என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது
Byமாலை மலர்3 Feb 2020 10:00 PM GMT (Updated: 3 Feb 2020 10:00 PM GMT)
இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழ் தேசிய கீதம் இல்லை, சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என உள்துறை அமைச்சக அதிகாரி நேற்று அறிவித்தார்.
கொழும்பு:
இலங்கையில் 2015-ம் ஆண்டு அப்போது இருந்த அரசு சிறுபான்மையினரான தமிழர்களுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை சிங்கள மொழியுடன், தமிழில் பாடுவதையும் இணைக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி 2016-ம் ஆண்டு முதல் அங்கு நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தது. சிங்கள தேசிய கீதத்தின் நேரடி மொழிபெயர்ப்பே தமிழ் தேசிய கீதம். சிங்களத்தில் ‘நமோ நமோ மாதா’ என்று தொடங்கும், தமிழில் ‘ஸ்ரீலங்கா தாயே’ என்று தொடங்கும். தமிழ் தேசிய கீதம் சேர்க்கப்பட்டபோது தமிழ் சமுதாயத்தினர் பாராட்டு தெரிவித்தனர். அப்போது ராஜபக்சே தலைமையிலான எதிர்க்கட்சி இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என வழக்கு தொடுத்தது.
கடந்த வாரம் உள்துறை மந்திரி மஹிந்த சமரசிங்கே கூறும்போது, ‘‘சுதந்திர தின முக்கிய விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும், மாகாணங்களில் நடைபெறும் விழாக்களில் தமிழ் பாடலும் அனுமதிக்கப்படும்’’ என்றார். இந்நிலையில் 2016-ம் ஆண்டில் இருந்து இப்போது முதல் முறையாக, சுதந்திர தின விழாவில் தமிழ் தேசிய கீதம் இல்லை, சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என உள்துறை அமைச்சக அதிகாரி நேற்று அறிவித்தார்.
இலங்கையில் 2015-ம் ஆண்டு அப்போது இருந்த அரசு சிறுபான்மையினரான தமிழர்களுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை சிங்கள மொழியுடன், தமிழில் பாடுவதையும் இணைக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி 2016-ம் ஆண்டு முதல் அங்கு நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தது. சிங்கள தேசிய கீதத்தின் நேரடி மொழிபெயர்ப்பே தமிழ் தேசிய கீதம். சிங்களத்தில் ‘நமோ நமோ மாதா’ என்று தொடங்கும், தமிழில் ‘ஸ்ரீலங்கா தாயே’ என்று தொடங்கும். தமிழ் தேசிய கீதம் சேர்க்கப்பட்டபோது தமிழ் சமுதாயத்தினர் பாராட்டு தெரிவித்தனர். அப்போது ராஜபக்சே தலைமையிலான எதிர்க்கட்சி இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என வழக்கு தொடுத்தது.
கடந்த வாரம் உள்துறை மந்திரி மஹிந்த சமரசிங்கே கூறும்போது, ‘‘சுதந்திர தின முக்கிய விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும், மாகாணங்களில் நடைபெறும் விழாக்களில் தமிழ் பாடலும் அனுமதிக்கப்படும்’’ என்றார். இந்நிலையில் 2016-ம் ஆண்டில் இருந்து இப்போது முதல் முறையாக, சுதந்திர தின விழாவில் தமிழ் தேசிய கீதம் இல்லை, சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என உள்துறை அமைச்சக அதிகாரி நேற்று அறிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X