என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காளதேசம் பிரதமரை அழைத்து வர பாஸ்போர்ட் இல்லாமல் சென்ற விமானி கத்தாரில் பிடிபட்டார்
Byமாலை மலர்7 Jun 2019 10:34 AM GMT (Updated: 7 Jun 2019 11:33 AM GMT)
வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவை அழைத்து வருவதற்காக சென்ற விமானி பாஸ்போர்ட் இல்லாததால் கத்தார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
தோஹா:
வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா ஜப்பான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது பின்லாந்து நாட்டில் தங்கியுள்ளார்.
அவரை தாய்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து போயிங் 787 டிரீம்லைனர் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விமானம் நேற்று கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
அப்போது அந்த விமானத்தை ஓட்டிவந்த கேப்டன் பஸல் மஹ்முத் என்பவர் பாஸ்போர்ட் இல்லாமல் வந்திருப்பதை விமான நிலைய குடியுரிமைத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரை உள்ளே நுழையவிடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இந்த தகவல் வங்காளதேசம் தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து ஷேக் ஹசினாவை அழைத்து வருவதற்காக வேறொரு விமானி அனுப்பி வைக்கப்பட்டார். பாஸ்போர்ட் இல்லாமல் சென்ற விமானியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வங்காளதேசம் நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X