search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு - ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
    X

    ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு - ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

    ஜெர்மனியின் பிரிபாக்-பெச்சின்கென் பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    பெர்லின்:

    ஜெர்மனியின் பிரிபாக்-பெச்சின்கென் மாவட்டத்துக்கு உட்பட்ட சார்ப்ரூச்கென் நகரில் நேற்று ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் தான் எனவும் கூறப்படுகிறது. #tamilnews
    Next Story
    ×