என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லடாக் மோதல் விவகாரம்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு
Byமாலை மலர்4 July 2020 3:34 AM GMT (Updated: 4 July 2020 3:34 AM GMT)
இந்தியா-சீனா இடையேயான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், சீனா தன்னிச்சையாக ராணுவ நிலையை மாற்றுவதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்பு தெரவித்துள்ளது. இதன் மூலம் லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் வலுவான ஆதரவை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி :
இந்தியா-சீனா இடையேயான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், சீனா தன்னிச்சையாக ராணுவ நிலையை மாற்றுவதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்பு தெரவித்துள்ளது. இதன் மூலம் லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் வலுவான ஆதரவை தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே நடந்த மோதல் தொடர்பாக இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சடோஷி சுசுகி மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் சிரிங்லாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு சடோஷி சுசுகி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:
வெளியுறவு செயலர் சிரிங்லாவுடன் ஒரு நல்ல பேச்சு இருந்தது. எல்லை கட்டுப்பாடு பகுதியில் நிலவும் சூழல் குறித்து அவர் தெளிவாக எடுத்துரைத்தார். அமைதியை நிலைநாட்ட இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாராட்டுகள். ஜப்பானும் பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் அமைதியான தீர்வை தான் விரும்புகிறது. ஒருதலைப்பட்சமாகவும், தன்னிச்சையாகவும் ராணுவ நிலைகளை மாற்றும் எந்த முயற்சியையும் ஜப்பான் கடுமையாக எதிர்க்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியா-சீனா இடையேயான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், சீனா தன்னிச்சையாக ராணுவ நிலையை மாற்றுவதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்பு தெரவித்துள்ளது. இதன் மூலம் லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் வலுவான ஆதரவை தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே நடந்த மோதல் தொடர்பாக இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சடோஷி சுசுகி மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் சிரிங்லாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு சடோஷி சுசுகி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:
வெளியுறவு செயலர் சிரிங்லாவுடன் ஒரு நல்ல பேச்சு இருந்தது. எல்லை கட்டுப்பாடு பகுதியில் நிலவும் சூழல் குறித்து அவர் தெளிவாக எடுத்துரைத்தார். அமைதியை நிலைநாட்ட இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாராட்டுகள். ஜப்பானும் பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் அமைதியான தீர்வை தான் விரும்புகிறது. ஒருதலைப்பட்சமாகவும், தன்னிச்சையாகவும் ராணுவ நிலைகளை மாற்றும் எந்த முயற்சியையும் ஜப்பான் கடுமையாக எதிர்க்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X