என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளருக்கு கொரோனா
Byமாலை மலர்22 March 2022 10:53 PM GMT (Updated: 22 March 2022 10:53 PM GMT)
அமெரிக்க அதிபர் ஜே பைடனுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளராக பணியாற்றும் ஜென்சாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரஸ்ஸல்ஸ் நகருக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு ஜென்சாகிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அதிபருடனான தமது பயணத்தை ரத்துச் செய்த ஜென்சாகி, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பைடனுடன் நெருங்கிய தொடர்பில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, ஜே பைடனுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பைடன் மற்றும் சாகி இருவரும் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X