என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டவிரோதமாக குடியேற கண்டெய்னரில் அமெரிக்கா வந்த 9 பேர் மூச்சு திணறி பலி
Byமாலை மலர்24 July 2017 7:23 AM GMT (Updated: 24 July 2017 7:23 AM GMT)
கண்டெய்னர் லாரி மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு குடியேற முயன்ற 9 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெக்சாஸ்:
மெக்சிகோவில் இருந்து அண்டை நாடான அமெரிக்காவில் குடியேற பலர் சட்ட விரோதமான வகையில் ஊடுருவி வருகின்றனர். அதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ நகரம் மெக்சிகோ எல்லையில் உள்ளது. நேற்று அங்குள்ள வால்மார்ட் வணிக வளாகத்துக்கு ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.
அது அங்குள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அதை வணிக வளாக ஊழியர்கள் திறந்து பார்த்தனர். உள்ளே 8 பேர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களில் 2 பேர் குழந்தைகள்.
இவர்கள் தவிர மேலும் 30 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 20 பேர் மயங்கிய நிலையில் இருந்தனர். உடனே அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும் மெக்சிகோவை சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேற கண்டெய்னர் லாரியில் வந்தவர்கள். காற்று வசதி இன்மை, கடும் வெப்பம் காரணமாக மூச்சு திணறி பலியாகி இருப்பது குடியுரிமை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக கண்டெய்னர் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். ஆட்களை கடத்தி வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் இருந்து அண்டை நாடான அமெரிக்காவில் குடியேற பலர் சட்ட விரோதமான வகையில் ஊடுருவி வருகின்றனர். அதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ நகரம் மெக்சிகோ எல்லையில் உள்ளது. நேற்று அங்குள்ள வால்மார்ட் வணிக வளாகத்துக்கு ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.
அது அங்குள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அதை வணிக வளாக ஊழியர்கள் திறந்து பார்த்தனர். உள்ளே 8 பேர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களில் 2 பேர் குழந்தைகள்.
இவர்கள் தவிர மேலும் 30 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 20 பேர் மயங்கிய நிலையில் இருந்தனர். உடனே அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும் மெக்சிகோவை சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேற கண்டெய்னர் லாரியில் வந்தவர்கள். காற்று வசதி இன்மை, கடும் வெப்பம் காரணமாக மூச்சு திணறி பலியாகி இருப்பது குடியுரிமை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக கண்டெய்னர் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். ஆட்களை கடத்தி வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X