என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "army soldiers killed"

    • ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபூர் மாவட்டத்தில் இன்று கட்டுப்பாட்டை இழந்த ராணுவ வாகனம் ஒன்று மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

    பந்திபூர் மாவட்டத்தில் உள்ள சதர் கூட் பேயன் என்ற பகுதி அருகே சாலையின் ஒரு கூர்மையான வளைவில் திரும்ப முயன்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில், பலத்த காயமடைந்த ராணுவ வீர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இரண்டு வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 5 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    யூனியன் பிரதேசத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளாவது முதல் முறை அல்ல.

    கடந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று, பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் 350 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து வீரர்கள் இறந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பயங்கரவாத கோணம் எதுவும் இல்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், நவம்பர் 4 அன்று, ரஜோரி மாவட்டத்தில் வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரு ராணுவ வீரர் இறந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார்.

    நவம்பர் 2, அன்று ரியாசி மாவட்டத்தில் ஒரு மலைப்பாங்கான சாலையில் இருந்து கார் சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 10 மாத மகன் உட்பட மூன்று பேர் இறந்தனர் மற்றும் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர். #AfghanSoldiers #Talibanattack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.


    இங்குள்ள ஷின்டான்ட் மாவட்டத்துக்குட்பட்ட சேஷ்மா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமை நேற்றிரவு நூற்றுக்கணக்கான தலிபான்கள் முற்றுகையிட்டு ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.

    அவர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 20 வீரர்களை சிறைபிடித்து சென்ற பயங்கரவாதிகள் அந்த முகாமில் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை அள்ளிச் சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #AfghanSoldiers #Talibanattack
    ×