என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் விவகாரத்தில் நம்மை யாரும் ஆதரிக்க மாட்டார்கள்: பாகிஸ்தான் மந்திரி புலம்பல்
Byமாலை மலர்13 Aug 2019 2:13 PM GMT (Updated: 13 Aug 2019 2:13 PM GMT)
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தூதரக உறவை பாகிஸ்தான் துண்டித்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்தும் தடைபட்டது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உலக நாடுகளின் உதவியை நாட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் தெரிவித்துருந்தார்.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உலக நாடுகளுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. நமக்கு மிகவும் நெருக்கமான நட்பு உள்ள நாடுகள் உள்பட அனைவரும் அங்கு முதலீடுகள் செய்துள்ளன. அவர்கள் அனைவருக்கும் தங்களது சொந்த ஆதாயமே முக்கியமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் கையில் மாலைகளுடன் நமக்காக யாரும் காத்திருக்க மாட்டார்கள். ஆகையால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் அனைவரும் "முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழவேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தூதரக உறவை பாகிஸ்தான் துண்டித்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்தும் தடைபட்டது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உலக நாடுகளின் உதவியை நாட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் தெரிவித்துருந்தார்.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உலக நாடுகளுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. நமக்கு மிகவும் நெருக்கமான நட்பு உள்ள நாடுகள் உள்பட அனைவரும் அங்கு முதலீடுகள் செய்துள்ளன. அவர்கள் அனைவருக்கும் தங்களது சொந்த ஆதாயமே முக்கியமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் கையில் மாலைகளுடன் நமக்காக யாரும் காத்திருக்க மாட்டார்கள். ஆகையால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் அனைவரும் "முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழவேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X