என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடத்திய இந்தியாவுக்கு சீனா பாராட்டு
Byமாலை மலர்2 Dec 2020 8:56 PM GMT
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை நடத்திய இந்தியாவுக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.
பீஜிங்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்.சி.ஓ.) 8 நாடுகள் இடம்பெற்றுள்ளன. சீனா, ரஷியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஏற்கனவே இருந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து கொண்டன.
இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் அரசாங்க தலைவர்கள் மாநாடு, கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடந்த அந்த மாநாட்டை முதல்முறையாக இந்தியா நடத்தியது. அதில், சீன பிரதமர் லி கேகியாங், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், இதற்காக இந்தியாவுக்கு சீனா நேற்று பாராட்டு தெரிவித்தது. மாநாட்டை இந்தியா நடத்தியது பற்றியும், அதன் முடிவுகள் குறித்தும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங்கிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது:-
இந்தியா முதல்முறையாக இம்மாநாட்டை நடத்தி உள்ளது. முந்தைய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை எப்படி அமல்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை எப்படி அதிகரிப்பது என்று தலைவர்கள் பேசினர். சில கருத்தொற்றுமைகள் ஏற்பட்டன.
இந்த முடிவுகள் குறித்து எல்லா தலைவர்களும் உயர்வாக பேசினர். மாநாட்டை நடத்தியதற்காக இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை தரம் உயர்த்தவும், ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்தியா உள்ளிட்ட உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்.சி.ஓ.) 8 நாடுகள் இடம்பெற்றுள்ளன. சீனா, ரஷியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஏற்கனவே இருந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து கொண்டன.
இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் அரசாங்க தலைவர்கள் மாநாடு, கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடந்த அந்த மாநாட்டை முதல்முறையாக இந்தியா நடத்தியது. அதில், சீன பிரதமர் லி கேகியாங், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், இதற்காக இந்தியாவுக்கு சீனா நேற்று பாராட்டு தெரிவித்தது. மாநாட்டை இந்தியா நடத்தியது பற்றியும், அதன் முடிவுகள் குறித்தும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங்கிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது:-
இந்தியா முதல்முறையாக இம்மாநாட்டை நடத்தி உள்ளது. முந்தைய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை எப்படி அமல்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை எப்படி அதிகரிப்பது என்று தலைவர்கள் பேசினர். சில கருத்தொற்றுமைகள் ஏற்பட்டன.
இந்த முடிவுகள் குறித்து எல்லா தலைவர்களும் உயர்வாக பேசினர். மாநாட்டை நடத்தியதற்காக இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை தரம் உயர்த்தவும், ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்தியா உள்ளிட்ட உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X