என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தலிபான் 15 பேர் பலி
Byமாலை மலர்7 Dec 2019 11:41 AM GMT (Updated: 7 Dec 2019 11:41 AM GMT)
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 15 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல்களை அரங்கேற்றிவருகின்றனர்.
பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் அந்நாட்டு அரசுப்படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையினர் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் கந்தகார் மாகாணம், நிஷ் மாவட்டத்துக்குட்பட்ட கின்ஜக் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு அப்பகுதியை அதிரடியாக சுற்றிவளைத்த சிறப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 15 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும், 2 தலிபான்கள் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X