என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பலமுறை அவமதிக்கப்பட்ட போதிலும் டிரம்ப்புக்கு தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்.
    • இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதித்தார்.

    பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கண்டு அஞ்சுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில் இதற்கு ஆதரமாக 5 விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

    அதில், இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதித்தது, பலமுறை அவமதிக்கப்பட்ட போதிலும் டிரம்ப்புக்கு தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருப்பது,

    நிதியமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்தானது, எகிப்தில் காசா அமைதி மாநாட்டுக்கு(ஷர்ம் எல்-ஷேக் மாநாடு) அழைக்கப்பட்ட போதிலும் அங்கு செல்வதை தவிர்த்தது,

    ஆபரேஷன் சிந்தூர் குறித்த டிரம்ப்பின் கருத்துக்களுக்கு முரண்படாமல் இருப்பது" ஆகியவை பிரதமர் மோடி டிரம்ப்பை கண்டு பயப்படுவதை காட்டுகிறது என்று ராகுல் தெரிவித்துள்ளார். 

    நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா விரைவில் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்று தெரிவித்தார்.

    முன்னதாக ரஷிய எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வாரம் 10-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
    • நேற்றிரவு உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு (வயது 100), கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

    இதனிடையே, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நல்ல கண்ணுக்கு மூத்த மருத்துவர்கள் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், கடந்த வாரம் 10-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

    இந்த நிலையில், இன்று காலை நல்ல கண்ணுக்கு மீண்டும் உடல்நலம்பாதிக் கப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிகாலை 2 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவர் வாய் வழியாக உணவு உட்கொள்ள முடியாத நிலையில் டியூப் மூலம் உணவு செலுத்தப்படுகிறது. நேற்றிரவு உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மீண்டும் உணவு சீராக உட்கொள்வதற்கான சிகிச்சையினை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

    சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை கம்யூனிஸ்டு முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

    • கடலோர பகுதியில் உள்ள உப்பளங்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது.
    • விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்தநிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவிலும் மழை தொடர்ந்து பெய்தது.

    தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாநகரை ஒட்டிய பகுதிகளான கோரம் பள்ளம் காலங்கரை மற்றும் முத்தையாபுரம், முள்ளக்காடு, தருவைகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலோர பகுதியில் உள்ள உப்பளங்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது.

    நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் தாழ்வான பகுதிகளான தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதி மற்றும் பேட்டரிக் சர்ச் பகுதி, காந்தி சிலை, மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதி, தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

    திருச்செந்தூர் பிரதான சாலையில் முத்தையாபுரம் முதல் முள்ளக்காடு வரை வடிகால் அமைக்கப்படா ததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக சென்னை, கோவை பெங்களூரு மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில இருந்து வரக்கூடிய பஸ்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து உள்ளனர். விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    மேலும் புதுக்கோட்டை, கோரம்பள்ளம், அந்தோணி யார்புரம், காலங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கனமழையின் காரணமாக காலங்கரை கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. தூத்துக்குடி குமரன் நகர், முருகன் தியேட்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    இதேபால தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்குள்ளும் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
    • துணை முதலமைச்சர் உயதநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    சென்னை கிண்டியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உயதநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    • சட்டசபையின் 3-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
    • அ.தி.மு.க.வினர் இன்று கிட்னி திருட்டு விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    தமிழக சட்டசபையின் 3-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது.

    நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டைகளில் 'கிட்னிகள் ஜாக்கிரதை' என்ற ஸ்டிக்கர் அணிந்து வந்துள்ளனர். அ.தி.மு.க.வினர் இன்று கிட்னி திருட்டு விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    வினாக்கள் - விடைகள் நேரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    • அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்று பிறந்தநாள் காணும் பா.ஜ.க. மாநில தலைவர், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார். 

    • விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் தினமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் தினமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தங்கம், வெள்ளி என்பது மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்ற நிலை உருவாகி வருகிறது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,900-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,200-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 206 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 2 லட்சத்துக்கு 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,880

    14-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,600

    13-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,640

    12-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    11-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-10-2025- ஒரு கிராம் ரூ.207

    14-10-2025- ஒரு கிராம் ரூ.206

    13-10-2025- ஒரு கிராம் ரூ.197

    12-10-2025- ஒரு கிராம் ரூ.190

    11-10-2025- ஒரு கிராம் ரூ.190

    • தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும்.
    • சென்னையில் இன்று பகலில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை தொடர்ந்து 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெரிய மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும். பின்னர் படிப்படியாகக் குறையும். கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லையின் பிற உள் பகுதிகளில் நண்பகல் அல்லது மாலை வரை மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் இன்று பகலில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். 

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 5,900 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 14,268 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து இன்று 565 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி பயணிகளின் வசதிக்காக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த 4 நாட்களும் சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 5,900 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 14,268 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து இந்த 4 நாட்களும் 6,110 சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 20,378 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 4,253 சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. மற்ற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மொத்தம் 15,129 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    முதல் கட்டமாக சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன், 760 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து இன்று மொத்தம் 2,852 பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து இன்று 565 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்களுடன், 2,165 சிறப்பு பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,790 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன், 1,935 சிறப்பு பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2,145 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன், 1,040 சிறப்பு பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,610 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும், வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக் கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    • இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது.
    • ஆகம பண்டிதர்கள், அர்ச்சகர்கள், சாஸ்திர நிபுணர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது.

    அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்து வைக்கப்படுகின்றன. அதன் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.

    தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நடைமுறையைப்போல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசலை திறந்து வைக்க, கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசு முடிவு செய்தது. அப்போது பல பீடாதிபதிகள், மடாதிபதிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து கடிதங்களை அளித்தனர். அதன்பேரில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசன நடைமுறையை தொடர்ந்தனர்.

    ஆனால், இது ஆகம சாஸ்திரபடி விரோதமானது என்றும், 10 நாட்கள் சொர்க்கவாசல் தரிசனம் நடப்பதால், டோக்கன்களுக்காக பக்தர்கள் ஒரே நேரத்தில் திரளுவதால் தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்படுவதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.

    இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் தரிசனத்தை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆகம பண்டிதர்கள், அர்ச்சகர்கள், சாஸ்திர நிபுணர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான உயர் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆகம நிபுணர்கள் ஆகியோருடன் இதுதொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. விரைவில் சொர்க்கவாசல் தரிசனம் குறித்த இறுதி முடிவு வெளியாகும், என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டைக் கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது.
    • துருவ் சொன்ன வார்த்தை எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் தொடர்பாக வெளியான போஸ்டர், பாடல்கள், டிரெய்லர் ஆகியவை ரசிகர்களை வரவேற்பை பெற்றுள்ளது.

    இதனிடையே, 'பைசன்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும் போது, படத்திற்கு 'பைசன்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டைக் கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது. என்னுடைய திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் 'காளமாடன்' என்றுதான் உள்ளது.

    இந்த படம் மிகவும் கடினமான படம். இப்படத்திற்கு பெரிய உழைப்பு தரணும். நாட்கள் நிறைய ஆகும். மன உளைச்சல் வரலாம் என்பதால் துருவ் விக்ரமுக்கு சில டெஸ்ட் வெச்சேன். அதுல துருவ் விக்ரம் என்னை நம்பினார். பல பயிற்சிகளை மேற்கொண்டதில் காயம் பட்டது. அதுலயும் துருவ் விக்ரம் நம்பிக்கையா இருந்தார். அவர் கஷ்டம் படும் போது எல்லாம் சொல்வேன். வேண்டும் என்றால் விட்டுருலாம். அடுத்த கதை பண்ணலாம் என்று சொன்னேன். அதற்கு துருவ் விக்ரம், உங்க மேல நம்பிக்கை இருக்கு சார். உங்களை அப்பா மாதிரி பார்க்கிறேன் என்று சொன்ன வார்த்தை எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. அதன்பிறகு இரண்டு பேர் போட்டி போட்டு கடின உழைப்பை கொடுத்து இருக்கோம். எனக்கு இந்த படத்தின் வெற்றி என்பதை விட துருவ் போட்ட உழைப்புக்கு இந்த படத்தின் மூலம் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தால் இந்த படம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ரொம்ப சந்தோஷம் படுவேன்.

    என்னோட கரியர்ல அதிக உழைப்பும் யோசனையும் போட்டு எடுத்த படம் 'பைசன்' என்றார். 

    ×