்போது ஒவ்வொரு துறைகளுக்கும் அதிகாரிகளையும், கேபினட் மந்திரிகளையும் நியமித்து வருகிறார்.

    அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவது என்பதில் உறுதி பூண்டுள்ளார். இதனால் வர்த்தகம் தொடர்பான வரிவிதிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

    கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா உடனான மிகப்பெரிய வர்த்தக இடைவெளியை குறைக்கவில்லை எனில், மிகப்பெரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவிடம் இருந்து கியாஸ், கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

    கடந்த முறை அதிபராக தேர்வானபோது, நீண்ட காலமாக ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவின் முதுகில் பயணம் செய்கிறது. நாங்களும் அதை அனுமதித்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தார்.

    ஆனால் இந்த முறை நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா வழங்கும் அனைத்து கூடுதல் நிதிகளையும் நிறுத்துவிடுவோம், ஐரோப்பிய யூனியன் மிகப்பெரிய அளவில் பங்களிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    2022 அமெரிக்காவின் தரவுகளின்படி, ஐரோப்பிய யூனியன் உடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 202.5 பில்லியனாக இருந்துள்ளது. அமெரிக்கா ஐரோப்பிய யூனியனில் இருந்து 553.3 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதேவேளையில் ஐரோப்பிய யூனியன் 350.8 பில்லியன் அளவிற்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

    இந்த வர்த்தக ஏற்றத்தாழ்வை விரைவாக சரிசெய்ய டிரம்ப் விரும்புகிறார். அவரது அச்சுறுத்தும் அணுகுமுறை அதைச் செய்வதற்கான சிறந்த வழியாக இல்லாவிட்டாலும், அது "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க" உதவும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அகராதியில் அவருக்கு மிகவும் பிடித்த வார்த்தை வரிகள் என்று அவர் கூறுகிறார்.

    தென் அமெரிக்காவின் நான்கு முக்கிய நாடுகளான பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகியவற்றுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், ஐரோப்பா ஏற்கனவே அமெரிக்காவை தாண்டி தங்களது விருப்பங்களை தேடத் தொடங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும்.

    • கடந்த காலங்களில் 2 முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டது
    • இந்த தேடுதலுக்கு மலேசிய அரசு அந்நிறுவனத்துக்கு நிதியாக $70 மில்லியன் வழங்க உள்ளது.

    மார்ச் 8, 2014 : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட 777 வடிவமைப்பு கொண்ட MH370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வியட்நாம் வான் பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வேறு திசையில் திரும்பியது. கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்துக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் செயலிழந்தன.

     

    MH370 மர்மம்

    மீண்டும் மலேசிய வான் பரப்புக்குள் திரும்பிய விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மாயமாக மறைந்தது. எரிபொருள் தீரும்வரை பயணித்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது, இதுவரை கிடைத்த சாட்டிலைட் தரவுகளை ஆராய்ந்து பார்த்தால், MH370 விமானமானது இந்தியப் பெருங்கடலின் தெற்கே, ஆஸ்திரேலியாவின் வடக்குக் கரையை ஒட்டிய பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கும் என்று நம்பப்படுகிறது.

    ஆனால் கடந்த காலங்களில் 2 முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்தன. இதுநாள் வரை விமானத்துக்கும் அதில் இருந்தவர்களும் என்ன ஆனது என்பது மர்மமாகவே இருந்து வந்தது. MH370 விமானத்துக்கு என்ன நடந்திருக்கும் என்ற பலவாறாக யூகங்கள் கான்சபைரஸி தியரிக்கள் கூறப்பட்டு வருகிறன.

     

    மீண்டும் தேடல் 

    இந்நிலையில் காணாமல் போன MH370 விமானத்தின் சிதைந்த பகுதிகளைத் தேடும் பணியை மீண்டும் தொடங்க மலேசியா திட்டமிட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.

    கடல்சார் ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்பினிட்டியின் புதிய தேடுதல் நடவடிக்கைக்கு மலேசியா ஒப்புக்கொண்டதாக அந்தோனி லோக் கூறினார். அமெரிக்காவை தளமாக கொண்ட இதே நிறுவனம் 2018 இல் நடத்திய தேடுதல் வேட்டை தோல்வியில் முடிந்தது.

    இந்நிலையில் தெற்கு இந்தியப் பெருங்கடலின் இதற்கு முன் தேடுதல் நடத்தாத புதிய 15,000 சதுர கிலோமீட்டர் (5,800 சதுர மைல்) பகுதியில் தேடுதல் நடந்த இந்த நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த தேடுதலுக்கு மலேசிய அரசு அந்நிறுவனத்துக்கு நிதியாக $70 மில்லியன் வழங்க உள்ளது.

    புதிய தேடல் பகுதியில் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகளின் தரவுகளை ஓஷன் இன்ஃபினிட்டி அரசிடம் சமர்பித்திருந்த நிலையில் தற்போது இந்த தேடுதல் பணிக்கு ஒப்புதல் வழங்கும் வழங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    குறிப்பிட்ட இந்த கடல் பகுதியில் தேடுவதற்கு ஏற்ற நேரம் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்டதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதால் ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யும் பணிகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.

    • அரசு அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார்
    • டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.

    இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானி, மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய  அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    இது அரசியளிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

     

    இந்நிலையில் நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் அதானி வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரியோன் பீஸ் [breon peace] [53 வயது] தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

    அதானி விவகாரத்தில் இந்தியா சார்பில் அமெரிக்க நீதித்துறைக்கு அழுத்தம் இருந்து வந்த நிலையில் டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.

    கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த மாதம் பதவி ஏற்கிறார்.

     

    இந்நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட நீதிபதி அதுவும் அதானி வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளை கையாண்ட நீதிபதி திடீர் பதவி விலகலை அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. 2021 முதல் அவர் நியூயார்க்கில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார். 

    • பாஷை புரியாமல் ரஷிய வீரர்களை வடகொரிய வீரர்கள் தவறாக சுட்டுக்கொன்றனர்.
    • குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது.

    உக்ரைன் - ரஷியா பிரச்சனை 

    ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது.

     

    மேற்கு நாடுகள் vs ரஷியா 

    இந்த போர் இரண்டு ஆண்டுகளை கடந்ததும் எந்த தீர்வும் எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு நாடுகள் பண பலம், ஆயுத பலம், ராணுவ பலத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறது.

     நேட்டோ நாடுகளுடன் உக்ரைனை சேர்த்துக்கொள்வதே போருக்கு தீர்வு என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

     மறுபுறம் உக்ரைனுக்கு உதவுவது ரஷியாவை நேரடியாக மேற்கு நாடுகள் எதிர்ப்பதாகவே பொருள்படும் என ரஷிய அதிபர் புதின் மிரட்டல் விடுத்து வருகிறார்.

     

    போர்  

    போர் தொடங்கியதிலிருந்து 43,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஜெலன்ஸ்கி இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும்6.5 லட்சம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    கடந்த 2 வருடங்களில் போரில் ரஷியாவின் கைகளே ஓங்கி இருந்த நிலையில் இந்த வருடம் உக்ரைன் தற்காத்துக் கொள்வதோடு நிறுத்திவிடாமல் ரஷிய பகுதிகளின் மேல் தாக்குதல்களை நடத்தியது இந்த 2 வருட போரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது. கடந்த ஏப்ரல் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உக்ரைன் மீது டிரோன் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது.

     

    உக்ரைனின் மின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட தளங்களைக் குறிவைக்க ரஷியா தலைப்பட்டது. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி ரஷியா சென்றிருந்த சமயத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் -இல் நாட்டிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

     

    மாறிய காட்சி 

    இந்த தடுமாற்றங்களுக்கு இடையில் உக்ரைன் படைகள் யாரும் எதிர்பாராத விதமாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல்முறையாக ரஷியாவுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தின. இந்த எதிர்பாராத தாக்குதலில் ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதி உக்ரைன் படைகள் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. 200,000 ரஷிய மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

    இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷிய மண்ணில் வெளிநாட்டுப் படைகள் முன்னெடுத்த மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் இறுதியில் ரஷியாவில் 100 குடியேற்றப் பகுதிகளைக் கைப்பற்றி 600 ரஷிய வீரர்களை கைது செய்ததாக உக்ரைன் கூறியது. எல்லையில் ரஷியா முன்னேறாமல் இருக்கவே அந்த பிராந்தியங்களைக் கைப்பற்றியதாக உக்ரைன் தெரிவித்தது.  

     

    பதிலடியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி 2 கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்வதேச கவனம் பெற்றன. எனவே ரஷியாவுக்கு சவாலாக உக்ரைன் போர் மாறியது. அன்று முதலே இரு தரப்பும் ஒரே பலத்துடன் போரிட்டு வருகிறது.

    வடகொரிய நட்பு 

    இந்த நிலையில் போரின் முக்கிய திருப்பமாக ரஷியாவுக்கு வட கொரியாவின் நட்புறவு கிடைத்தது. இரு நாட்டு தலைவர்களும் தத்தமது நாட்டுக்கு ஒருவரை ஒருவர் அழைத்து உபசரித்துப் பாதுகாப்பு உதவிகளைப் பரிமாற்றம் செய்துகொள்ள ஒப்பந்தம் இட்டனர்.

    உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்த நிலையில் வட கொரியா, சீனா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நட்பை புதின் அதிகம் நாடினார்.

     

    கடந்த அக்டோபரில் போரில் ரஷியாவுடன் 12 வட கொரிய வீரர்களும் இணைந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார்.

    சமீபத்தில் பாஷை புரியாமல் ரஷிய வீரர்கள் சிலரை வடகொரிய வீரர்கள் தவறாக சுட்டுக்கொன்ற சம்பவமும் நிகழ்ந்தது.

    திடீர் அனுமதி  முன்னதாக நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் ஜோ பைடன் நிர்வாகம் அவசர அவசரமாக ஒரு விஷயத்தை செய்தது போரின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

    அமெரிக்கா தான் வழங்கியிருந்த ATACMS [பால்சிடிக் ஏவுகணைகளை] கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு முதல் முறையாக அனுமதி கொடுத்தது.

     

    சற்றும் தாமதிக்காத உக்ரைன் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி அதாவது போர் தொடங்கி 1000 வது நாளில் ரஷியாவின் பிரையன்ஸ்க் பகுதி ராணுவ தளங்களை குறிவைத்து பால்சிடிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சேதங்கள் ஏற்படவில்லை என்றாலும் ரஷியாவை இது மேலும் சீண்டியது.

     

    அதே நாளில் 120 ஏவுகணைகள், 90 டிரோன்கள் மூலம் உக்ரைன் மின் உற்பத்தியை சீர்குழைக்க ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியது. மேலும் ரஷிய அணு ஆயுத கொள்கைகளில் புதின் மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

    அணு ஆயுத கொள்கை

    இந்த கொள்கைப்படி, அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு, ரஷியாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.

    இதன்மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளை தங்களின் நேரடி எதிரியாக அறிவித்து அவர்கள் மீது அணு ஆயுத தாக்குதலுக்கு புதின் எந்த நேரமும் உத்தரவிடக் கூடும் என்ற பதற்றமும் நிலவுகிறது. 

     

    இகோர் கிரில்லோவ் கொலை  

     இதற்கிடையே கடந்த செய்வ்வாய்கிழமை ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த குண்டுவெடிப்பில் ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கிய இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார்.

    குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதில் இகோரும் அவரது உதவியாளரும் உயிரிழந்தனர்.

     

     

    இதற்கு பழிவாங்க ரஷியா சூளுரைத்துள்ள நிலையில் நிலைமையில் டிரம்ப் சொன்ன கருத்தால் திடீர் மாற்றமும் ஏற்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது பைத்தியக்காரத்தனம் என்று அடுத்த மாதம் அதிபர் பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப் கூறினார்.

    இதன் எதிரொலியாக உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் உடன் பேச தயாராக உள்ளேன் என அதிபர் புதின் கூறியதாக ரஷிய அதிபர் மாளிகை வட்டாரங்களில் இருந்து நேற்று தகவல் வந்திருக்கிறது.

    • 1971-ம் ஆண்டின் மீதமுள்ள பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கின்றன.
    • நாம் முன்னேறிச் செல்ல அந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வோம்.

    பாகிஸ்தானும், வங்கதேசமும் ஒரே நாடுகளாக இருந்தன. 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. வங்கதேசம் தனி நாடாக பிரிவதற்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தி முக்கிய காரணியாக இருந்தார். அதில் இருந்து இந்தியா- வங்கதேசம் இடையிலான உறவு சுமூகமாக இருந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அதன்பின் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட மைனாரிட்டிகள் தாக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் இருந்து இந்தியா- வங்கதேச இடையிலான உறவில் சற்று விரிசல் விழுந்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸின் சில முடிவுகள் இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-ஐ வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் சந்தித்து பேசியுள்ளார். எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் பொருளாதார ஒத்துழைபுக்காக முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக உள்ள 8 நாடுகள் கலந்த கொணட மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டின்போது இருவரும் தனியாக சந்தித்துள்ளனர். அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் பாகிஸ்தானுடன் உறவுகளை வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாக முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது, மீதமுள்ள பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள விரும்பவதாகவும் ஷெரிப்பிடம் தெரிவித்துள்ளார்.

    அந்த பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கின்றன. நாம் முன்னேறிச் செல்ல அந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வோம் என முகமது யூனுஸ் தெரிவித்ததாக, அவரது அலுவலகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

    முகமது யூனுஸ் உடன் அன்பான பரிமாற்றம் இருந்ததாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஒன்றாக, இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம் என ஷெபாஸ் ஷெரீப் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா- வங்கதேசம் இடையிலான உறவு ஏற்கனவே உறைபனியாக உறைந்துள்ள நிலையில் இருவருடைய இந்தியா- வங்கதேச உறவை மேலும் சோதனைக்குள்ளாக்கியுள்ளது.

    • கிரிப்டோகரன்சி பிட்காயின் துறையில் பிரதானமாக விளங்குவது ஜப்பானில் இயங்கும் பைனான்ஸ் [Binance] நிறுவனம்
    • பிளாக்செயின் துறையில் இயங்கும் 5ireChain என்ற நிறுவனத்தின் நிறுவனர் பிரதிக் கௌரி

    கிரிப்டோகரன்சி பிட்காயின் துறையில் பிரதானமாக விளங்குவது ஜப்பானில் இயங்கும் பைனான்ஸ் [Binance] நிறுவனம். இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் சீனாவை சேர்ந்த சாங்பெங் சாவோ [Changpeng Zhao].

    பிளாக்செயின் துறையில் இயங்கும் 5ireChain என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி [CEO] ஆக இருப்பவர் இந்தியாவை சேர்ந்த  . இவர்கள் இருவரும் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்போது செல்பி எடுத்துள்ளனர்.

    அதை பிரதிக் கௌரியின் 5ireChain நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இதை பார்த்த சாங்பெங் சாவோ, அனுமதி இல்லாமல் தனது புகைடபத்தை பகிர்ந்துகொண்டதற்காகப் பிரதிக் கௌரியை கடிந்துகொண்டார்.

    என்னுடன் எடுத்த செல்பியை எப்படி உபயோகப்படுத்தக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம், நாங்கள் பேசிக்கொள்ளக் கூட இல்லை, நிகழ்ச்சியில் வெறும் செல்பி மட்டும்தான் எடுத்துக்கொண்டோம் என்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறினார்.

    இதனையடுத்து அந்த இடுக்கையை 5ireChain நிறுவனம் நீக்கி, எங்கள் நிறுவனர் & CEO பிரதிக் கௌரி மற்றும் Changpeng Zhao ஆகியோருக்கு இடையே எந்த ஒத்துழைப்பு அல்லது வணிக கூட்டணியையும் குறிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

    • வருடாந்திர ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் புதின் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
    • கள் யாரோடு நீங்கள் ஒரு கோப்பை தேநீர் அருந்த விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

    வலிமையான உலக தலைவர்களில் ஒருவராக ரஷிய அதிபர் புதின் கருதப்படுகிறார். இந்த வருடம் முடிவுக்கு வர இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் வழக்கப்படி வருடாந்திர ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் புதின் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

    அப்போது வாழும் அல்லது உயிரிழந்த உலக தலைவர்கள் யாரோடு நீங்கள் ஒரு கோப்பை தேநீர் அருந்த விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

     

    இதற்கு பதில் அளித்த புதின், முன்னாள் ஜெர்மன் அதிபர் ஹெல்முட் கோல், முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக் மற்றும் இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகிய மறைந்த தலைவர்களுடன் தேநீர் அருந்த விரும்புவதாக புதின் தெரிவித்தார்.

    மேலும் முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக் -யிடம் இருந்து தான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாக புதின் அவரை நினைவு கூர்ந்தார்.

     

    தொடர்ந்து பேசிய புதின் ஆசியாவில், சீனா மற்றும் இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ளதாக தெரிவித்தார் . இந்திய பிரதமருடன் எனக்கு மிகவும் அன்பான உறவு உள்ளது என்றும் புதின் குறிப்பிட்டார்.

    • வரும் ஜனவரி மாதத்தில் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
    • அமெரிக்கா விரும்பினால் தொடர்பை தொடருவோம் என புதின் தெரிவித்தார்.

    மாஸ்கோ:

    சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    கடந்த 2016 முதல் 2020 வரை டிரம்ப் அதிபராக இருந்தபோது சர்வதேச அரசியல் சூழலில் இணக்கத்தைப் பேணி வந்தார். வரும் ஜனவரி மாதத்தில் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

    இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மற்றும் உக்ரைன்-ரஷியா போர் ஆகியவை டிரம்ப் முன் இருக்கும் பெரிய சவால்கள். அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்புகொண்டு பேசினார். மேலும், ரஷிய அதிபர் புதினுடனும் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது,, உக்ரைன் போரை நிறுத்துவதற்கான தீர்வு குறித்து பேசப்பட்டதாக செய்தி வெளியானது.

    டிரம்ப் அதிபரானதற்கு வாழ்த்து தெரிவித்த புதின், அமெரிக்கா விரும்பினால் தொடர்பை தொடருவோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள தயார் என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

    அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என அதிபர் புதின் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மத்திய ஆப்கானிஸ்தானில் இரு வேறு சாலை விபத்துகள் நடந்தன.
    • இந்த சாலை விபத்துகளில் மொத்தம் 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காபூல்:

    மத்திய ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் மொத்தம் 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காபூல்-காந்தகார் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு பயணிகள் பேருந்துடன், எண்ணெய் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதியது.

    இதே நெடுஞ்சாலையின் மற்றொரு இடத்தில் பயணிகள் பேருந்தும், சரக்கு லாரியும் மோதிக்கொண்டன.

    இந்த இரு விபத்துகளிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 52 பேர் பலியாகினர். மேலும் 76 பேர் காயம் அடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பலர் காபூல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என கஜினி மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் உமர் தெரிவித்தார்.

    ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் டிரைவர்களின் கவனக்குறைவு காரணமாக விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 6203 கோடி ரூபாய்க்கு 14,131.60 அளிக்கப்பட்டும், இன்னும் நான் பொருளாதார குற்றவாளிதான்- விஜய் மல்லையா.
    • இது கடந்து போகும் மை டியர் நண்பர் விஜய் மல்லையா. என்னுடைய நணபருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- லலித் மோடி.

    இந்திய தொழில் அதிபரான விஜய் மல்லையா வங்கியில் பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு தொடர்ந்த நிலையில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.

    அதேபோல் நிதிமோசடி செய்த வழக்கில் கிரிக்கெட் நிர்வாகத்தில் கொடிகட்டி பறந்த லலித் மோடியும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார்.

    இந்த நிலையில் விஜய் மல்லையாவுக்கு லலித் மோடி, எக்ஸ் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதில் "என்னுடைய நண்பர் விஜய் மல்லையாவுக்கு என்னுடைய இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க்கையில் உறுதியாக ஏற்றம் தாழ்வு இருக்கும். நாம் இருவரும் அதை பார்த்துள்ளொம். இதுவும் கடந்து போகும். வரக்கூடிய வருடம் உங்களுக்கானதாக இருக்கலாம். நீங்கள் அன்பு மற்றும் சிரிப்பால் சூழ்ந்திருக்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதற்கு விஜய் மல்லையா "நன்றி அன்பான நண்பரே... நாம், பங்களிப்பை வழங்க முயற்சி செய்த நாட்டில் நம் இருவருக்கும் அநீதி இழைக்கப்பட்டள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், மல்லையா "கடன் மீட்பு தீர்ப்பாயம் KFA கடனை ரூ.1200 கோடி வட்டி உட்பட ரூ.6203 கோடியாக தீர்ப்பளித்தது. நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட என்னுடைய சொத்துகளை விற்பனை செய்து வங்கிகளுக்கு 14,131.60 கோடி ரூபாய் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

    6203 கோடி ரூபாய்க்கு 14,131.60 அளிக்கப்பட்டும், இன்னும் நான் பொருளாதார குற்றவாளிதான். என்னுடைய கடனுக்காக இரண்டு மடங்கிற்கு மேல் பணத்தை எடுத்துக் கொண்டதை அமலாக்கத்துறை அல்லது வங்கி சட்டப்பூர்வமாக நியாயப்படுத்துகிற வரைக்கும், நான் தொடர்ப்போகும் நிவாரணத்திற்கு எனக்கு உரிமை உள்ளது" என மல்லையா தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதில் அளித்த லலித் மோடி "இது கடந்து போகும் மை டியர் நண்பர் விஜய் மல்லையா. என்னுடைய நணபருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

    ×