search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் மாவட்டத்தை கைப்பற்ற தலிபான்கள் தாக்குதல் - 15 போலீசார் பலி
    X

    ஆப்கானிஸ்தானில் மாவட்டத்தை கைப்பற்ற தலிபான்கள் தாக்குதல் - 15 போலீசார் பலி

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜவ்ஸான் மாகாணத்தில் உள்ள குஷ் டைப்பா மாவட்டத்தை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீசார் உயிரிழந்தனர். #Talibanattacks #Afghanpolicemen
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் ஜவ்ஸான் மாகாணத்தில் உள்ள குஷ் டைப்பா மாவட்டத்தை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த தாக்குதலில் 15 போலீசார் உயிரிழந்ததாகவும், 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஜவ்ஸான் மாகாண காவல்துறை தலைவர் முஹம்மது ஜவுஸ்ஜான் இன்று தெரிவித்தார். #Talibanattacks  #Afghanpolicemen
    Next Story
    ×