என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் - ஐ.நா.பொதுச் சபையில் இந்தியா உறுதி
Byமாலை மலர்2 March 2022 7:08 PM GMT (Updated: 2 March 2022 7:08 PM GMT)
உக்ரைன்-ரஷியா இடையே உடனடி போர் நிறுத்ததிற்கான சர்வதேச நாடுகளின் அழைப்பை இந்தியா ஆதரிக்கிறது என்று இந்திய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க்:
ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேற்றப் பட்டது. இந்த தீர்மானம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா உள்பட 35 நாடுகள் புறக்கணித்தன.
முன்னதாக தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இந்தியா சார்பில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி, திருமூர்த்தி, உக்ரைனின் கார்கீவ் உள்பட போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து எங்கள் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் வெளியேற பாதுகாப்பான மற்றும் தடையற்ற பாதையை கோருவதாக கூறினார்.
உக்ரைனின் அண்டை நாடுகள் மூலம் இந்தியர்கள் வெளியேற்றுவதற்கு வசதியாக மூத்த அமைச்சர்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் எல்லையைத் திறந்து அனைத்து வசதிகளையும் எங்கள் தூதரகங்களுக்கு வழங்கியதற்காக, அனைத்து அண்டை நாடுகள் மற்றும் உக்ரைனுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம் என்றார்.
உக்ரைனில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலையில் உள்ளதாகவும், நாடுகள் இடையேயான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் மட்டுமே தீர்க்க முடியும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைன்-ரஷியா இடையே உடனடி போர் நிறுத்ததிற்கான சர்வதேச நாடுகளின் அழைப்பை இந்தியா ஆதரிக்கிறது என்றும் திருமூர்த்தி கூறினார்.
இதையும் படியுங்கள்...
இந்தியர்கள் அனைவரும் கார்கிவ் நகரை விட்டு வெளியேற உத்தரவு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X