என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - 11 பேர் படுகாயம்
Byமாலை மலர்1 Dec 2019 4:20 PM GMT (Updated: 1 Dec 2019 4:20 PM GMT)
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பிரெஞ்ச் குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த மக்கள் மீது இன்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தோரில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஒரு நபரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மற்றும் பிற தகவல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X