search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா பாதுகாப்பு கவுன்சில்"

    • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் அதிகரித்ததால் உடனடி போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தல்.
    • ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால், அமெரிக்கா வீட்டு அதிகாரித்தை பயன்படுத்தவில்லை.

    காசா மீது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் ஐந்து மாதங்களையும் தாண்டி நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் காசா முனையில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அடிப்படை உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் காசா மீதான தாக்குதல் நிறுத்த வேண்டும். உடனடி போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் இதை வலியுறுத்தியது. ஆனால் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்ததால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனது.

    இந்த நிலையில்தான் தற்போது ரம்ஜான் மாதத்தையொட்டி உடனடியாக போர் நிறுத்தம் தேவை என ஐ.நா. சபையில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுவரை தன்னுடைய வீட்டோ அதிகாரம் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா, இந்த முறை வாக்களிக்காமல் புறக்கணித்தது. இதனால் 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 14 உறுப்பினர்கள் நாடு உடனடி போர் நிறுத்தம் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.

    இதனால் காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது நீண்ட போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. மேலும், ஹமாஸ், மற்ற குழுக்கள் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொலை செய்தனர். மேலும், 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது.

    அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவிக்கவில்லை என இஸ்ரேல் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

    இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்கா இதற்கு எதிராக இருந்து வருகிறது. இதனால் ஐ.நா. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது.

    • காசாவில் "ஒரு மனிதாபிமான பேரழிவை" தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.
    • வேகமாக சீர்குலைந்து வரும் மனிதாபிமான அமைப்பு இப்போது முற்றிலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.

    தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்குப் பகுதியில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர்.

    ஏழு நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. தற்போது தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளை இழந்து பாலஸ்தீன மக்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காசா மக்கள் தொகையில் 18.7 லட்சம் பேர் அவர்களுடைய வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கியமான வழித்தடம் துண்டிக்கப்பட்டதால் தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் செயலிழந்துள்ளது.

    காசாவில் "ஒரு மனிதாபிமான பேரழிவை" தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

    அரபு நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்தம் தீர்மானத்தை அமல்படுத்தும் வகையில் அழுத்தம் கொடுத்த வருகின்றன.

    போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததாக தெரிவித்து டிசம்பர் 1-ந்தேதி முதல் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஐக்கிய நாடுகளில் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சில் போரை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என பாலஸ்தீன நாட்டிற்கான ஐ.நா. தூதர் வலியுறுத்தியுள்ளார்.

    அரபு நாடுகளை சேர்ந்த 57 உறுப்பினர்கள் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரி தலைமையில் அமெரிக்க அதிபர்களை சந்திக்க இருக்கின்றனர். அப்போது போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த இருக்கின்றனர்.

    வேகமாக சீர்குலைந்து வரும் மனிதாபிமான அமைப்பு இப்போது முற்றிலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. முகாம்கள் அல்லது உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவை இல்லாத பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது பொது ஒழங்கை சீர்குலைக்கும் என ஐக்கிய நாடுகள் தலைவர்கள் எச்சரித்துள்ளார்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
    • இரு நாடுகளிடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் என்றார்.

    வாஷிங்டன்:

    ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா நிச்சயம் ஆதரவளிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    • அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியா, உலகில் தனக்கான சரியான இடத்தை பெற வேண்டும்.
    • பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கான பங்கு குறித்து பெரும்பாலான நாடுகள் தெளிவாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. அவற்றில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா மற்றும் சீனா ஆகியவை வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பு நாடுகள். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு இந்த 5 நாடுகளின் ஆதரவு தேவை. ஆனால் பிற நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிற நிலையில் சீனா ஆதரவளிக்கவில்லை.

    இந்நிலையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், அந்நாட்டின் பாஸ்டில் தின (Bastille Day) கொண்டாட்டத்தில் கெளரவ விருந்தினராகவும் பங்கேற்கிறார்.

    பிரான்ஸ் பயணத்திற்கு முன்னர், தமது அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து பிரான்ஸ் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அதில் இந்தியாவின் பதவி குறித்து அவர் பேசியதாவது:

    அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியா, உலகில் தனக்கான சரியான இடத்தை பெற வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி என்பது நம்பகத்தன்மை குறித்த பிரச்சினை மட்டுமல்ல; அதை விட மிகப்பெரியது.

    அதிக மக்கள்தொகை கொண்ட நாடும் அதன் மிகப்பெரிய ஜனநாயகமும் நிரந்தர உறுப்பினராக இல்லாத நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உலகத்திற்காக பேசுவதாக எப்படி கூற முடியும்?

    உலக ஒழுங்கு மாறி வரும் நிலையில் அதனோடு இணையாமல் அந்த அமைப்பு இருக்கிறது எனும் முரண்பாட்டையே இது எடுத்து காட்டுகிறது. அதன் உறுப்பினர் பதவிகளில் உள்ள முரண், வெளிப்படைத்தன்மையற்ற செயல்முறைகளுக்கு வழிவகுக்கிறது. இதனால், இன்றைய சவால்களை எதிர்கொள்வதில் அதன் உதவியற்ற தன்மை தெரிகிறது. கவுன்சிலில் இந்தியாவிற்கான பங்கு குறித்து பெரும்பாலான நாடுகள் தெளிவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

    சமூக மற்றும் பொருளாதார பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஈடு இணையற்ற வெற்றி, அதன் ஜனநாயகம் வழங்கும் வெற்றியாகும். பன்முகத்தன்மைக்கு மத்தியில் நல்லிணக்கம் சாத்தியமாகும் என்பதை இந்த வெற்றி நிரூபிக்கிறது. அதே நேரத்தில், சர்வதேச அமைப்புகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு உரிய இடத்தை தரும் விதமாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது கவனம் எப்போதும் நேர்மறையாக முன்னோக்கிய பார்வையில் இருக்க வேண்டும்.
    • பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாத பயிற்சி முகாமை இந்தியாவின் போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 'பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாரி, ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.

    பின்னர் ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசித்ரா கம்போஜ் பேசும்போது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:-

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதிநிதி கூறிய அற்பமான, அடிப்படையற்ற மற்றும் அரசியல் நோக்கத்துடன் கூடிய கருத்துக்களை நிராகரிக்கிறேன். இத்தகைய தீங்கிழைக்கும் மற்றும் பொய்யான பிரச்சாரங்கள் பதிலளிப்பதற்கு கூட தகுதியற்றது.

    மாறாக, நமது கவனம் எப்போதும் நேர்மறையாக முன்னோக்கிய பார்வையில் இருக்க வேண்டும். பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்த இன்றைய விவாதம் மிகவும் முக்கியமானது. விவாதத்தின் தலைப்பை நாங்கள் மதிக்கிறோம். எனவே, எங்கள் கவனம் இந்த தலைப்பில் மட்டுமே இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமை இந்தியாவின் போர் விமானங்கள் தாக்கி அழித்தன. இதையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
    • இவர் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார்.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அப்துல் ரகுமான் மக்கி. இவர் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார். அப்துல் ரகுமான் மக்கி, ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதிலும், தாக்குதல் நடத்த திட்டமிடுவதிலும் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.

    இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாதியாக அறிவித்தன. இவரை சர்வேதச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் சீனா தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்தது.

    இதற்கிடையே, அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

    இந்நிலையில், அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு வெளியிட்டதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

    ஐநாபாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா சார்பில் ருச்சிரா கம்போஜ் ஏற்று இந்த மாத நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.

    வாஷிங்டன்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. அவ்வகையில் டிசம்பர் மாதங்ததிற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

    பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா சார்பில் ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் ஏற்று இந்த மாத நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். இதையொட்டி அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரசை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

    உலகில் மிக பழமையான நாகரீகம் இந்தியா என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 2,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் ஜனநாயகத்தின் வேர்கள் இருந்தன. நாங்கள் எப்போதுமே ஜனநாயக நாடாகவே உள்ளோம்.

    ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் எங்களிடம் வலுவாக உள்ளது. நீதித்துறை, பத்திரிகைத்துறை, துடிப்பான சமூக ஊடகம் என உலகின் சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாங்கள் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தி வருகிறோம். எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் உரிமை இருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக ஏற்றங்களை, மாற்றங்களை கண்டு வருகிறோம். எங்கள் முன்னேற்றம் மிக சிறப்பாக உள்ளது. எனவே ஜனநாயகத்தை பற்றி எங்களுக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது.
    • மும்பை தாக்குதலுக்குக் காரணமானோர் தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.

    மும்பை:

    ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாடு மும்பையில் இன்று நடைபெற்றது. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதற்கு எதிராக உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் ஐ.நா பாதுகாப்பு அவையின் தலைவர் மைக்கேல் மவுஸ்ஸா, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது.

    பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் சில நேரங்களில் ஐ.நா.வால் போதிய வெற்றியை பெற முடியாததற்கு அரசியல் காரணங்கள் உள்ளன.

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் மும்பை மீதானது அல்ல. அது சர்வதேச சமூகத்திற்கு எதிரானது.

    மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், அவர்கள் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளை பொறுப்பேற்கச் செய்வதில் இருந்தும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் இருந்தும் சர்வதேச சமூகம் பின்வாங்காது என்ற செய்தியை நாம் வலுவாக வழங்க வேண்டியது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.

    • பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேக் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தீர்மானம் கொண்டு வந்தது.
    • ஐ.நா.சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டது.

    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல் கொய்தா அமைப்புக்கான தடை கமிட்டியின் கீழ் மகமூத் பயங்கரவாதியை, கருப்பு பட்டியலில் வைப்பதற்கான முன்மொழிவை இந்தியா மற்றும் அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கும் சீனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது.

    ஏற்கனவே, லஷ்கர் இ தொய்பாவின் சஜீத் மிர், ஜமாத் உத் தாவா அமைப்பின் அப்துல் ரெஹ்மான் மக்கி, அப்துல் ரவுப் அசார், ஜெய்ஸ் இ முகம்மது தலைவர் மசூத் ஆசார் ஆகியோரை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்க முடியாமல் தடுத்து சீனா பாதுகாத்து வருகிறது.

    இதில் சஜீத் மிர் என்பவன் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவன் ஆவான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×