search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plane crashed"

    • ஹெலிகாப்டர்களின் உதவியுடன் விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்தனர்.
    • பலியான இரண்டு ராணுவ வீரர்களும் அருகில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.

    பிரான்ஸ் நாட்டின் மலைப்பிரதேசமான வேர் பிராந்தியத்தில் உள்ள கோன்பரோன் கிராமத்தில் நேற்று இலகுரக விமானம் விழுந்து நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விமானம் விழுந்த பகுதியை தேடினர். ஹெலிகாப்டர்களின் உதவியுடன் விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்த, தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விமானத்தில் பயணித்த இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இரண்டு ராணுவ வீரர்களும் அருகில் உள்ள ஹெலிகாப்டர் படைப்பிரிவு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்த வீரர்கள் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

    கென்யா நாட்டின் வடமேற்கு பகுதியில் இன்று நடந்த விமான விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். #planecrash #Foreignersdead
    கெரிசோ:

    கென்யாவின் வடமேற்கு பகுதியில் இன்று காலை மசாய் ஒமாரா பகுதியில்  இருந்து  லோட்வார் நோக்கி, ஒரு சிறிய ரக விமானம் சென்றுக்கொண்டிருந்தது. கெரிசோ கவுன்டி வான் வெளியில் பறந்த போது கட்டுபாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொருங்கியது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கென்யா நாட்டினர் அல்ல. வெளிநாட்டவர் என தெரியவந்துள்ளது.  

    விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. மேலும்  இந்த விமான விபத்து குறித்து போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  #planecrash #Foreignersdead

    அமெரிக்காவில் விமான நிலையத்தில் இருந்து மெக்கானிக்கால் திருடிச் செல்லப்பட்ட விமானம், சிறிது தொலைவு சென்றதும் விழுந்து நொறுங்கியது. #Stolenplanecrashes #SeattleAirport
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சியாட்டில்-டகோமா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு ஹாரிசன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம், பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் வேலை செய்துகொண்டிருந்த மெக்கானிக் திடீரென விமானத்தை திருடிச் சென்றுள்ளார்.

    தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் அனுமதியின்றி விமானம் டேக் ஆப் ஆனதால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விமானப்படை வீரர்கள் இரண்டு போர் விமானங்களில் அந்த விமானத்தை பின்தொடர்ந்து சென்று வழிமறித்தனர்.


    அதேசமயம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ள அதிகாரிகள், விமானத்தில் இருந்த மெக்கானிக்கிடம் பேசி தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவருக்கு விமானத்தை இயக்குவதற்கு போதிய பயிற்சி இல்லாததால், விமான நிலையத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள கெட்ரான் தீவு அருகே விழுந்து நொறுங்கியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்தனர். அந்த விமானத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் மிகப்பெரும்  உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.


    இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு எதுவும் இல்லை என்றும், தற்கொலை செய்யும் நோக்கத்தில் அந்த விமானத்தை மெக்கானிக் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. #Stolenplanecrashes #SeattleAirport
    ×