என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சவுதி அரேபியாவிற்கு ராணுவ வீரர்களை அனுப்பும் அமெரிக்கா
Byமாலை மலர்27 Sep 2019 7:43 AM GMT (Updated: 27 Sep 2019 7:43 AM GMT)
சவுதி அரேபிய நாட்டின் பாதுகாப்பிற்கு உதவ 200 ராணுவ வீரர்களையும் சில பேட்ரியாட் ஏவுகணைகளையும் அந்நாட்டிற்கு தர உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:
சவுதி அரேபியாவில் உள்ள இரு முக்கிய எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் சமீபத்தில் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு ஈரான் நாடுதான் காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது.
இந்நிலையில், சவுதி அரேபிய நாட்டின் பாதுகாப்பிற்கு உதவும் வகையில் 200 ராணுவ வீரர்களையும், பேட்ரியாட் ஏவுகணைகளையும் அந்நாட்டிற்கு அமெரிக்கா அனுப்ப உள்ளது என அமெரிக்க ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், இந்த ராணுவப்படைகள் சவுதி அரேபிய அரசின் வான்வழி மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு கூடுதல் பலம் தரும். அரசின் முடிவை பொருத்து தாட் எனப்படும் ஏவுகணை இடைமறிப்பு அமைப்பு கருவிகளும் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.
எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என கூறுவதற்கு ஆதாரங்கள் உள்ளனவா ? நிரூபிக்க இயலுமா? என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி அமெரிக்காவிற்கு இன்று சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X