என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு
நியூயார்க்:
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. 199 நாடுகளை இந்த வைரஸ் தொற்று தாக்கி உள்ளது. சுமார் 6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உலகப் பொருளாதாரத்தில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்கா தான் தற்போது கொரோனா வைரசால் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அங்கு 1 லட்சத்து 23 ஆயிரம் பேரை மேற்பட்டோரை தாக்கியுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரை பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதி உதவியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதில் இந்தியாவுக்கு ரூ 21.71 கோடி நிதி அளிக்கப்படுகிறது.
அமெரிக்கா ஏற்கனவே கடந்த மாதம் ரூ 748 கோடி நிதி உதவியை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்