search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nephew"

    களக்காடு குடில்தெருவில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
    களக்காடு:

    களக்காடு குடில்தெருவை சேர்ந்தவர் மதனகோபால் மனைவி பரமேஸ்வரி (வயது 53). இவரது மகள் சத்தியாவிற்கும், அதே ஊரை  சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த 3 ½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் ராஜ்குமாருக்கும், அவரது மனைவி சத்தியாவிற்கும் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் சத்தியாவை தாக்கினார். இதனைதொடர்ந்து சத்தியா அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
     
    சம்பவத்தன்று   ராஜ்குமார் தனது மாமியார் பரமேஸ்வரி வீட்டிற்கு வந்து அவரை அவதூறாக பேசினார். இதனை அவர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், பரமேஸ்வரியை கற்களை வீசி தாக்கினார்.

    இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே குடி போதையில் மாமியாரை கற்பழித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
    எரியோடு:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள புங்கம்பாடி பிரிவைச் சேர்நதவர் வெங்கிடுசாமி. இவரது மனைவி ராமுத்தாய் (வயது 65). கணவர் இறந்து விட்டதால் ராமுத்தாய் மகள் தனலெட்சுமி வீட்டில் வசித்து வந்தார். கடந்த 10-ந் தேதி இரவு வீட்டில் படுகாயங்களுடன் கிடந்த அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் ராமுத்தாய் அணிந்திருந்த ஒரு பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். 

    போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட ராமுத்தாய்க்கு சென்ராயன், மாரிமுத்து என்ற மகன்களும் தனலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். தனலெட்சுமிக்கும் முத்தையா (52) என்பவருக்கும் திருமணமாகி அவர்களுக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார். ராமுத்தாய் தனது மகள் வழி பேத்தி கலைச்செல்வியை மகன் மாரிமுத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரிமுத்து இறந்து விட்டார். 

    கணவர் வெங்கிடுசாமி, மகள் தனலெட்சுமி, மகன் மாரிமுத்து ஆகியோர் இறந்ததால் ராமுத்தாய் மிகுந்த மனவேதனையில் இருந்தார். இதனால் பேத்தி கலைச்செல்வியுடன் புங்கம்பாடியில் தனியாக வசித்து வந்தார். மகள் கலைச்செல்வியை பார்ப்பதற்காக முத்தையா அடிக்கடி ராமுத்தாய் வீட்டுக்கு வருவது வழக்கம். அதன்படி கடந்த 10-ந் தேதி மகளை பார்க்க முத்தையா வந்துள்ளார். அவர் வேலைக்கு சென்று விட்டதால் ராமுத்தாயிடம் குடிக்க பணம் தருமாறு கேட்டார். அவர் ஏற்கனவே போதையில் இருந்ததால் பணம் தர மறுத்ததுடன் சத்தம் போட்டு தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த முத்தையா மாமியார் ராமுத்தாயை பலவந்தப் படுத்தி கற்பழித்தார்.

    மேலும் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தலையில் ஓங்கி அடித்து அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தோடை அபகரித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பிய கலைச்செல்வி தனது பாட்டி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆஸ்பத்திரியில் சேர்த்து பின் அவர் உயிரிழந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது தனது தந்தைதான் வீட்டுக்கு வந்து சென்றதாக கூறினர்.

    அவர் அளித்த தகவலின் பேரில் பதுங்கி இருந்த முத்தையாவை விசாரித்த போது தான் கற்பழித்து கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடிபோதையில் மாமியாரையே கற்பழித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JammuKashmir #MillitantGunnedDown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா நகரில் பாதுகாப்பு படையினர் மீது நவீன ரக துப்பாக்கி மூலம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.

    பலமணி நேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அலாரின் மருமகன் உஸ்மான் ஹைதர் என்பவனும் ஒருவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட நவீன ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி பலியாகி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் அவனது உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #JammuKashmir #MillitantGunnedDown
    ×