என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனா வறுமையை முற்றிலும் ஒழித்து விட்டது - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு
Byமாலை மலர்25 Feb 2021 7:29 PM GMT (Updated: 25 Feb 2021 7:29 PM GMT)
சீனா வறுமையை முற்றிலும் ஒழிப்பதில் வெற்றி கண்டு விட்டது என்று அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் அறிவித்துள்ளார்.
பீஜிங்:
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்த நாட்டில் சுமார் 140 கோடிப்பேர் வாழ்கின்றனர்.
அங்கு வறுமை ஒழிப்பில் நாட்டின் சாதனைகளை குறிக்கும் வகையிலும், வறுமை ஒழிப்பில் போராடியவர்களை கவுரவிக்கும் வகையிலும் பீஜிங்கில் ஒரு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சீனாவில் கிராமப்புறங்களில் வாழ்ந்து வந்த அனைத்து ஏழை மக்களும் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். இதன்மூலம் 2030-ம் ஆண்டுக்குள் சீனா வறுமையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை நிர்ணயித்திருந்த காலக்கெடுவை விட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வறுமை ஒழிக்கப்பட்டு விட்டது.
832 வறிய மாவட்டங்களும், 1 லட்சத்து 28 ஆயிரம் வறிய கிராமங்களும் வறுமை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.
1970-களின் பிற்பகுதியில் சீர்திருத்தம் தொடங்கப்பட்டு, திறக்கப்பட்டதில் இருந்து 77 கோடி வறிய கிராமப்புற மக்கள் சீனாவின் தற்போதைய வறுமைக்கோட்டின் கணக்கெடுப்பில், வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என பதிவாகி இருக்கிறது.
இந்த கால கட்டத்தில் உலகளாவிய வறுமை ஒழிப்பில் சீனா 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பை செய்துள்ளது. இந்த சாதனைகள் மூலம் சீனா மற்றொரு அதிசயத்தை உருவாக்கி இருக்கிறது. அது வரலாற்றில் எழுதப்படும்.
நான் சீன அதிபர் பதவிக்கு வந்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் சீனா வறுமை ஒழிப்புக்காக கிட்டத்தட்ட 246 பில்லியன் டாலர் நிதியை (சுமார் ரூ.17 லட்சத்து 95 ஆயிரத்து 800 கோடி) முதலீடு செய்துள்ளது.
உலக வங்கியின் சர்வதேச வறுமைக்கோட்டின்படி, கடந்த 40 ஆண்டுகளில் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்ட சீன மக்களின் எண்ணிக்கை, உலகளாவிய மொத்தத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
வறுமையை ஒழிப்பது கடைசிப்புள்ளி அல்ல. புதிய வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிதான் தொடக்கப்புள்ளி.
சீன கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப்பட்ட காலம் தொட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்டு வந்துள்ளது. 2012-ம் ஆண்டு நான் அதிகாரத்துக்கு வந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடிக்கு மேற்பட்டோர் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 79 லட்சம் வீடுகளில் வாழ்ந்து வந்த 2 கோடியே 56 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாழடைந்துபோன தங்கள் வீடுகளை புதுப்பித்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் வறிய பகுதிகளில் இருந்து 96 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
28 இன சிறுபான்மை குழுக்கள் 2012-ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து மொத்தமாக வறுமையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்.
இந்த ஆண்டுக்குள், கிராமப்புறங்களில் வாழ்க்கையை மேம்படுத்துவது, மிதமான வளமான சமுதாயத்தை கட்டியெழுப்ப வெற்றியை பெறுவதற்கு முக்கியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்த நாட்டில் சுமார் 140 கோடிப்பேர் வாழ்கின்றனர்.
அங்கு வறுமை ஒழிப்பில் நாட்டின் சாதனைகளை குறிக்கும் வகையிலும், வறுமை ஒழிப்பில் போராடியவர்களை கவுரவிக்கும் வகையிலும் பீஜிங்கில் ஒரு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சீனாவில் கிராமப்புறங்களில் வாழ்ந்து வந்த அனைத்து ஏழை மக்களும் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். இதன்மூலம் 2030-ம் ஆண்டுக்குள் சீனா வறுமையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை நிர்ணயித்திருந்த காலக்கெடுவை விட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வறுமை ஒழிக்கப்பட்டு விட்டது.
832 வறிய மாவட்டங்களும், 1 லட்சத்து 28 ஆயிரம் வறிய கிராமங்களும் வறுமை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.
1970-களின் பிற்பகுதியில் சீர்திருத்தம் தொடங்கப்பட்டு, திறக்கப்பட்டதில் இருந்து 77 கோடி வறிய கிராமப்புற மக்கள் சீனாவின் தற்போதைய வறுமைக்கோட்டின் கணக்கெடுப்பில், வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என பதிவாகி இருக்கிறது.
இந்த கால கட்டத்தில் உலகளாவிய வறுமை ஒழிப்பில் சீனா 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பை செய்துள்ளது. இந்த சாதனைகள் மூலம் சீனா மற்றொரு அதிசயத்தை உருவாக்கி இருக்கிறது. அது வரலாற்றில் எழுதப்படும்.
நான் சீன அதிபர் பதவிக்கு வந்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் சீனா வறுமை ஒழிப்புக்காக கிட்டத்தட்ட 246 பில்லியன் டாலர் நிதியை (சுமார் ரூ.17 லட்சத்து 95 ஆயிரத்து 800 கோடி) முதலீடு செய்துள்ளது.
உலக வங்கியின் சர்வதேச வறுமைக்கோட்டின்படி, கடந்த 40 ஆண்டுகளில் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்ட சீன மக்களின் எண்ணிக்கை, உலகளாவிய மொத்தத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
வறுமையை ஒழிப்பது கடைசிப்புள்ளி அல்ல. புதிய வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிதான் தொடக்கப்புள்ளி.
சீன கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப்பட்ட காலம் தொட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்டு வந்துள்ளது. 2012-ம் ஆண்டு நான் அதிகாரத்துக்கு வந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடிக்கு மேற்பட்டோர் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 79 லட்சம் வீடுகளில் வாழ்ந்து வந்த 2 கோடியே 56 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாழடைந்துபோன தங்கள் வீடுகளை புதுப்பித்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் வறிய பகுதிகளில் இருந்து 96 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
28 இன சிறுபான்மை குழுக்கள் 2012-ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து மொத்தமாக வறுமையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்.
இந்த ஆண்டுக்குள், கிராமப்புறங்களில் வாழ்க்கையை மேம்படுத்துவது, மிதமான வளமான சமுதாயத்தை கட்டியெழுப்ப வெற்றியை பெறுவதற்கு முக்கியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X