என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் தற்கொலை வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்- 9 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்21 July 2019 1:34 PM GMT (Updated: 21 July 2019 1:34 PM GMT)
பாகிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கைபர் பக்துன்வா மாகாணம் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அமர்ந்திருத்த பெண் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தினார். இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது.
தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்த 40-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் போலீசார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது பெண் என தெரியவந்துள்ளது. இத்தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இப்பிராந்தியத்தில் பெண் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது இதுவே முதல்முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X