என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை தாங்கும்
Byமாலை மலர்20 Jun 2020 4:01 AM GMT (Updated: 20 Jun 2020 4:01 AM GMT)
இந்தியா அடுத்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் 2 ஆண்டு உறுப்பினர் பதவி அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்குகிறது.
நியூயார்க் :
ஐ.நாவின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்காக இந்தியா நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 15 உறுப்பினர் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.
இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். ஆங்கில அகர வரிசையில் தலைவர் தேர்வு நடைபெறும் நிலையில் இந்தியா அடுத்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர் 2022-ம் ஆண்டிலும் ஒரு மாதம் தலைவராக பணியாற்றும் என ஐ.நா. செய்தி தொடர்பாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் 2 ஆண்டு உறுப்பினர் பதவி அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்குகிறது. ஆசியா-பசிபிக் பிரிவு சார்பில் இந்தியா இந்த பதவியை பெற்றுள்ளது.
ஐ.நாவின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்காக இந்தியா நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 15 உறுப்பினர் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.
இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். ஆங்கில அகர வரிசையில் தலைவர் தேர்வு நடைபெறும் நிலையில் இந்தியா அடுத்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர் 2022-ம் ஆண்டிலும் ஒரு மாதம் தலைவராக பணியாற்றும் என ஐ.நா. செய்தி தொடர்பாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் 2 ஆண்டு உறுப்பினர் பதவி அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்குகிறது. ஆசியா-பசிபிக் பிரிவு சார்பில் இந்தியா இந்த பதவியை பெற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X