என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா-சீன மோதல்: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - அமெரிக்கா தகவல்
Byமாலை மலர்2 July 2020 12:24 AM GMT (Updated: 2 July 2020 12:24 AM GMT)
இந்திய-சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
லடாக் எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
நிலைமை மேலும் மோசமடையும் வகையில் இரு நாட்டு ராணுவமும் எல்லையில் போர் தளவாடங்களை குவித்து வருகின்றன. பதற்றத்தை தனிக்க இந்திய-சீன ராணுவ கமண்டர்கள் அளவிளான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், இந்திய-சீன பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஹெல்லி மெக்கிம்னி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், இந்திய-சீன பிரச்சனையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என இரு நாடுகளுமே விரும்புகின்றன.
தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு அமைதியான முறையில் தீர்வுகான நாங்கள் முழு ஆதரவு தருகிறோம்.
மேலும், இந்தியா-சீனா எல்லையில் சீனாவின் ஆக்கிரோஷமான நிலைப்பாடு உலகின் பிற பகுதிகளில் சீன மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பின் முழு உருவத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை தன்மையை காட்டுவதாக அதிபர் டிரம்ப் கூறியதாக ஹெல்லி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X