என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டையில் 12 தலிபான்கள் பலி
Byமாலை மலர்28 Oct 2019 2:50 PM GMT (Updated: 28 Oct 2019 2:50 PM GMT)
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் பொதுமக்களையும் அரசையும் அச்சுறுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆப்கன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், பயங்கரவாதிகளை குறிவைத்து நேற்று இரவு ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 12 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சாபுல் மாகானத்தில் உள்ள மிசானா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர்.
இதே போல், நேற்று இரவு உருஸ்கன் மாகாணத்தின் காஸ் மாவட்டத்திலும் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இந்த பயங்கரவாதிகள் அனைவரும் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X