search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி ரஷிய அதிபர் புடின் சந்திப்பு
    X

    பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி ரஷிய அதிபர் புடின் சந்திப்பு

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். #PMModi #BRICS #Putin
    ஜொகன்னஸ்பெர்க்:

    ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள பிரதமர் 

    மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், சிறந்த உலகை உருவாக்க தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என  தெரிவித்தார்.

    அதன் பின்னர், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டு அதிபர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து 
    பேசினார்.

    அதன் ஒரு பகுதியாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், புடினுடனான சந்திப்பு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்படும். பல துறைகளில் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என பதிவிட்டுள்ளார். #PMModi #BRICS #PMModi #BRICS #Putin 
    Next Story
    ×