என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் பரஸ்பர ஒப்பந்தத்தில் மட்டும் கையொப்பமிட்டு முதல் கணவரைப் பிரிந்தார்.
    • நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

    முதல் கணவரிடம் விவாகரத்து பெறாவிட்டாலும் இரண்டாம் கணவரிடம் இருந்து பெண்கள் ஜீவனாம்சம் பெற முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் பரஸ்பர ஒப்பந்தத்தில் மட்டும் கையொப்பமிட்டு முதல் கணவரைப் பிரிந்தார். பின்னர் வேறொருவரை இரண்டாம் திருமணம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2 ஆவது கணவா் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வரதட்சிணை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்தப் பெண் புகாா் அளித்தார்.

    மேலும் தனக்காகவும் தனது மகளுக்காகவும் 2 ஆவது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் 2ஆவது கணவன் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து 2 ஆவது கணவன் உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்தார். முதல் கணவரிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறாதததால் 2 ஆவது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியாது என கூறி குடும்ப நல நீதிமன்றத்தில் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்த உத்தரவுக்கு எதிராக அந்த பெண் உச்சநீதிமன்றம் சென்றார். பெண்ணின் மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, முதல் கணவரிடம் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125 இன் கீழ் 2 ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது.

    திருமணம் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை கணவன் அனுபவிக்கும்போது, அதன்மூலம் ஏற்படும் கடமைகளை அவர் தட்டிக்கழிக்க முடியாது. எனவே பெண்ணுக்கு 2ஆவது கணவா் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 

    • பேருந்தில் இருந்த 38 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.
    • தேவையான உதவிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்துள்ளோம்.

    தெற்கு மெக்சிகோவில் நேற்று அதிகாலையில் 48 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து கான்கன் மற்றும் டபாஸ்கோ இடையே சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

    இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக டபாஸ்கோ அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பேருந்தில் இருந்த 38 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்தாக தெரிவித்தனர்.

    தேவையான உதவிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாக டபாஸ்கோ மேயர் ஓவிடியோ பெரால்டா கூறினார்.

    • மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய பந்தை குஷ்தில் ஷா ஸ்வீப் ஷாட் அடித்தார்.
    • மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

    பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. முத்தரப்பு தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டர் வீரரான ரச்சின் ரவீந்திரா காயமுற்றார்.

    இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்களை குவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து 331 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி 38-வது ஓவரின் மூன்றாவது பந்தை பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா எதிர்கொண்டார். நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய பந்தை குஷ்தில் ஷா ஸ்வீப் ஷாட் அடித்தார்.

    இதில் கேட்ச் வாய்ப்பை துரத்தி வந்த ரச்சின் ரவீந்திரா அதனை விக்கெட்டாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது பந்து நேரடியாக அவரது முகத்தை தாக்கியது. இதில் பலத்த காயமுற்ற ரச்சின் ரவீந்திரா இரத்த காயத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார். காயமுற்ற ரச்சின் ரவீந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    போட்டியில் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.



    • கூட்டுறவுத் துறை அமைச்சர் தனது துறையோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம்.
    • மழைநீர் வடிகால் என்ற பெயரில், ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்களும், முதலமைச்சரும், மேயரும்.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு, சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். நீங்கள் வெளியிட்ட தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில், கடந்த 2021 – 2022 முதல், 2023 – 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறுகிறீர்கள். மீதமுள்ள தொகையை தள்ளுபடி செய்தீர்களா இல்லையா என்பது குறித்து, அரசின் கொள்கைக் குறிப்பில் குறிப்பிடப்படவில்லையென்றால், பொதுமக்களுக்கு எப்படித் தெரியும்?

    அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி என்ற தி.மு.க. தேர்தல் வாக்குறுதி, ஆட்சிக்கு வந்த பின்னர், தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை. குறிப்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகைகளை கொண்டு போய் வங்கியில் வைத்துக் கடன் வாங்குங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறித்தான் தேர்தல் பிரசாரமே செய்தார். அப்போது தேவைப்படாத கடன் தள்ளுபடிக்கான தகுதி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்டதைத்தான், உங்கள் வாக்குறுதியை நம்பிக் கடனாளியாக நிற்கும் பொதுமக்களின் சார்பாக நாங்கள் கேள்வியாக முன்வைக்கிறோம்.

    எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, பல பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர், கண்துடைப்புக்காக சிறிய அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதனைப் பல கோடி செலவில் விளம்பரம் செய்யும் விளம்பர மாடல் ஆட்சியால், இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா ?

    கூட்டுறவுத் துறை அமைச்சர் தனது துறையோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். பேரிடர் மேலாண்மைத் துறைக்குச் சென்றுவிட்டார். ஒரு வகையில் அதுவும் நல்லதுதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களை மழைவெள்ளத்தில் தத்தளிக்க வைக்கும் தி.மு.க. அரசின் மீதுள்ள பொதுமக்களின் கோபத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இதனை எடுத்துக் கொள்கிறேன்.

    மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை நிதியை ஒதுக்கவில்லை என்று, தங்கள் கையாலாகாதத்தனத்துக்கு, மத்திய அரசைக் குறை கூறி தனது அறிக்கையை நிறைவு செய்திருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். கடந்த பத்து ஆண்டுகளாக, ஒவ்வொரு முறையும் டிசம்பர் மாதம் பருவமழையின்போது, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், சென்னையின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான். என்ன செய்திருக்கிறீர்கள் சென்னைக்கு? ஒரு ஆண்டிலாவது, பருவமழையைக் கண்டு அஞ்சாமல் சென்னை மக்களால் வாழ முடிகிறதா? அதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தொகுதியான கொளத்தூர் தொகுதி ஒவ்வொரு முறையும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, கடந்த பதினைந்து ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறார்? மழை நாட்களில் மட்டும் நாடகமாடுவதை விட்டுவிட்டு, நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?

    மழைநீர் வடிகால் என்ற பெயரில், ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்களும், முதலமைச்சரும், மேயரும். இத்தனை ஆண்டுகள், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கணக்கு காட்டிவிட்டு, ஒவ்வொரு முறையும் மழையின் மீது பழியைப் போட்டு, பேரிடர் நிவாரண நிதி தரவில்லை என்று கூற வெட்கமாக இல்லையா?

    தென்மாவட்டங்கள் நிலைமை இன்னும் மோசம். தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவில் அறிவிக்கப்பட்டிருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மழை வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட நகைச்சுவை அரங்கேறியது இந்த டிஸாஸ்டர் மாடல் ஆட்சியில்தானே. பேரிடர் வரும்போதெல்லாம், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் எங்கு இருக்கிறார் என்பதைத் தேட, தனிக் குழுவே அமைக்கும் நிலைதானே இருந்து வருகிறது. பருவமழைக்கு முன்னர், நீர்நிலைகளையும், மழை நீர் வடிகால்களையும் தூர்வார வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளோம். விவசாய நிலங்கள் எல்லாம் வெள்ளக்காடாக மாறுவதே, நீர் நிலைகளைத் தூர்வாராமல் புறக்கணிப்பதால்தான் என்பதையும் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம். ஆனால், அதற்கு உரிய நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மழையால் விவசாயிகளுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படும்படி நடந்துவிட்டு, அதன்பின்னர், நிவாரணம் என்ற பெயரில் நாடகமாடுவது ஏன்?

    ஆட்சிக்கு வந்து ஆறு, ஏரி, குளம் என நீர்நிலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்து, அப்பாவி மக்களை மழைவெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, வருடம் ஒரு மாதம், பேரிடர் நிவாரண நிதி என்று திமுகவினர் ஒப்பாரி வைப்பதால், பொதுமக்களுக்கு என்ன பலன்? இத்தனை ஆண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை எந்தெந்த வழிகளில் செலவிட்டீர்கள், இன்னும் என்னென்ன செலவுகளுக்காக நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று தெளிவாக மத்திய அரசிடம் கேட்க முதலமைச்சரை எது தடுக்கிறது? மழை வந்த இரண்டாம் நாளே, குத்துமதிப்பாக இத்தனை ஆயிரம் கோடி நிவாரண நிதி வேண்டும் என்று கேட்பது உங்கள் அரசியல் நாடகத்திற்காக தான் என்பதை மக்கள் அறிவார்கள்.

    எல்லாவற்றுக்கும் மேல், தமிழத்துக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறுவதற்காக, தமிழக மக்களால் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக எதுவும் கேட்டிருக்கிறார்களா? கேன்டீன் செல்வதற்காகவே டெல்லி வரை செல்கிறார்கள் என்று பொதுமக்கள் கேலி செய்யும் அளவில்தான் அவர்கள் செயல்பாடு இருக்கிறது.

    இப்படி, ஒதுக்கப்பட்ட நிதியையும், சிலை வைக்கிறோம், பெயர் வைக்கிறோம் என்று வீணடித்துவிட்டு, பாராளுமன்றத்தில் மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் பொறுப்பையும் தவறவிட்டு, ஆண்டில் 11 மாதங்கள் நீங்கள் விளம்பர நாடகமாடிக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா?

    அமைச்சர் பெரியகருப்பனுக்கு நான் பணிவன்புடன் கூறிக்கொள்வதெல்லாம், உங்கள் துறையிலேயே இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. நீங்கள் நள்ளிரவில் பதிலளித்தாலும், நண்பகலில் பதிலளித்தாலும், உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும். இது ஒவ்வொரு துறை அமைச்சருக்கும் பொருந்தும். அதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெப்சைட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டவரும் ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாறி இருப்பதாக கூறப்படுகிறது.
    • கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார்.

    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பெயரில் மீண்டும் போலி வெப்சைட் உலா வருவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்ப்பாரண்னேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தர முடியாத பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெப்சைட்டில் சென்று, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தேவையான அர்ச்சனை, அபிஷேகங்களை செய்து பிரசாதங்களை பெற்று வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு கோவில் வெப்சைட் போலவே போலியான வெப்சைட் ஒன்று உருவானதையடுத்து, காரைக்கால் மாவட்ட கிரைம் போலீசார் கண்டுபிடித்து அதனை சரி செய்தனர். இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு மீண்டும் கோவில் பெயரில் போலியான வெப்சைட் உலா வருவதாக கூறப்படுகிறது. அதில் பக்தர்களை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

    இந்த வெப்சைட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டவரும் ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாறி இருப்பதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெளிநாடான ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாட்டை சேர்ந்த பக்தர்களும் கோடிக்கணக்கில் பணம் கட்டி ஏமாந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் உள்ளூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், அதிகாரிகளும் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.

    குறிப்பாக சனிக்கிழமை நடைபெறும் ஆசூஷா அர்ச்சனைக்கு இந்தியர்களுக்கு ரூ. 2750 மற்றும் வெளிநாட்டினருக்கு 82 டாலர்களும் வசூல் செய்தது தெரிய வந்தது. இதே போல் மாதந்தோறும் நடைபெறும் சவர்சனம் அர்ச்சனைக்கு இந்தியர்களுக்கு ரூ.5001 மற்றும் வெளிநாட்டினருக்கு 151 டாலர்களும் வசூல் செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலி வெப்சைட்டில் ஏமாந்த பக்தர்கள் அல்லது கோவில் நிர்வாகம் போலீசாரிடம் புகார் கொடுக்கும் பட்சத்தில் ஏமாந்தவர்கள் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் போலி வெப்சைட் உலா வருவது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • அதிபர் டிரம்ப் பேட்டியில் தெளிவுபடுத்தி உள்ளார்.
    • மனைவியுடன் அவருக்கு போதுமான பிரச்சினைகள் உள்ளன.

    டியூக் ஆஃப் சசெக்ஸ் இளவரசர் ஹாரியின் குடியேற்ற நிலையை கேள்விக்கு உட்படுத்தும் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், இளவரசர் ஹாரியை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிராகரித்து இருப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    தி நியூயார்க் போஸ்ட்டுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ஹாரி மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று டிரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார்.

    "நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நான் அவரை தனியாக விட்டுவிடுகிறேன். ஏற்கனவே அவரது மனைவியுடன் அவருக்கு போதுமான பிரச்சினைகள் உள்ளன. அவரது மனைவி மோசமானவர்," என்று டிரம்ப் நியூயார்க் போஸ்ட்டிடம் பேசும்போது கூறினார்.

    ஹாரியின் விசா விவகாரம் தொடர்பான சட்ட சிக்கல்கள், குறிப்பாக போதைப் பொருள் பயன்பாடு குறித்து விசா நடைமுறைகளின் போதே ஹாரி தகவல் தெரிவிக்க மறுத்தது தொடர்பாக ஹெரிடேஜ் பவுன்டேஷன் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.

    • பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது தெரிய வந்தது.
    • பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் வழியாக பெங்களூரு செல்லும் ரெயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணை கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கை, கால் உடைந்த நிலையில் அந்த கர்ப்பிணி மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை நேற்று பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது தெரிய வந்தது.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தின் எதிரொலியாக, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஐஜி ஏ.ஜி. பாபு ஆய்வு நடத்தினார்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    • ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் தொடங்கியது.
    • கட்டாக்கில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் தொடங்கியது.

    இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கடந்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி இந்தியாவில் வைத்து இந்திய அணியை ஐந்து முறை மட்டுமே வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 31 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 

    • 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.
    • காஷ்மீர் முதல்-மந்திரியும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான உமர் அப்துல்லா ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை கேலி செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிப் பெற்றுள்ளது. இதன் முலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.

    இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்தனியே களம் கண்ட நிலையில் இரு கட்சிகளும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. இதுதொடர்பாக காஷ்மீர் முதல்-மந்திரியும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான உமர் அப்துல்லா ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை கேலி செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "உங்களுக்குள் இன்னும் கொஞ்சம் சண்டையிட்டுக் கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பிரபலமான வீடியோ 'மீம்ஸ்' ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "உங்கள் விருப்பப்படி சண்டையிட்டுக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் தோற்கடித்து மகிழுங்கள்" என கூறப்பட்டுள்ளது.

    • அரிட்டாய நாயனார் குருபூஜை.
    • ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு தை-27 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி இரவு 8.47 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: திருவாதிரை இரவு 7.17 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் காலை தங்கப் பல்லக்கு சுவாமி அம்பாள் விருஷப சேவை. கோவை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம். காஞ்சி ஸ்ரீஉலகளந்தப் பெருமாள் பவனி வரும் காட்சி. அரிட்டாய நாயனார் குருபூஜை, சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்டேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர், பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிகளில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-ஆதாயம்

    மிதுனம்-சுகம்

    கடகம்-சுபம்

    சிம்மம்-செலவு

    கன்னி-தாமதம்

    துலாம்- உண்மை

    விருச்சிகம்-களிப்பு

    தனுசு- உழைப்பு

    மகரம்-சுகவீனம்

    கும்பம்-பொறுமை

    மீனம்-பயணம்

    • வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று தொடங்கின.
    • முக்கியத் தலைவர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

    டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின.

    அதன்படி டெல்லியில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இறுதிகட்ட முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் (AAP) ஐந்து முக்கியத் தலைவர்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

    இவர்களில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் முக்கிய அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் அடங்குவர்.

     


    தோல்வியடைந்த AAP-யின் முக்கியத் தலைவர்கள் விவரம்:

    அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் கடந்த 2013, 2015 மற்றும் 2020 ஆகிய தேர்தல்களில் ஆம் ஆத்மி சார்பில் போட்டடியிட்டு கட்சியை வெற்றி பெற செய்த அரவிந்த் கெஜ்ரிவால் நடைபெற்று முடிந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியை தழுவினார்.

    மணீஷ் சிசோடியா: டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான சிசோடியா, ஜங்புராவில் பா.ஜ.க. வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம் தோல்வியடைந்தார். கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்சிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், இந்த முறை தேர்தலுக்காக ஜங்புரா தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார்.

    சவுரப் பரத்வாஜ்: முக்கிய ஆம் ஆத்மி கட்சி தலைவரான திரு. பரத்வாஜ், 2013 இல் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றார், ஆனால் இந்த முறை பா.ஜ.க.-வின் ஷிகா ராயிடம் தோல்வியை தழுவினார். இவரது தொகுதி ஆம் ஆத்மிக்கு பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்டது, எனினும், இங்கு பா.ஜ.க. வெற்றி பெற்று அந்த நிலையை மாற்றியது.

    துர்கேஷ் பதக்: ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட அமைப்புகள், அரசியல் விவகாரக் குழு மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினரான திரு. பதக், டெல்லியின் ராஜிந்தர் நகர் தொகுதியில் பா.ஜ.க.-வின் உமாங் பஜாஜிடம் தோல்வியடைந்தார். திரு. பதக் 2022 இல் நடந்த இடைத்தேர்தலில் அந்த இடத்தை வென்றார். இந்த முறை அவர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் தோல்வியடைந்தார்.

    சத்யேந்திர ஜெயின்: ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவரும் டெல்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயின், டெல்லியின் ஷகூர் பஸ்தி தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக இருந்த திரு. ஜெயின், 2022 இல் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் பா.ஜ.க.வின் கர்னைல் சிங்கிடம் தோல்விய தழுவினார்.

    ×