என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டோ"

    காசாவில் இஸ்ரேலின் புதிய தரைவழித் தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் பஞ்சம் உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    காசாவில் போர் நிறுத்தம் கோரும் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை தோல்வி அடைய செய்துள்ளது.

    இந்தத் தீர்மானத்திற்கு கவுன்சிலின் மற்ற 14 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

    தீர்மானத்தின்படி, காசாவில் உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

    ஆனால், இதை அமெரிக்கா மீண்டும் நிராகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்திலும் அமெரிக்கா இதேபோல் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு ஆதவராக முந்தைய தீர்மானத்தையும் தோல்வி அடைய செய்தது.

    ஹமாஸின் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை என்று கூறி அமெரிக்கா தீர்மானத்தை நிராகரித்தது.

    காசாவில் இஸ்ரேலின் புதிய தரைவழித் தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் பஞ்சம் உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்ததற்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இதற்கிடையில், ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்தது வருத்தமளிக்கிறது என்று கூறினார். மேலும், பாலஸ்தீன மக்களை இனப்படுகொலையிலிருந்து பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

    இந்த தீர்மானத்திற்கு எதிராக பேசிய இஸ்ரேல் தூதர், "இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் பிணைக்கைதிகளை விடுவிக்கவோ அல்லது பிராந்தியத்திற்கு பாதுகாப்பைக் கொண்டுவரவோ உதவாது" என்று தெரிவித்தார்.

    வரும் வாரத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. உச்சிமாநாட்டில் இந்த விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    காஸா எல்லையில் பாலஸ்தீனியர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனது வீட்டோ அதிகாரம் மூலம் அமெரிக்கா அதனை நிராகரித்தது. #GazaStrip
    நியூயார்க்:

    இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையான காஸா முனைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீன மக்கள் இடையே மோதல் நடந்து வருகிறது. நேற்று, இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் பாலஸ்தீன் செவிலியர் பெண் பலியானததை தொடர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.

    இதனை அடுத்து, குவைத் மற்றும் சில வளைகுடா நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. காஸா எல்லை மற்றும் மேற்குக்கரை மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது, அங்கு சர்வதேச பாதுகாப்பு குழுவை ஐ.நா பார்வையில் அமைப்பது ஆகியன அந்த தீர்மானத்தின் சிறப்பு அம்சமாகும்.

    நேற்று, இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா இந்த தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே, ‘இஸ்ரேல் மீது எல்லா குற்றச்சாட்டுகளையும் சுமத்த ஐ.நா உறுப்பு நாடுகள் விரும்புகின்றன. ஆனால், ஹமாஸ் மீது குற்றம் சாட்ட யாருக்கும் விருப்பமில்லை’ என கூறினார்.

    சீனா, பிரான்ஸ், ரஷியா இந்த தீர்மானத்தை ஆதரிக்க பிரிட்டன் வாக்கெடுப்பை புறக்கணித்தது. பாலஸ்தீன போராளி இயக்கமான ஹமாஸ் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அரசு குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 
    ×