search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "taliban militants"

    • 2022 ஆண்டை விட 2023ல் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன
    • பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது

    2021ல் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறியதும், அந்நாட்டின் அதிகாரம் பயங்கரவாத அமைப்பினரான தலிபான் வசம் வீழ்ந்தது.

    இதை தொடர்ந்து, அந்நாட்டின் பல பயங்கரவாத அமைப்புகள், ஆப்கானிஸ்தான் நாட்டையொட்டி உள்ள பாகிஸ்தான் எல்லை பிராந்தியங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

    குறிப்பாக, தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (TTP) எனும் தலிபானின் உள்ளூர் அமைப்பு பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

    2023 ஜனவரி மாதம் பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா பிராந்திய பெஷாவர் நகரில் உள்ள மசூதி வளாகத்தில் இந்த அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 2023 முற்பகுதியில் நடைபெற்றுள்ள பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் 2022ல் நடைபெற்றதை விட 80 சதவீதம் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பயங்கரவாத அமைப்புகளை ஆப்கானிஸ்தான் ஊக்குவித்து புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இதை ஆப்கானிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்நிலையில், இன்று கைபர்-பக்துன்க்வா பிராந்தியத்தில், டேரா இஸ்மாயில் கான் நகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டராபான் (Daraban) டவுனில் ராணுவ தளத்தில் உள்ள காவல்நிலைய கேட்டின் மீது, பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றிய ஒரு வாகனத்தை செலுத்தி வந்து வெடிக்க செய்து, பெரும் சேதத்தினை விளைவித்தனர். இத்தாக்குதலின் போது பல ராணுவ வீரர்கள் உறங்கி கொண்டிருந்தனர் என தெரிகிறது.

    தற்போதைய தகவல்களின்படி உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தபட்சம் 23 வரை உள்ளதாக தெரிகிறது. மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டேரா இஸ்மாயில் கான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணுவ தளத்தில் 3 அறைகள் பலத்த சேதமடைந்துள்ளதால், இடிபாடுகளை நீக்கும் போது உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    தெஹ்ரிக்-ஏ-ஜிஹாத் பாகிஸ்தான் அமைப்பினர் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது.

    இதுவரை இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    பாகிஸ்தானில் உள்ள சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலியாகினர். #Pakistan #MilitantsAttack
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பாரா மிலிட்டரி சோதனை சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் சோதனை சாவடி மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 12க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    பலுசிஸ்தான் சோதனை சாவடி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #Pakistan #MilitantsAttack
    ஆப்கானிஸ்தானில் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். #Taliban #Afghanistan
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ராணுவத்துக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகானத்தில் உள்ள அல்மார் மாவட்டத்தில் சில பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு விரைந்து சென்ற ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் பயங்கரவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் ஏராளமான பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.

    பதில் தாக்குதலின்போது பயங்கரவாதிகள் பயன்படுத்திய நவீன ஆயுதங்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றினர். ராணுவத் தரப்பில் ஏற்பட்ட உயிர் சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரிய வரவில்லை. #Taliban #Afghanistan 
    ஆப்கானிஸ்தான் நாட்டின் மூன்று மாகாணங்களில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 25 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Afghansf #Talibanmilitants
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், கடந்த 24 மணி நேரமாக நன்கர்ஹர், ஃபர்யாப், மேற்கு ஃபரா ஆகிய மூன்று மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 25 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

    மேற்கண்ட பகுதிகளில் இருந்து தலிபான்கள் வைத்திருந்த ராக்கெட் ஏவுகணைகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. #Afghansf #Talibanmilitants
    ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 69 பேர் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanairstrikes #69Talibanskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், நேற்று காலையில் இருந்து இன்று காலைவரை கடந்த 24 மணி நேரமாக லக்மன், நன்கர்ஹர், பக்டிக்கா, காஸ்னி, மைடான் வர்டக், கந்தஹார், உருஸ்கான், ஃபரா, கோர், டக்ஹர், ஃபர்யாப், ஹேம்லன்ட், நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 69 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 20 பயங்கரவாதிகள் காயங்களுடன் பிடிபட்டனர் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்பகுதிகளில் இருந்த தலிபான்களின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் இந்த தாக்குதல் அழிக்கப்பட்டன என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Afghanmilitants #Afghanairstrikes #69Talibanskilled
    ×