என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![சமூகப் பணிகளில் ஈடுபடும் தென் ஆப்பிரிக்க பள்ளி மாணவர்கள் சமூகப் பணிகளில் ஈடுபடும் தென் ஆப்பிரிக்க பள்ளி மாணவர்கள்](https://img.maalaimalar.com/Articles/2019/Aug/201908121123310005_Schools-in-South-Africa-training-eco-warriors_SECVPF.gif)
X
சமூகப் பணிகளில் ஈடுபடும் தென் ஆப்பிரிக்க பள்ளி மாணவர்கள்
பருவநிலை மாற்ற விழிப்புணர்வு பணியில் தீவிரமாக களமிறங்கும் தென் ஆப்பிரிக்க பள்ளி மாணவர்கள்
By
மாலை மலர்12 Aug 2019 5:53 AM GMT (Updated: 12 Aug 2019 5:53 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தென் ஆப்பிரிக்காவில் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல்-வீரர்களாக நியமிக்கப்பட்டு பருவநிலை மாற்றம் தொடர்பான சமூகப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கேப்டவுன்:
சர்வதேச இளைஞர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இளைஞர்களை நெறிப்படுத்தி ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தி சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதும், அவர்களுக்கு ஊக்கம் அளித்து கவுரவிப்பதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த தினத்தையொட்டி ஐ.நா. அமைப்பானது இளைஞர்கள் மூலம் பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளிகள், ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யு.என்.டி.பி) ஆதரவுடன், பொது மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மாணவர்களை 'சுற்றுச்சூழல்-வீரர்கள்' என நியமித்து சமூகப்பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றன. இதற்காக அவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகின்றன.
மாணவர்கள், குப்பைகளை சுத்தம் செய்யும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, தங்கள் பள்ளிகளைச் சுற்றியுள்ள 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக கொட்டப்படும் குப்பைகளை அகற்றியுள்ளனர்.
“மேலும் சில மாணவர்கள் விவசாய கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தி, பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் சுற்றுச்சூழலின் மாசுபாடுகள் இருக்கும் நிலையில் நிலைத்த விவசாயத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என கற்றுக் கொள்கின்றனர்” என்று ஐக்கிய நாடுகள் சபை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பருவநிலை மாற்றங்களுக்கான திட்டங்களுக்காக, யு.என்.டி.பி. சிறு சிறு மானிய திட்டங்கள் மூலம் ஆதரவு அளித்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)