என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர், நோபல் பரிசுக்கு பரிந்துரை
Byமாலை மலர்24 Sep 2020 10:51 PM GMT (Updated: 24 Sep 2020 10:51 PM GMT)
அடுத்த ஆண்டின் (2021) அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மாஸ்கோ:
இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி உள்ளிட்ட துறைகளுக்கு சிறந்த பங்களிப்பை மேற்கொண்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் மிகவும் கவுரவமான பரிசாக கருதப்படும் இந்த விருதுக்கு மேற்படி துறைகளில் சிறந்து விளங்கும் பலரும் ஆண்டுதோறும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் அடுத்த ஆண்டின் (2021) அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ரஷியாவின் பிரபல எழுத்தாளர் செர்ஜெய் கோம்கோவ் இந்த பரிந்துரையை செய்ததாக கடந்த 10-ந்தேதி அறிவித்து இருந்தார்.
இந்த பரிந்துரை தொடர்பாக கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த விருதுக்கு முற்றிலும் வேறுபட்ட மக்கள் பரிந்துரைக்கப்படுவது உங்களுக்கு தெரியும். இவை அனைத்தும் அந்தந்த முயற்சிகளுடன் தொடர்புடையவர்கள் முன்வைக்கும் முயற்சிகள். இந்த விவகாரத்தில் அந்த எழுத்தாளர் பரிந்துரைத்துள்ளார். பரிந்துரைக்கப்பட்டவர்களை கருத்தில் கொள்வதில் ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. அந்தவகையில் இந்த பரிந்துரையை விருதுக்காக தேர்வு செய்யப்பட்டால் அது சிறப்பாக இருக்கும். இல்லையென்றாலும் எந்த பிரச்சினையும் இல்லை. இது குறித்து வேறு எதுவும் கூறுவது கடினமானது’ என்று தெரிவித்தார்.
முன்னதாக இஸ்ரேல்-அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அமைதி நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வேயை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் பரிந்துரைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி உள்ளிட்ட துறைகளுக்கு சிறந்த பங்களிப்பை மேற்கொண்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் மிகவும் கவுரவமான பரிசாக கருதப்படும் இந்த விருதுக்கு மேற்படி துறைகளில் சிறந்து விளங்கும் பலரும் ஆண்டுதோறும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் அடுத்த ஆண்டின் (2021) அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ரஷியாவின் பிரபல எழுத்தாளர் செர்ஜெய் கோம்கோவ் இந்த பரிந்துரையை செய்ததாக கடந்த 10-ந்தேதி அறிவித்து இருந்தார்.
இந்த பரிந்துரை தொடர்பாக கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த விருதுக்கு முற்றிலும் வேறுபட்ட மக்கள் பரிந்துரைக்கப்படுவது உங்களுக்கு தெரியும். இவை அனைத்தும் அந்தந்த முயற்சிகளுடன் தொடர்புடையவர்கள் முன்வைக்கும் முயற்சிகள். இந்த விவகாரத்தில் அந்த எழுத்தாளர் பரிந்துரைத்துள்ளார். பரிந்துரைக்கப்பட்டவர்களை கருத்தில் கொள்வதில் ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. அந்தவகையில் இந்த பரிந்துரையை விருதுக்காக தேர்வு செய்யப்பட்டால் அது சிறப்பாக இருக்கும். இல்லையென்றாலும் எந்த பிரச்சினையும் இல்லை. இது குறித்து வேறு எதுவும் கூறுவது கடினமானது’ என்று தெரிவித்தார்.
முன்னதாக இஸ்ரேல்-அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அமைதி நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வேயை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் பரிந்துரைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X