search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கென்யாவில் விமான விபத்து - 5 பேர் பலி
    X

    கென்யாவில் விமான விபத்து - 5 பேர் பலி

    கென்யா நாட்டின் வடமேற்கு பகுதியில் இன்று நடந்த விமான விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். #planecrash #Foreignersdead
    கெரிசோ:

    கென்யாவின் வடமேற்கு பகுதியில் இன்று காலை மசாய் ஒமாரா பகுதியில்  இருந்து  லோட்வார் நோக்கி, ஒரு சிறிய ரக விமானம் சென்றுக்கொண்டிருந்தது. கெரிசோ கவுன்டி வான் வெளியில் பறந்த போது கட்டுபாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொருங்கியது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கென்யா நாட்டினர் அல்ல. வெளிநாட்டவர் என தெரியவந்துள்ளது.  

    விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. மேலும்  இந்த விமான விபத்து குறித்து போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  #planecrash #Foreignersdead

    Next Story
    ×