என் மலர்
நீங்கள் தேடியது "JeM"
- பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்.
- பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத முகாம் மீதும் தாக்குதல் நடத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதில் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் முகாமும் ஒன்று.
இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைபின் கமாண்டர் இல்யாஸ் காஷ்மீரி, இந்தியா தாக்குதலில் மசூத் அசாத்தின் குடும்பம் சிதைந்ததாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற மிசன் முஷ்தபா மாநாட்டில் இல்யாஸ் காஷ்மிரி உருதில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
பலர் துப்பாக்கிகள் ஏந்திய நிலையில், அவர்களுக்கு மத்தியில் இல்யாஸ் காஷ்மீரி "சித்தாந்தம்மற்றும் நாட்டின் புவிபரப்பு எல்லையை பாதுகாப்பதற்கு நாம் டெல்லி, காபூல், கந்தகார் மீது தாக்கதல் நடத்தினோம். அனைத்து தியாகங்களையும் செய்த பிறகு, மே 7ஆம் தேதி மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் பஹவல்பூரில் இந்திய தாக்குதலில் சிதைந்துவிட்டனர்" எனக் கூறுவதுபோல் வீடியோவில் உள்ளது.
லாகூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹல்வர்பூர் ஜமியா மஸ்ஜித் சுபான் அல்லாஹ் மீது இந்திய தாக்குதல் நடத்தியதில் மசூத் அசார் குடும்பத்தை சார்ந்த 10 பேரும், அவருக்கு நெருங்கிய உதவியாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. மசூத அசாரின் மூத்த சகோதரி, அவருடைய கணவர், மருமகன், அவருடைய மனைவி, ஐந்து குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.
1999ஆம் ஆண்டு IC-184 விமானம் கடத்தப்பட்டபோது, விமானிகளுக்குப் பதிலாக அசார் ஜெயிலில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து 2019ஆம் அண்டு ஐ.நா. மசூத் அசார உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது. 2019 ஏப்ரலில் இருந்து மசூத் அசார் பொது வெளியில் காணப்படவில்லை. அவர் பஹவல்பூரில் பாதுகாப்பான இடத்தில் மறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஜேஇஎம் இந்தியாவில் 2001 பாராளுமன்ற தாக்குதல், 2000-த்தில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல், 2019 புல்வாமா தற்கொலை படை தாக்குதல் போன்ற பயங்கரவாத செயல்களை நடத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட தீர்மானித்துள்ளது. இந்நிலையில், மேற்கண்ட 7 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு தேசிய பாதுகாப்புத்துறை விளக்கம் கூறியுள்ளது. இதில், ‘ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க சொன்னது அன்றைய வாஜ்பாய் அரசின் முடிவாகும். இந்த முடிவு விமானத்தில் பயணம் செய்த 161 பயணிகளின் பாதுகாப்பினை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகும். மசூத் அசாரின் விடுதலைக்காக எடுக்கப்படவில்லை. இந்த முடிவு நல்லதோ கெட்டதோ அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அதைவிடுத்து அரசின் முடிவுகளை செயல்படுத்திய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி பேசுவது சரியானதல்ல. மேலும் அஜித் தோவல் மசூத் அசாருடன் விமானத்தில் பயணித்ததாக கூறியது தவறான தகவல் ஆகும்’ என தெரிவித்துள்ளது. #Rahulgandhi #Congressboothworkers #AjitDoval #MasoodAzhar
காஷ்மீர் மாநிலம், புலவாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 14-ந் தேதி நடத்திய காட்டுமிராண்டித்தனமான கார்குண்டு தாக்குதல், இந்தியாவை உலுக்கியது.
இந்த தாக்குதலில், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக்கொண்டிருந்த தமிழகத்தின் சுப்பிரமணியன், சிவசந்திரன் உள்பட மொத்தம் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
அந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில், “புலவாமா தாக்குதலை நடத்தியது நாங்கள்தான்” என்று பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. உடனே பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தர வேண்டும் என்ற ஆவேசம், நாட்டு மக்கள் அத்தனைபேர் மத்தியிலும் எழுந்தது.
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமை, தனது இயக்க பயங்கரவாதிகளுடன் கடந்த 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதி தொலைபேசியில் கலந்துரையாடியதை உளவுத்துறையினர் இடைமறித்து பதிவு செய்தனர்.
அதில், அவர்கள் புலவாமா தாக்குதலை விட பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பது அம்பலத்துக்கு வந்தது. இது இந்தியாவுக்கு அதிர்ச்சியை அளித்தது.
பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என இனியும் பொறுத்துப் பயனில்லை என்ற முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அமைந்துள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் மீது குண்டு போட்டு ஒழித்துக்கட்டி பழி தீர்க்க இந்திய விமானப்படைக்கு அவர் அதிரடியாக உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்கு பெயர் பெற்ற இந்திய விமானப்படையின் ‘மிராஜ்-2000’ ரக போர் விமானங்கள் 12, சக்திவாய்ந்ததும், ஆயிரம் பவுண்ட் எடையுடையதுமான லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து கொண்டு பாகிஸ்தானுக்கு பறந்தன.
அவை அங்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம், தளம் அமைந்துள்ள பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் மிகத்துல்லியமாக குண்டுமழை பொழிந்தன. இதில், பயங்கரவாத முகாம்களும், தளமும் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலம் ஆகின.
அதைத் தொடர்ந்து வெற்றிகரமாக இந்திய போர் விமானங்கள், புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தன.

இந்த துல்லிய தாக்குதல் நடவடிக்கை, இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஏகோபித்த வரவேற்பை யும், நாட்டு மக்களின் பாராட்டுக்களையும் ஒருசேரப் பெற்றது. பரவலாக பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறினர். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்தியாவின் அதிரடி தாக்குதலுக்கு மக்கள் பாராட்டு மழை பொழிந்து பதிவுகளை வெளியிட்டனர்.
புலவாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்நாடக மாநிலம், மண்டியாவை சேர்ந்த வீரர் குருவின் மனைவி கலாவதி நிருபர்களிடம் பேசினார்.
அவர், “புலவாமா தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மா இப்போது அமைதி அடையும். இந்திய விமான படையினருக்கு நான் வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்த நடவடிக்கை எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது” என ஆனந்த கண்ணீர் வழிய குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 14-ந் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதில் வீரமிக்க 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானில் இந்த பயங்கரவாத அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பஹவல்பூரை தலைமையிடமாக கொண்டு, இந்த அமைப்பினை மசூத் அசார் தலைமை தாங்கி நடத்தி வந்தார்.
ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்புதான், 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி நடந்த இந்திய நாடாளுமன்ற தாக்குதல், 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடந்த பதன்கோட் விமானப்படை தள தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களுக்கு பொறுப்பு ஆகும்.
பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இயங்கி வருகிற அந்த இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும், பாகிஸ்தான் அதை மறுத்து வந்துள்ளது. ஆனால் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிற திறன் வாய்ந்த பயிற்சி முகாம்கள் அங்கு செயல்பட்டு வந்தன என்றால், அது பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்காது.
பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும், பாகிஸ்தானுக்குள் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு இருப்பதையும் தடுத்து நிறுத்தும் வகையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தோம். ஆனால் பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாத கட்டமைப்புகளை அகற்றுவதற்கு உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர், நாட்டின் பல்வேறு இடங் களில் மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலை நடத்த முயற்சிப்பதாகவும், அதற்காக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதாகவும் நம்பத்தகுந்த உளவுத்தகவல் கிடைத்தது.
தவிர்க்க முடியாத ஆபத்தை சந்திக்கும் நிலை உருவானதால், அதைத் தடுக்கிற வகையில் அதிரடியாக தாக்குதல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
இன்று (நேற்று) அதிகாலை உளவு தகவல்கள் அடிப்படையில், பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள், குழுக்கள் கொல்லப்பட்டனர்.
பாலகோட் பயிற்சி முகாம், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மைத்துனர் மவுலானா யூசுப் அசார் தலைமையில் இயங்கி வந்தது ஆகும்.
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போரிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இந்திய அரசு உறுதி கொண்டுள்ளது. எனவேதான் ராணுவ நடவடிக்கை இல்லாமல், ஜெய்ஷ் இ முகமது அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் உயிரிழப்பை தடுக்கிற வகையில், இந்த தாக்குதல் இலக்குகள் முடிவு செய்யப்பட்டன.
2004-ம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தான் தனது மண்ணை அல்லது கட்டுப்பாட்டில்வரும் பிராந்தியத்தை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாக உறுதி அளித்தது. தனது வாக்கினை பாகிஸ்தான் காத்து நடக்கும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு மற்றும் பிற அமைப்புகளின் பயிற்சி முகாம் களை அகற்றவும், பயங்கரவாதிகளை பொறுப்பேற்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா நகரில் பாதுகாப்பு படையினர் மீது நவீன ரக துப்பாக்கி மூலம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.
பலமணி நேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அலாரின் மருமகன் உஸ்மான் ஹைதர் என்பவனும் ஒருவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட நவீன ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி பலியாகி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் அவனது உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #JammuKashmir #MillitantGunnedDown






