என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இந்தோனேசியா விமான விபத்து- கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம் தெரிந்தது
ஜகர்தா:
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் இருந்து சென்ற விமானம் சிறிது நேரத்தில் கடலில் நொறுங்கி விழுந்தது. இதில் 62 பயணிகள் உயிரிழந்தனர்.
அந்த விமனத்தின் பாகங்களை கண்டுபிடிக்கும் பணியும், இறந்தவர்கள் உடல்களை மீட்கும் பணியும் நடந்து வந்தது. இதில் 20 ஹெலிகாப்டர்கள், 100 கப்பல் மற்றும் படகுகள், 2,500 மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. விமானத்தில் உள்ள 2 கருப்பு பெட்டிகளில் விமானியின் உரையாடல்கள் மற்றும் விபத்து நடக்கும் போது எழுந்த சத்தம் அனைத்தும் பதிவாகி இருக்கும். அதை மீட்டுவிட்டால் விபத்துக்கான காரணம் தெரிந்து விடும்.
எனவே கருப்பு பெட்டியை தேடும் பணி நடந்து வந்தது. இப்போது கடலில் கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லாங்கங்-லகி தீவுகளுக்கு இடையே உள்ள பகுதியில் கடலுக்கு அடியே 20 மீட்டர் ஆழத்தில் கருப்பு பெட்டி கிடக்கிறது.
அந்த இடத்தில் தான் விமானத்தின் முன்பாகம் உடைந்து விழுந்துள்ளது. கருப்பு பெட்டிகளில் இருந்து தொடர்ந்து சிக்னல் வந்து கொண்டிருக்கிறது. எனவே அதை மீட்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்