என் மலர்
உலகம்
- இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
- இந்திய தூதரகங்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து உளவு வலையமைப்பை நடத்தி வருவதாகக் SFJ குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த "Sikhs for Justice" (SFJ) என்ற காலிஸ்தான் அமைப்பு, கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை செப்டம்பர் 18 அன்று முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் அறிவிப்பின்படி, செப்டம்பர் 18 காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, 12 மணி நேரத்திற்கு இந்திய தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து உளவு வலையமைப்பை நடத்தி வருவதாகக் SFJ குற்றம் சாட்டியுள்ளது.
2023 இல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்பின் பங்கு குறித்து அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை SFJ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையே சில வாரங்கள் முன்பு கனடா அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தங்கள் நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- 1863-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட "The Scourged Back" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் நீக்கப்பட உள்ளது.
- அமெரிக்காவையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் கண்காட்சி பொருட்களை நீக்க வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்க தேசிய பூங்காக்களில் உள்ள கறுப்பின அடிமை முறை, அடிமைகள் வணிகம், பழங்குடியினர் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் கண்காட்சிப் பொருட்களை நீக்குமாறு அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக 1863-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட "The Scourged Back" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் நீக்கப்பட உள்ளது. இது, பிரம்பால் அடிக்கப்பட்ட ஒரு அடிமையின் முதுகில் உள்ள காயங்களை காட்டும் புகைப்படம்.
அமெரிக்காவையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் கண்காட்சி பொருட்களை நீக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாக உத்தரவை செயல்படுத்த நாடு முழுவதும் உள்ள பூங்காங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"ஒரு சிறந்த நாடு அதன் வரலாற்றை மறைக்காது. நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் இரண்டிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று வரலாற்றாசிரியர்கள் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
- பீரங்கிகள் முழங்க, குதிரைப்படை வீரர்கள் மற்றும் ராணுவ இசைக்குழுவினருடன் கூடிய பிரம்மாண்டமான வரவேற்பு டிரம்ப்புக்கு அளிக்கப்பட்டது.
- மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமில்லாவுடன் சேர்ந்து குதிரை வண்டியில் பயணம் செய்த டிரம்ப், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா, பிரிட்டனுக்கு இரண்டாவது அரசு முறைப் பயணமாக வந்துள்ளனர்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, விண்ட்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமில்லா ஆகியோரை சந்தித்து விருந்தில் கலந்து கொண்டனர்.

பீரங்கிகள் முழங்க, குதிரைப்படை வீரர்கள் மற்றும் ராணுவ இசைக்குழுவினருடன் கூடிய பிரம்மாண்டமான வரவேற்பு டிரம்ப்புக்கு அளிக்கப்பட்டது.
மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமில்லாவுடன் சேர்ந்து குதிரை வண்டியில் பயணம் செய்த டிரம்ப், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
டிரம்ப் விண்ட்சர் கோட்டையில் இருக்கும் அதே நேரத்தில், மத்திய லண்டனில் நூற்றுக்கணக்கான மக்கள் டிரம்ப் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

- ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது பரிசளித்தார்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கடம்ப மரக்கன்றை பரிசளித்துள்ளார்.
பிரிட்டன் தூதரகம் எக்ஸ் (X) வலைத்தளத்தில் பகிர்ந்த தகவலில். "பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, மகாராஜா கடம்ப மரக்கன்றை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரதமரின் 'Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியால் ஈர்க்கப்பட்ட இந்த செயல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இருவரின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது, இதே முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்ததையும் தூதரகம் குறிப்பிட்டது.
"காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பு என்பது காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்-இந்தியா கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றாகும்" என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ek Ped Maa Ke Naam "ஒரே மரம் தாயின் பெயரால்" என்ற முன்முயற்சியின் நோக்கம், ஒரு மரத்தை ஒருவரின் தாயின் பெயரால், அடையாளபூர்வமாக நடுவது ஆகும்.
பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலிய பிரதமர் மெலோனி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- ஓட்டல் நிர்வாகம் 4,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியது.
- ஓட்டல் சார்பில் ஷாங்காய் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது.
பீஜிங்:
சீனாவின் மிகப்பெரிய ஹாட்பாட் சங்கிலியான ஹாய்டிலோ ஓட்டலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்ற இரு இளைஞர்கள் சூப் ஆர்டர் செய்தனர்.
தனி அறை ஒன்றில் உணவருந்தும்போது அவர்கள் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஆன்லைனில் வைரலாகப் பரவியது.
விசாரணையில், அந்தச் சிறுவர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஹாய்டிலோ இழப்பீடு வழங்கியது.
இதற்கிடையே, ஓட்டல் சார்பில் ஷாங்காய் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷாங்காய் நீதிமன்றம், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதால் உணவகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே, இளைஞர்களின் பெற்றோர் உணவகத்திற்கு 2.71 கோடி ரூபாய் நஷட் ஈடு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டது.
- பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம்.
- இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அதை திட்டவட்டமாக இந்தியா மறுத்தது.
பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம். இதில் 3-வது நாடு தலையீடு இல்லை என்று இந்தியா தெரிவித்தது. ஆனாலும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்தநிலையில் போரை நிறுத்த அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமெரிக்க வெளியுறவு செயலர் ரூபியோ மூலம் எனக்கு மே 11-ந்தேதி போர் நிறுத்தம் குறித்த தகவல் வந்தது. இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் ஒரு பொதுவான இடத்தில் விரைவில் ஒரு பேச்சுவார்த்தை இருக்கும் என்று எனக்கு சொல்லப்பட்டது. ஜூலை 25-ந் தேதி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை நான் சந்தித்தேன்.
அப்போது மோதல் தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சு வார்த்தையின் நிலை குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்று இந்தியா கூறியதாக ரூபியோ பதிலளித்தார்.
இந்தியா எந்த 3-ம் தரப்பு தலையீட்டையும் திட்டவட்டமாக நிராகரித்தது. பாகிஸ்தானுடனான பிரச்சினைகள் இருதரப்பு அடிப்படையில் கண்டிப்பாக கையாளப்பட வேண்டும் என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதில் பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்து மூலம் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பது மேலும் உறுதியாகி உள்ளது.
- "காசா எரிகிறது" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் காசா முழுவதும் தீவிர வான்வழி மற்றும் பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
"காசா பற்றி எரிகிறது" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு தாக்குகிறது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ஹமாஸை தோற்கடிப்பதற்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் போராடுகிறார்கள்" என்று காட்ஸ் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக காசா நகரை முழுமையாக கைப்பற்றுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு உண்மையான ஊதுகுழலாக மாறிவிட்டது
- முன்னதாக ஏபிசி நியூஸ் மற்றும் சிபிஎஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் இதேபோன்ற பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்க செய்தித்தாள் தி நியூயார்க் டைம்ஸ் மீது 15 பில்லியன் டாலர் (ரூ.1.32 லட்சம் கோடி) இழப்பீடு கேட்டு அவதூறு வழக்குத் தொடரப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் .
டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான மற்றும் ஊழல் நிறைந்த செய்தித்தாள்களில் ஒன்றான தி நியூயார்க் டைம்ஸ் மீது நான் 15 பில்லியன் டாலர் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்கிறேன். அது தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு உண்மையான ஊதுகுழலாக மாறிவிட்டது" என்று தெரிவித்தார்.
"நியூயார்க் டைம்ஸ் நீண்ட காலமாக என்னைப் பொய் சொல்லி அவதூறு செய்ய முடிந்தது. இது மீண்டும் நடக்காது. புளோரிடாவில் வழக்குத் தொடரப்படுகிறது" என்று அவர் கூறினார்.
முன்னதாக ஏபிசி நியூஸ் மற்றும் சிபிஎஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் இதேபோன்ற பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிறுவனங்கள் பின்னர் டிரம்புடன் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு கண்டன. வரவிருக்கும் டிரம்ப் நூலகத்திற்கு $15 மில்லியன் நன்கொடையாக வழங்குவதற்க ஏபிசி முன்வந்ததால் அதற்கு ஈடாக தனது வழக்கை டிரம்ப் கைவிட்டார்.
- இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- முன்னதாக ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி 33 பத்திரிகையாளர்களைக் கொன்றது
ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுக நகரம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
செங்கடலில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேல் அங்கு 12 தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்கப் போவதாக இஸ்ரேல் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஹவுதிக்களின் ராணுவ கட்டமைப்புடை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாகவும் ஹொடைடா துறைமுகத்தில் உள்ள மக்களும் கப்பல்களும் தங்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தனது எச்சரிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 10 அன்று ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி 33 பத்திரிகையாளர்களைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
- ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கை இஸ்ரேல் செய்ததாக ஆணையம் தனது 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- இனக்குழுவினருக்கு வேண்டுமென்றே அழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணை ஆணையம், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டி பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலியப் படைகள் காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
இந்தப் போரில் இஸ்ரேல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கை இஸ்ரேல் செய்ததாக ஆணையம் தனது 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு இனக்குழுவினரை குறிவைத்து கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, அந்த இனக்குழுவினருக்கு வேண்டுமென்றே அழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.
இஸ்ரேலிய தலைவர்களின் கருத்துகளும் இராணுவத்தின் செயல்களும் அவர்களின் இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றுகள் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல இஸ்ரேல் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.
- பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்.
- பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத முகாம் மீதும் தாக்குதல் நடத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதில் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் முகாமும் ஒன்று.
இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைபின் கமாண்டர் இல்யாஸ் காஷ்மீரி, இந்தியா தாக்குதலில் மசூத் அசாத்தின் குடும்பம் சிதைந்ததாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற மிசன் முஷ்தபா மாநாட்டில் இல்யாஸ் காஷ்மிரி உருதில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
பலர் துப்பாக்கிகள் ஏந்திய நிலையில், அவர்களுக்கு மத்தியில் இல்யாஸ் காஷ்மீரி "சித்தாந்தம்மற்றும் நாட்டின் புவிபரப்பு எல்லையை பாதுகாப்பதற்கு நாம் டெல்லி, காபூல், கந்தகார் மீது தாக்கதல் நடத்தினோம். அனைத்து தியாகங்களையும் செய்த பிறகு, மே 7ஆம் தேதி மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் பஹவல்பூரில் இந்திய தாக்குதலில் சிதைந்துவிட்டனர்" எனக் கூறுவதுபோல் வீடியோவில் உள்ளது.
லாகூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹல்வர்பூர் ஜமியா மஸ்ஜித் சுபான் அல்லாஹ் மீது இந்திய தாக்குதல் நடத்தியதில் மசூத் அசார் குடும்பத்தை சார்ந்த 10 பேரும், அவருக்கு நெருங்கிய உதவியாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. மசூத அசாரின் மூத்த சகோதரி, அவருடைய கணவர், மருமகன், அவருடைய மனைவி, ஐந்து குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.
1999ஆம் ஆண்டு IC-184 விமானம் கடத்தப்பட்டபோது, விமானிகளுக்குப் பதிலாக அசார் ஜெயிலில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து 2019ஆம் அண்டு ஐ.நா. மசூத் அசார உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது. 2019 ஏப்ரலில் இருந்து மசூத் அசார் பொது வெளியில் காணப்படவில்லை. அவர் பஹவல்பூரில் பாதுகாப்பான இடத்தில் மறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஜேஇஎம் இந்தியாவில் 2001 பாராளுமன்ற தாக்குதல், 2000-த்தில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல், 2019 புல்வாமா தற்கொலை படை தாக்குதல் போன்ற பயங்கரவாத செயல்களை நடத்தியுள்ளது.
- உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல டி.வி. தொடரில் நடித்தவர்.
- உமர் ஷா உயிரிழந்தது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
லாகூர்:
பாகிஸ்தானில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றவர் உமர் ஷா. இவருக்கு வயது 15.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக உமர் ஷா உயிரிழந்தார் என அவரது சகோதரர் அகமது ஷா தெரிவித்துள்ளார்.
உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல டி.வி. தொடர் உள்பட பல்வேறு தொடர்களில் நடித்தவர்.
டிக் டாக் பிரபலமான அகமது ஷா, உமர் ஷாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிய வயதிலேயே உமர் ஷா மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






