search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் ராணுவம்
    X
    பாகிஸ்தான் ராணுவம்

    எல்லையில் படைகள் குவிப்பா?: பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோட்டையொட்டி பாகிஸ்தான் கூடுதலாக 20 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்து இருப்பதாக வெளியான தகவலை பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது.
    இஸ்லாமாபாத் :

    லடாக்கில் இந்திய-சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோட்டையொட்டி பாகிஸ்தான் கூடுதலாக 20 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் இதை பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது. இது பொய்யான, உண்மைக்கு மாறான பொறுப்பற்ற தகவல் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவின் இயக்குனர் ஜெனரல் பாபர் இப்திகார் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார். எல்லையை நோக்கி படைகளை நகர்த்தவில்லை என்றும், எல்லை பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்பி வைக்கவில்லை என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
    Next Story
    ×