என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
லட்சியங்கள் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு.
ரிஷபம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர்.
மிதுனம்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றி சிந்திப்பீர்கள்.
கடகம்
சேமிப்பு கரையும் நாள். செய்தொழிலில் மாற்றம் செய்யலாமா என்று நினைப்பீர்கள். பூமி பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறைமுக எதிர்ப்புகளால் கலக்கம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
கன்னி
தீட்டிய திட்டங்கள் திசைமாறிச் செல்லும் நாள். கூட்டாளிகள் விலகலாம். கூடுதல் முயற்சி செய்தாலும் காரியங்கள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும்.
துலாம்
செய்தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் பலன் கிட்டும்.
விருச்சிகம்
செல்வாக்கு உயரும் நாள். செய்தொழிலில் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக லாபம் கிடைக்கும். திட்டமிட்டபடியே பயணங்களை மேற்கொள்வீர்கள்.
தனுசு
புதிய நண்பர்களின் சந்திப்பால் இதயம் மகிழும் நாள். லாபம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
மகரம்
சுபச்செலவுகள் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் ஏற்படலாம்.
மீனம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உடன் இருப்பவர்கள் எதிரியாகலாம். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடும்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கச்சனாவ் முதல் செட்டை 7-6 (7-3) என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதுகிறார்.
- திடீரென மைதானத்தில் நுழைந்த தேனீக்கள் கூட்டம் வீரர்கள், நடுவர்களை தாக்கியது.
- தேனீக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தின் சுக்லகஞ்ச் பகுதியில் உள்ள ராகுல் சப்ரு மைதானத்தில் இளையோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம் நடந்த போட்டியின்போது கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா (65), நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, தேனீக்கள் கூட்டம் திடீரென மைதானத்தில் நுழைந்து வீரர்கள், நடுவர்களை தாக்கியது. தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர்.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணிக் குப்தா மைதானத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார். அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின், மேல் சிகிச்சைக்காக கான்பூர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தை உறுதி செய்த கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர், வீரர்களும் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் அம்பயர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
- இந்தக் கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
சென்னை :
தி.மு.க. பொதுச் செயலாளர் துரை.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டம் 20.02.26 (இன்று) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசார ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- காலிறுதி சுற்றில் இத்தாலி வீரர் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் குடியரசின் ஜாகுப் மென்சிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மென்சிக் முதல் செட்டை 7-6 (7-3) என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட சின்னர் 2வது செட்டை 6-2 என எளிதில் வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மென்சிக் 6-3 என போராடி வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் சின்னர் தொடரில் இருந்து வெளியேறினார்.
- அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்தது.
- விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பாகிஸ்தான் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நேற்று அதிகாலை உணவு தயாரிக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். ரமலான் நோன்புக்காக அவர்கள் உணவு சமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்குள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தில் சிலிண்டர் வெடித்தது. இதில் அந்த குடியிருப்புக் கட்டடம் இடிந்து சரிந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமான மக்கள் சிக்கினர்.
இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரமலான் நோன்பு தொடங்கிய முதல் நாளிலேயே கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி முதல் நடந்து வருகிறது.
- இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இலங்கை, நெதர்லாந்து, பின்லாந்து, குரோசியா, எஸ்டோனியா, சொ்பியா, சுலோவாகியா, மொரீஷியஸ், பூடான், கஜகஸ்தான், கிரீஸ், சீஷெல்ஸ், பொலிவியா, கயானா, அபுதாபி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் மற்றும் ஆல்பா பெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து அதிபர் கெய் பார்மலின் மாநாட்டில் பேசுகையில், அடுத்த ஆண்டு ஏ.ஐ. உச்சி மாநாடு ஜெனீவாவில் நடைபெறும் என அறிவித்தார்.
- நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் தமிழகத்தில் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக பீகாரிலும், 2-வது கட்டமாக தமிழகம், கேரளம், மேற்குவங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் சத்தீஸ்கர், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபர் தீவுகள் என யூனியன் பிரதேசங்களுக்கும் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.
இந்நிலையில், கர்நாடகம் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்வதற்கான பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், சண்டீகர், தாத்ரா-நகர் ஹவேலி, டாமன்-டையூ, அரியானா, இமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், லடாக், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.
- இப்ராகிம் சட்ரன் அதிரடியாக ஆடி 56 பந்தில் 95 ரன்கள் அடித்தார்.
சென்னை:
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 39-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற கனடா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரான் அதிரடியாக ஆடி 56 பந்தில் 95 ரன்கள் குவித்தார். செடிகுல்லா அடல் 44 ரன்னும், குர்பாஸ் 30 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும் எடுத்தனர்.
கனடா சார்பில் ஜஸ்கரன் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கனடா அணி களமிறங்கியது. ஹர்ஷ் தாக்கர் 30 ரன்னும், சாத் பின் ஜாபர் 28 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், கனடா அணி 20 ஓவரில் 118 ன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது நபி 4 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- காலிறுதியில் ரஷியாவின் ரூப்லெவ் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கிரீசின் ஸ்டெபனஸ் சிட்சிபாஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிட்சிபாஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஒருபுறம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது, மறுபுறம் வெளிப்படையான ராணுவ அழுத்தத்தைத் தொடர்வது என ட்ரம்ப் அரசு இருவியூகத்தை வகுத்துவருகிறது.
- ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட, நிலைமையை மிக வேகமாகப் போராக மாற்றக்கூடும்
ஈரான் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையேல் மோஷமான விஷயங்கள் நடக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற "அமைதி வாரிய" கூட்டத்தில் பேசிய டிரம்ப்,
"நாம் ஈரானுடன் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும். நல்ல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஈரானுடன் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்வது எளிதல்ல என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் மோசமான விஷயங்கள் நடக்கும்" என தெரிவித்தார். மேலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் அடுத்த 10 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்பட வேண்டும், இல்லையெனில் அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஓமன் நாடு மத்தியஸ்தம் செய்கிறது.
ஒருபக்கம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் மறுபுறம் ஈரான் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நிறைந்துவருகிறது. சமீப நாட்களில் F-22, F-35 மற்றும் F-16 உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மேம்பட்ட போர் விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா. இதனுடன் கூடுதல் கடற்படை கப்பல்களும், வான் பாதுகாப்பு அமைப்புகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த ராணுவ குவிப்பை தடுப்பு நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேசமயம் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரானும் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது, மறுபுறம் வெளிப்படையான ராணுவ அழுத்தத்தைத் தொடர்வது என ட்ரம்ப் அரசு இருவியூகத்தை வகுத்துவருகிறது. கடந்த காலங்களில் திட்டங்கள் பலனளிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் தற்போதைய அணுகுமுறை, சமரசம் செய்யமறுக்கும் ஈரானுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சூழல் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பலவீனமாக இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரு தரப்புமே ஒரு முழு அளவிலான போரை விரும்புவதாகத் தெரியவில்லை என்றாலும், தீவிரமடைந்துள்ள ராணுவக் குவிப்புகளும், சமரசமற்ற பேச்சுக்களும் தவறு நடப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன என தெரிவிக்கின்றனர். கடலிலோ, வான்வெளியிலோ அல்லது பிராந்திய பினாமிப் படைகள் மூலமாகவோ ஏற்படும் ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட, நிலைமையை மிக வேகமாகப் போராக மாற்றக்கூடும் எனவும் எச்சரிக்கின்றனர்.
- தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஈரான் நவீனப்படுத்தியுள்ளது.
- அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
ஈரான் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஓமன் மத்யஸ்தத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டி வருகிறார்.
ஈரானை நோக்கி அமெரிக்க கடற்படை கப்பல் பிரிவு அனுப்பப்பட்டுள்ளது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து ஓமன் கடலில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன.

பிராந்திய நாடுகளுக்கு அமைதியின் செய்தியை வழங்குவதே இந்தப் பயிற்சியின் நோக்கம் என்று ஈரானிய அட்மிரல் ஹசன் மக்சூத்லு தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல் மற்றும் ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கைகளை தடுத்தல் ஆகியவை இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தாக்குதல்களை எதிர்கொள்ள, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்தி வருகிறது.
தலைநகர் தெஹ்ரானில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பார்க்கின் ராணுவ மையத்தில், கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டும் பணிகள் நடக்கின்றன. நதான்ஸ் அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள மலைப்பாதை நுழைவாயில்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அண்மையில் வெளியான செயற்கை கோள் புகைப்படங்கள் இதை உறுதிப்படுத்தி உள்ளன.

தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஈரான் நவீனப்படுத்தியுள்ளது.
பார்க்கின் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஜூலை 2025 முதல் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு இடங்களில் புதிய வான் பாதுகாப்புப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மொத்தத்தில் ஈரான் தனது அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.






