என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் துப்பாக்கி சூடு - பலர் பலியாகியிருக்கலாம் என தகவல்
Byமாலை மலர்27 Oct 2018 4:47 PM GMT (Updated: 27 Oct 2018 4:47 PM GMT)
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #PittsburghShooting
வாஷிங்டன்:
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு மையம் அமைந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் அந்த வழிபாட்டு மையத்தில் நுழைந்தார். தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.
இந்த துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்கலாம் எனவும், துப்பாக்கியால் சுட்டநபர் போலீசாரிடம் சரணடைந்துள்ளார் எனவும்
முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
பிட்ஸ்பர்க்கில் நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து அறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நடக்கும் சம்பவங்களை தான் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #PittsburghShooting
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X