என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே விரைவில் பாகிஸ்தான் பயணம்
Byமாலை மலர்21 Nov 2019 2:15 AM GMT (Updated: 21 Nov 2019 2:15 AM GMT)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அழைப்பை ஏற்று இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே விரைவில் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்து உள்ளது.
கொழும்பு :
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைப்போல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கோத்தபய ராஜபக்சேவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததுடன், கூடிய விரைவில் வசதியான ஒரு நாளில் பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார்.
இதை கோத்தபய ராஜபக்சே ஏற்றுள்ளார். அதன்படி விரைவில் அவர் பாகிஸ்தான் செல்ல இருப்பதாக கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்து உள்ளது.
முன்னதாக இலங்கையின் புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த பிரதமர் மோடியும், அவரை இந்தியாவுக்கு அரசு பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று வருகிற 29-ந்தேதி கோத்தபய ராஜபக்சே இந்தியா வர உள்ளார். அதிபராக பதவியேற்றபின் கோத்தபய மேற்கொள்ளும் முதல் அரசு பயணம் இதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைப்போல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கோத்தபய ராஜபக்சேவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததுடன், கூடிய விரைவில் வசதியான ஒரு நாளில் பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார்.
இதை கோத்தபய ராஜபக்சே ஏற்றுள்ளார். அதன்படி விரைவில் அவர் பாகிஸ்தான் செல்ல இருப்பதாக கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்து உள்ளது.
முன்னதாக இலங்கையின் புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த பிரதமர் மோடியும், அவரை இந்தியாவுக்கு அரசு பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று வருகிற 29-ந்தேதி கோத்தபய ராஜபக்சே இந்தியா வர உள்ளார். அதிபராக பதவியேற்றபின் கோத்தபய மேற்கொள்ளும் முதல் அரசு பயணம் இதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X