என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் - டிரம்ப் அறிவிப்பு
Byமாலை மலர்6 July 2019 9:07 PM GMT (Updated: 6 July 2019 9:07 PM GMT)
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். இந்தப் பிரச்சினையை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை தொடங்க இருந்த அவர் கடந்த மாதம் ஒத்தி போட்டார்.
இந்த நிலையில், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை விரைவில் தொடங்கி விடும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “அவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள். பல்லாண்டு காலமாக சட்ட விரோதமாக குடியேறிய மக்களைத்தான் நாங்கள் அகற்றுகிறோம்” என குறிப்பிட்டார்.
ஆனால் புலம் பெயர்ந்தோர் உரிமை குழுக்கள் டிரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து அந்த குழுக்கள் குறிப்பிடுகையில், “இந்த பொதுவான அச்சுறுத்தல் சமூகங்களுக்கும், அமெரிக்க பொருளாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும். ஏனென்றால் பெரியவர்கள் வேலைகளை இழக்கவும், குழந்தைகள் பள்ளிகளை தவிர்க்கும் சூழலும் உருவாகும்” என்றன.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். இந்தப் பிரச்சினையை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை தொடங்க இருந்த அவர் கடந்த மாதம் ஒத்தி போட்டார்.
இந்த நிலையில், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை விரைவில் தொடங்கி விடும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “அவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள். பல்லாண்டு காலமாக சட்ட விரோதமாக குடியேறிய மக்களைத்தான் நாங்கள் அகற்றுகிறோம்” என குறிப்பிட்டார்.
ஆனால் புலம் பெயர்ந்தோர் உரிமை குழுக்கள் டிரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து அந்த குழுக்கள் குறிப்பிடுகையில், “இந்த பொதுவான அச்சுறுத்தல் சமூகங்களுக்கும், அமெரிக்க பொருளாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும். ஏனென்றால் பெரியவர்கள் வேலைகளை இழக்கவும், குழந்தைகள் பள்ளிகளை தவிர்க்கும் சூழலும் உருவாகும்” என்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X