என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டம் - தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
Byமாலை மலர்19 Aug 2021 6:50 PM GMT (Updated: 19 Aug 2021 6:50 PM GMT)
ஆங்கிலேயர்களிடம் இருந்து கடந்த 1919-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ம் தேதி ஆப்கானிஸ்தான் விடுதலை பெற்றது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் அசாதாபாத் என்ற இடத்தில் அந்நாட்டின் 102-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அங்குள்ள மக்கள் மூவர்ண தேசியக் கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை அசைத்த மக்களைக் குறிவைத்து தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மக்கள் அலறியடித்து ஓடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கினர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
துப்பாக்கிச் சூட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு நடத்தப்பட்ட முதல் துப்பாக்கிச் சூடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X