என் மலர்tooltip icon

    உலகம்

    • புலியின் உரோமம் தீய சக்திகளை அகற்றும் என சீனாவில் நம்பப்படுகிறது.
    • சுற்றுலா பயணிகளின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    சீனாவின் லியானிங் மாகாணத்தில் உயிரியல் பூங்காவில், ஓய்வெடுத்து கொண்டிருந்த புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலா பயணிகளின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    புலியின் உரோமம் தீய சக்திகளை அகற்றும் என அந்நாட்டில் நம்பப்படுவதால் சுற்றுலா பயணிகள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதால் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என பூங்கா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்
    • போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் இன்று தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்

    • ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.
    • போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், "எங்கள் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்" என்று ஈரான் நாட்டின் ராணுவ அதிகாரி ஜெனரல் மொஹ்சென் ரெசா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் ஈரான் ராணுவ அதிகாரியின் கருத்தை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

    • இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
    • ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடியை கொடுத்த பின்னரே போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் முன்வரும் என்று கத்தார் மற்றும் ஓமன் நாடுகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. .

    • இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது
    • ஈரான் மூலம் உலகுக்கு ஏற்படும் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிக்கத் தேவையானதை செய்வோம்.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கினால் ஈரானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டம் போட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

    உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பேட்டியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "ஈரான் அணு ஆயுதங்கள் வைத்து இருப்பதை டிரம்ப் விரும்பவில்லை என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளார். இதனால் அவர் ஈரானின் நம்பர் ஒன் எதிரியாக இருந்து வருகிறார். டிரம்ப் தங்களது அணு சக்தி திட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதால் அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டு உள்ளது. அவர்களின் உளவுத்துறை மூலம் டிரம்பை கொல்ல விரும்புகிறது.

    ஈரானின் அணு சக்தி நடவடிக்கைக்கு இஸ்ரேலின் தாக்குதல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது. ஈரானால் நாங்கள் உடனடி அச்சுறுத்தலை எதிர்கொண்டோம். ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்ற தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயாராக இருக்கிறது." என்று தெரிவித்தார்.

    இதற்கிடையில் ஈரான் நாட்டின் ஆட்சியாளரும், மதத்தலைவருமான கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டு இருந்ததை டிரம்ப் தடுத்து நிறுத்தினார் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில் அமெரிக்கா வெளியிட்ட இந்த தகவல் பரபரப்பை எற்படுத்தி இருக்கிறது.

    • இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது
    • ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். விரைவாக நல்ல முடிவு எடுத்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த நான் எடுத்த முயற்சிகளை ஏற்றுக்கொண்டு அந்த தலைவர்கள் செயல்பட்டது போல இஸ்ரேல் மற்றும் ஈரான் தலைவர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது
    • அவ்னர் நெதன்யாகு, இன்று தனது காதலி அமித் யார்தேனியை திருமணம் செய்து கொள்ளவிருந்தார்.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகனின் திருமணம் ஈரான் தாக்குதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகு, இன்று தனது காதலி அமித் யார்தேனியை திருமணம் செய்து கொள்ளவிருந்தார்.

    இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னமும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நெதன்யாகு குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என்று இஸ்ரேலில் எதிர்ப்பு எழுந்த நிலையில், திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • குடியேற்ற கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
    • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நாட்டின் குடியேற்ற கொள்கையில் பல்வேறு திருத்தங்களைச் செய்து உத்தரவிட்டார்.

    அதன்படி விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேரை கைதுசெய்ய டிரம்ப் உத்தரவிட்டார். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கடந்த 7-ம் தேதி கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி புலம்பெயர் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

    அதன்பின் அவர்களை நாடு கடத்தும் முயற்சி துரிதமாக நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி ஒடுக்க முயன்றனர்.

    இதனையடுத்து டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்களும் போராட்டத்தில் இணைந்தனர். அப்போது கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. எனவே போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

    இதனையடுத்து போராட்டக்காரர்கள் டிரம்புக்கு எதிராக முழக்கமிட்டனர். போராட்டம் மேலும் தீவிரம் அடைவதால் இதனை கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் அங்கு ராணுவத்தைக் குவித்துள்ளது.

    பொதுவாக, தேசிய நெருக்கடி ஏற்படும்போதுதான் மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவர். ஆனால் தற்போது மாகாண கவர்னரின் அனுமதியின்றி டிரம்ப் அங்கு ராணுவத்தை நிறுத்தி உள்ளார். இதனை எதிர்த்து கலிபோர்னியா மாகாண கவர்னர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

    • சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் வரவேற்றார்.
    • கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பிரதமர் சைப்ரஸ் செல்வது இதுவே முதல் முறையாகும்.

    லிமாசோல்:

    மூன்று நாடுகள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். முதல் கட்டமாக அவர் சைப்ரஸ் நாட்டுக்கு சென்றடைந்தார். தலைநகர் நிகோசியாவில் உள்ள விமான நிலையத்தில் அவரை சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் வரவேற்றார்.

    கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் சென்ற முதலாவது இந்திய பிரதமர் மோடி ஆவார். சைப்ரஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இந்நிலையில், லிமாசோலில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

    6 தசாப்தங்களுக்குப் பிறகு, ஒரே அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது நிகழ்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டுள்ளது.

    பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறிச் செல்கிறது.

    இன்று உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 50 சதவீதம் இந்தியாவில் ஒருங்கிணைந்த கட்டணம், அதாவது யுபிஐ மூலம் நடைபெறுகிறது. பிரான்ஸ் போன்ற பல நாடுகள் இதனுடன் தொடர்புடையவை. இதில் சைப்ரஸையும் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதை நான் வரவேற்கிறேன்.

    புதுமை இந்தியாவின் பொருளாதார வலிமையின் வலுவான தூணாக சிவில் விமானப் போக்குவரத்து மாறியுள்ளது. இந்தியா, சைப்ரஸ் மற்றும் கிரேக்க வணிக மற்றும் முதலீட்டு கவுன்சில் நிறுவப்பட்டதை வரவேற்கிறேன். இது ஒரு நல்ல முயற்சி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு முக்கியமான தளமாக மாறக்கூடும். இந்தியாவுக்கு வருகை தருமாறு உங்களை அழைக்கிறேன் என தெரிவித்தார்.

    • உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 2வது இடத்தை இழந்தார்.
    • டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனருமான எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் போர்ப்ஸ் நிறுவனம், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது.

    இந்தப் பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ.வும், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 407.3 பில்லியன் டாலர்.

    இரண்டாவது இடத்திற்கு ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் முன்னேறி உள்ளார். அவரது நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்வு காரணமாக கூடுதலாக 26 பில்லியன் டாலர் சொத்து கிடைத்தது. இதனால் அவரது மொத்த சொத்து மதிப்பு 243 பில்லியன் டாலர் ஆக அதிகரித்தது.

    3வது இடத்தில் மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூகர்பர்க் 239 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உள்ளார்.

    இரண்டாவது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் இம்முறை 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அவரது சொத்து மதிப்பு 226 பில்லியன் டாலர் ஆக உள்ளது.

    • ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் அற்புதமானது என்றும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
    • ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால் "தெஹ்ரான் பற்றி எரியும்" என்று எச்சரித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமரிக்கா மீது ஈரானின் எந்தவொரு பதிலடி தாக்குதலுக்கும் எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    "ஈரான் எந்த வகையிலும் எங்களைத் தாக்கினால், அமெரிக்க ஆயுதப்படைகளின் முழு பலமும், வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு உங்கள் மீது பாயும்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    வெள்ளிக்கிழமை காலை, ஈரான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. பரஸ்பர தாக்குதகள் தொடர்வதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே ஈரான் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற தனது அறிவுரையை கேட்டிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். அதாவது, ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் அற்புதமானது என்றும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று, ஈரானின் பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தையும், தெஹ்ரான் அருகே உள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தையும் இஸ்ரேல் தாக்கியது.

    இதற்கிடையில், அமெரிக்கா உடனான ஆறாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையை ஈரான் ரத்து செய்தது.

    இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று ஈரான் குடியிருப்பு கட்டிடத்தைத் தாக்கியதில் 29 குழந்தைகள் உட்பட குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர்.

    இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தொடர அச்சுறுத்தி வரும் நிலையில், உலகத் தலைவர்கள் கட்டுப்பாடுடன் செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

    இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால் "தெஹ்ரான் பற்றி எரியும்" என்று எச்சரித்துள்ளார். இந்த மோதல், பிராந்தியத்தில் ஒரு பெரிய போராக உருவெடுக்கும் அபாயம் குறித்து சர்வதேச கவலைகளை எழுப்பியுள்ளது.

    • இந்த குற்றச்சாட்டு தவறானது என்று துருக்கியின் தகவல்தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
    • துருக்கிய நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாழக்கிழமை (ஜூன் 12) விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் பராமரிப்பில் துருக்கிய நிறுவனம் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை துருக்கி மறுத்துள்ளது. இந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில் துருக்கி மீதான குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தவறானது என்று துருக்கியின் தகவல்தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    துருக்கிய டெக்னிக் நிறுவனம் B777 ரக விமானங்களுக்கு மட்டுமே பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது என்றும், விபத்துக்குள்ளான Boeing 787-8 ரக விமானம் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வராது என்றும் துருக்கி குறிப்பிட்டுள்ளது.

    முன்னதாக, ஒரு மாதத்திற்கு முன்பு ஆபரேஷன் சிந்துரின் போது பாகிஸ்தானுக்கு துருக்கியின் ஆதரவு காரணமாக, இந்தியாவில் ஒன்பது முக்கிய விமான நிலையங்களில் சேவைகளை நிர்வகித்து வந்த துருக்கிய நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×