என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Election Results"

    • டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - நாம் தமிழர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 

    டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படவுள்ளன.

    • ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
    • பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    முதலில் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. டெல்லியில் 19 மையங்களில் வாக்கு எண்ணும் பணியில் சுமார் 5,000 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஆட்சியை பிடிப்பது யார் என்று சில மணி நேரங்களில் தெரிய வரும்.

    வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
    • இது சாதாரண தேர்தல் அல்ல, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம்.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

    இந்நிலையில் டெல்லி முதல்வரும், கல்காஜி தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான அதிஷி வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தார்.

    இது சாதாரண தேர்தல் அல்ல, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம். இந்த போராட்டத்தில் டெல்லி மக்கள் நல்லவர்கள், ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் நான்காவது முறையாக முதல்வராக வருவார் என்று கூறினார்.

    • தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
    • டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

    இந்நிலையில், 'மினி அரவிந்த் கெஜ்ரிவால்' என்ற சிறுவன் டெல்லி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளான்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான ராகுல் தோமர், தனது மகன் அவ்யன் தோமருடன் வந்திருந்தார். அப்போது அவ்யன் தோமர் நீல நிற ஸ்வெட்டருடன் வெள்ளை காலர் மற்றும் பச்சை நிற பஃப் ஜாக்கெட் அணிந்திருந்தான். மேலும் கெஜ்ரிவாலை போலவே தோற்றமளிக்க அவர் போலவே கண்ணாடி மற்றும் மீசையை அணிந்திருந்தான்.

    இந்த குளிர்காலத்தில் கெஜ்ரிவால் பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது இதே போன்ற உடைகளை தான் அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
    • முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலை 8.50 மணி நிலவரப்படி பா.ஜ.க. 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    விஸ்வாஸ் நகர் மற்றும் ஷாஹ்தாரா ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. விஸ்வாஸ் நகரில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஓம் பிரகாஷ் சர்மா 4997 வாக்குகளும், ஷாஹ்தாரா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் கோயல் 3666 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    இதனிடையே, ஆம் ஆத்மி சார்பில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அர்விந்த் கெஜ்ரிவால், கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். 

    • பாஜக 41 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 29 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
    • அரவிந்த் கெஜ்ரிவால் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்தனர்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

    தற்போதுவரை பாஜக 42 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

    ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி முதல்வர் அதிஷி ஆகியோர் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்தனர். பின்னர் அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கையில் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் அதிஷி ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்

    • பாஜக 46 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது
    • அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

    தற்போதுவரை பாஜக 46 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் அதிஷி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.பி. யோகேந்திர சந்தோலியா, "பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கெஜ்ரிவால் எல்லா மாடல்களிலும் சரிந்துள்ளார். கெஜ்ரிவால் திகார் சிறைக்கு செல்வது உறுதி. அவர் முதல்வர் ஆக விரும்பினார் ஆனால் இனி அவர் எம்.எல்.ஏ.வாக கூட இருக்கப் போவதில்லை. பாஜக மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்படும் எந்தக் கட்சித் தொண்டனும் டெல்லியின் அடுத்த முதல்வர் ஆவார்" என்று அவர் தெரிவித்தார்.

    • முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் இவர்.
    • விஜேந்தர் குப்தா டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர்.

    டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி மத்தியில் ஆளும் பாஜக முன்னிலையில் உள்ளது. 10 வருடமாக டெல்லியை ஆண்ட ஆம் ஆத்மி பின்னிலையில் உள்ளது. தனித்து போட்டியிட்ட காங்கிரசும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

    ஆம் ஆத்மியின் முதல்வர் முகமாக அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிறுத்தப்பட்டார். ஆனால் பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் களம் கண்டது. இந்நிலையில் பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் யார் முதல்வர் ஆக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அந்த வகையில் முதல்வர் ரேஸில்  பர்வேஷ் வர்மா முன்னிலை பெற்றுள்ளார். முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் இவர்.

    அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புது தில்லி தொகுதியில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். கெஜ்ரிவாலை சுமார் 5000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து  பர்வேஷ் வெற்றி பெற்றுள்ளார். இவரே டெல்லி முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னதாக பாஜக முதல்வர் வேட்பாளர் ரேஸில் இருந்தவர்கள்:

    ரமேஷ் பிதுரி: டெல்லி முதல்வர் அதிஷியை எதிர்த்து கல்காஜி தொகுதியில் போட்டியிட்டார். ஆம் ஆத்மி கட்சி பிதுரியை பாஜகவின் முதல்வர் முகமாக அறிவித்து, தேர்தல் பிரச்சாரங்களின் போது அவரை விவாதத்திற்கு அழைத்தது. பிரியங்கா காந்தியின் கன்னங்களை போல் சாலை அமைப்பேன் என கூறி சர்ச்சையில் சிக்கியவர்.

    துஷ்யந்த் கௌதம்: பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவர். குறிப்பாக தலித் தலைவர். மாநிலங்களவை எம்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார்.

    விஜேந்தர் குப்தா: டெல்லியில் பாஜகவின் மூத்த தலைவரான இவர் முதல்வர் பதவிக்கு முக்கிய போட்டியாளராக இருந்தார்.

    டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்தவர் இவர். ஆம் ஆத்மியின் ஆதிக்கம் இருந்தபோதிலும் 2015 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் ரோஹினி தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். விஜேந்தர் குப்தா டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்.

    கைலாஷ் கெலாட்: பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிடும் கெலாட், பாஜக முதல்வர் ரேஸில் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் இருந்தது. மூத்த தலைவரான கைலாஷ் கெலாட், ஆம் ஆத்மி ஆட்சியில் அமைச்சராக இருந்து, தேர்தலுக்கு முன் பாஜகவுக்குத் தாவினார். பிஜ்வாசன் தொகுதியில் தற்போது முன்னிலை வகிக்கிறார்.

    அர்விந்தர் சிங் லவ்லி: காந்தி நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவரான அர்விந்தர் சிங், தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தார்.

    கபில் மிஸ்ரா: கரவால் நகரில் போட்டியிடும் மிஸ்ரா, தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகிக்கிறார். ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்.

    • பாஜக 48 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
    • கெஜ்ரிவால் பண பலத்தால் மூழ்கிவிட்டார் என்று அன்னா ஹசாரே தெரிவித்தார்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

    தற்போதுவரை பாஜக 48 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் , மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் தோல்வி குறித்து பேசிய அன்னா ஹசாரே, "ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். இந்த குணங்கள் தான் வாக்காளர்களை அவர் மீது நம்பிக்கை வைக்க காரணமாக இருக்கும் என்று நான் எப்போதும் சொல்வேன். நான் இதை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சொன்னேன், ஆனால் அவர் அதை காதில் வாங்கவில்லை, கடைசியாக, அவர் மதுபானத்தில் கவனம் செலுத்தினார். ஏன் இந்தப் பிரச்சினை எழுந்தது? பண பலத்தால் அவர் மூழ்கிவிட்டார்" என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் இதுவரை ஒரு இடத்திலும் முன்னிலை பெறவில்லை.
    • டெல்லியின் அடுத்த முதலமைச்சராக பர்வேஷ் வர்மா தேர்தந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது.

    இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது. இதனால் 27 வருடங்களுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் பா.ஜ.க. முன்னிலை வகித்தது. அதன்பின் ஆம் ஆத்மி முன்னிலை வகித்தது. இதனை தொடர்ந்து இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தது.

    இருப்பினும் மதியம் நிலவரத்திற்கு பிறகு பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 46 இடங்களிலும், ஆம் ஆத்மி 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்த தேர்தல் முடிவில் காங்கிரஸ் இதுவரை ஒரு இடத்திலும் முன்னிலை பெறவில்லை.

    ஆட்சி அமைக்க பெரும்பான்மையான இடங்களை பா.ஜ.க. பெறும் நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி மாலை 7 மணி அளவில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட டெல்லியில் பா.ஜ.க.வின் வெற்றி உறுதியான நிலையில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இதனிடையே டெல்லியின் அடுத்த முதலமைச்சராக பர்வேஷ் வர்மா தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷாகித் சிங் ஷர்மாவின் மகன் ஆவார். மேலும் மேற்கு டெல்லி மக்களவை தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
    • ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வியை தழுவினார்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.

    பர்வேஷ் வர்மா 28238 வாக்குகள் பெற்ற நிலையில் 3789 வாக்குகள் பின்தங்கி 24449 வாக்குகளுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவைச் சந்தித்தார்.

    அதேபோல ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வியை தழுவினார்.

    பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் 34,632 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்ற நிலையில் 572 வாக்குகள் வித்தியாசத்தில் மணீஷ் சிசோடியா பின்தங்கினார்.

    ஆம் ஆத்மியின் முக்கிய முகங்களான கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகி திகார் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
    • தமிழர்கள் தமிழில் வழிபாடு செய்வதற்கும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கும் இயலாத நிலை இருப்பது வேதனை அளிக்கிறது.

    மதுரை:

    மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்.

    திருப்பரங்குன்றத்தில் உள்ள பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். பா.ஜ.க. போன்ற சங்பரிவார கும்பல்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் மதப் பதட்டங்களை உண்டு பண்ண முயற்சிக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களின் அதிகாரிகள் எடுக்கிற சட்ட ஒழுங்கு சார்ந்த நிலைப்பாடுகள் தான் சமூக பதட்டங்களை ஏற்படுத்துகின்றன.

    எல்லா பிரச்சனைகளையும் சட்டம் ஒழுங்கு அடிப்படையில் மட்டுமே வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அணுகுகிறார்கள். திருப்பரங்குன்றத்திலே மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு இந்த பதற்றத்திற்கு காரணம் என்பதை மாற்று கருத்து இல்லை. நாங்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகிறது. பாலியல் குற்றங்களை பெருகுவதை காவல்துறை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் பா.ஜ.க. விரும்புகிற ஒரே கல்வி முறையை கொண்டு வருவதற்கு தேசிய கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. இதற்கு உடன்படாத தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடி இன்னும் மத்திய அரசால் விடுவிக்கப்படாமல் உள்ளது.

    பா.ஜ.க அரசு இந்த முறை பீகாருக்கும் ஆந்திராவுக்கும் தான் அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளார்கள். பா.ஜ.க. அல்லாத மாநிலங்களையும், தமிழகத்தையும் வஞ்சிக்கிறார்கள். கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு தமிழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கூறினார்கள். நீதிமன்றம் முதலில் அந்த அனுமதியை வழங்கியது மேல்முறையீட்டு வழக்கில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்ட தமிழர்கள் தமிழில் வழிபாடு செய்வதற்கும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கும் இயலாத நிலை இருப்பது வேதனை அளிக்கிறது. நீதிமன்றமும் அதற்கு துணையாக இருப்பது கவலை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×