என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளத்துக்கு 23 டன் மருந்துகள் - மோடிக்கு நன்றி தெரிவித்த பிரதமர் ஒலி
Byமாலை மலர்22 April 2020 11:52 AM GMT (Updated: 22 April 2020 11:52 AM GMT)
கொரோனா சிகிச்சைக்காக 23 டன் மருந்துகள் அனுப்பியதற்காக இந்திய பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர்:
சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது.
பல்வேறு நாடுகள் கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, நேபாளத்தில் கொரோனா வைரசால் 45 பேர் மட்டுமே பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்காக 23 டன் மருந்துகள் அனுப்பியதற்காக இந்திய பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா சிகிச்சைக்காக 23 டன் மருந்துகள் அனுப்பிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி. இந்த மருந்துகள் சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X