search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Afghan attack"

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர். #AfghanSoldiers #Talibanattack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.


    இங்குள்ள ஷின்டான்ட் மாவட்டத்துக்குட்பட்ட சேஷ்மா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமை நேற்றிரவு நூற்றுக்கணக்கான தலிபான்கள் முற்றுகையிட்டு ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.

    அவர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 20 வீரர்களை சிறைபிடித்து சென்ற பயங்கரவாதிகள் அந்த முகாமில் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை அள்ளிச் சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #AfghanSoldiers #Talibanattack
    ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 69 பேர் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanairstrikes #69Talibanskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், நேற்று காலையில் இருந்து இன்று காலைவரை கடந்த 24 மணி நேரமாக லக்மன், நன்கர்ஹர், பக்டிக்கா, காஸ்னி, மைடான் வர்டக், கந்தஹார், உருஸ்கான், ஃபரா, கோர், டக்ஹர், ஃபர்யாப், ஹேம்லன்ட், நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 69 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 20 பயங்கரவாதிகள் காயங்களுடன் பிடிபட்டனர் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்பகுதிகளில் இருந்த தலிபான்களின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் இந்த தாக்குதல் அழிக்கப்பட்டன என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Afghanmilitants #Afghanairstrikes #69Talibanskilled
    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் பாராளுமன்ற வேட்பாளர் உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். #TalibanAttack
    கந்தகார்:

    ஆப்கானிஸ்தானில் வருகிற 20-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி தீவிர பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஹெல்மண்ட் மாகாணத்தில் வேட்பாளர் குர்மான் என்பவர் தேர்தல் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவர் அமர்ந்திருந்த சோபாவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. அதில் அவர் அதே இடத்தில் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றனர். தாக்குதல் நடைபெற்ற ஹெல்மண்ட் பகுதி பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்தது. தேர்தல் நடைபெறும் இக்கால கட்டத்தில் இதுவரை 10 வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். #TalibanAttack
    ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று பெண் வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தில் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். #TakharElectionRally #ElectionRallyExplosion
    காபுல்:

    249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள  தக்கார் மாகாணத்துக்குட்பட்ட ரோஸ்டக் மாவட்டத்தில் இன்று நசீபா யூசுபிபேக் என்ற பெண் வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

    பிற்பகல் சுமார் 2 மணியளவில் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

    காயமடைந்த 32 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இந்த மாதத்தில் மட்டும் தேர்தல் பிரசார கூட்டங்களில் மூன்று முறை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    கடந்த 3-ம் தேதி நன்கர்ஹர் மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் 14 பேரும், கடந்த 9-ம் தேதி ஹெல்மன்ட் மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் வேட்பாளர் உட்பட 8 பேரும் உயிரிழந்தது நினைவிருக்கலாம். #TakharElectionRally #ElectionRallyExplosion 
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜவ்ஸான் மாகாணத்தில் உள்ள குஷ் டைப்பா மாவட்டத்தை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீசார் உயிரிழந்தனர். #Talibanattacks #Afghanpolicemen
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் ஜவ்ஸான் மாகாணத்தில் உள்ள குஷ் டைப்பா மாவட்டத்தை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த தாக்குதலில் 15 போலீசார் உயிரிழந்ததாகவும், 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஜவ்ஸான் மாகாண காவல்துறை தலைவர் முஹம்மது ஜவுஸ்ஜான் இன்று தெரிவித்தார். #Talibanattacks  #Afghanpolicemen
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். #sevendead #suicideattack #Afghanelectionrally
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான நங்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட  ஜலாலாபாத் நகரின் அருகே அப்துல் நாசிர் முஹம்மது என்ற வேட்பாளர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயம் அடைந்தனர். #SevenDead #SuicideAttack #AfghanElectionRally
    ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    காபூல் :

    ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் அமைந்துள்ள கல்வித்துறை அலுவலகம் அருகே திடீரென இன்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், படுகாயம் அடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜலாலாபாத் பகுதியில் நேற்று நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
    ஆப்னானிஸ்தானில் இன்று அடுத்தடுத்து பயங்கரவாத தக்குதல் நடைபெற்றுள்ளது, காபூலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #AfghanAttack #AfghanCeasefire
    கபுல் :

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், அங்கு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், தலைநகர் காபுலில் உள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பட்டு அமைச்சகத்தின் நுழைவு வாயில் அருகே இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பட்டு அமைச்சகத்தின் அருகே இன்று நடைபெற்ற இந்த கோர தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுள்ள இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். 

    அந்நாட்டின், ஜலாலாபாத் பகுதியில் உள்ள கல்வித்துறை கட்டிடத்தின் அருகே இன்று காலை பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #AfghanAttack #AfghanCeasefire 
    ×