என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கடந்த வாரம் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
- ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஞானசேகரனிடமிருந்து செல்போனை முக்கிய ஆதாரமாக போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களை போலீசார் முதன்மையானதாக கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின்போது பல கோணங்களில் அவரை பேச வைத்து குரலை பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
- தமிழகம் முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த திட்டம்.
- போக்குவரத்து நெரிசலை தவிர்க மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்கள்.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'பேர்புரோ 2025' கட்டுமான வீட்டு மனை கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று முதலில் உணர்ந்து கொள்வது கட்டிடங்கள்தான். அந்த வகையில், உங்களுடைய அமைப்பையும், நீங்கள் நடத்தி வரும் இந்த கண் காட்சியையும் வளர்ச்சியின் அடையாளமாகதான் நான் பார்க்கிறேன்.
மக்கள்தொகை பெருக்கம் அதிகம் இருக்கக்கூடிய நாட்டில் மக்களின் எல்லாத்தேவைகளையும் அரசே செய்துவிட முடியாது. உங்களை போன்ற அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
நம்முடைய மாநில மக்கள் தொகையில், 48 விழுக்காடு மக்கள் நகர்ப்புறத்தில் வசிக்கிறார்கள். இதனால் நாம் மிகவும் நகரமய மாக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறோம். இது வரும் ஆண்டுகளில் மேலும் உயரும். இதனால், நீடித்து நிலைக்கக்கூடிய வீட்டு வசதிக்கான தேவைகள் அதிகரிக்கும்.
சென்னை பெருநகர பகுதிக்கான முதல் மற்றும் இரண்டாம் முழுமைத் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மூன்றாவது முழுமைத் திட்டத்தையும் நம்முடைய அரசுதான் முனைப்போடு தயாரித்துக் கொண்டு வருகிறது.
நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்முயற்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுத்து செல்லவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம்தான் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சென்னை பெருநகர பகுதியின் வளர்ச்சியை வழிநடத்தப்போகிறது.
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டலத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர், மதுரை, ஒசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் திருநெல்வேலியை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஓசூருக்கான முழுமைத் திட்டமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய 9 வளர்ச்சி மையங்களான மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், திருப்பெரும்புதூர் மற்றும் பரந்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக, புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதுநகர் திட்டங்களின் நோக்கம் என்னவென்றால்…
சென்னையின் நெரி சலைக் குறைக்கவேண்டும், பொருளாதார மையங்களை உருவாக்க வேண்டும், போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும், சென்னை மாநகரை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் நோக்கம்.
கடந்த 10 ஆண்டுகளில், இப்படிப் பட்ட திட்டங்கள் தயாரிக்கும் பணி தேக்கமடைந்து இருந்தது. அந்த நிலையை மாற்ற நம்முடைய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஒற்றைச் சாளர முறை மற்றும் இணையதள கட்டிட அனுமதி பெறும் முறை தற்போது நிறை வேற்றப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின்கீழ், மனைப் பிரிவு மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதிகளின் எண்ணிக்கை 45 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. ஒப்புதல் வழங்கு வதற்கான கால அளவு 180 நாட்களிலிருந்து 64 முதல் 90 நாட்களாக குறைந்திருக்கிறது.
குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட முடிவுறு சான்று பெறுவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டதால், இதுநாள் வரை 51 ஆயிரம் கட்டிட அனுமதிகள் பெறப்பட்டிருக்கிறது.
அதனால், முன் அனுமதிக்கப்பட்ட 100 கட்டிடத்திட்டங்களை பதிவேற்றி இந்த செயல் முறையை மேலும் செம்மைப்படுத்தி எளிமையாக்கு வதற்கான முயற்சிகளை வீட்டுவசதித் துறை தற்போது மேற்கொண்டு வருகிறது.
சென்னையின் உட்பகுதிகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும், வெளிவட்ட சாலைகளுக்கு இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து முனையங்களை பரவலாக்கவும், சி.எம்.டி.ஏ மூலமாக கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்களை உருவாக்கியிருக்கிறோம்.
குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கிறது.
சென்னையின் நீண்ட கடற்கரை பகுதியும், ஏரிக ளும் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் பெரும் கொடைகள். இதை மேம் படுத்த, முதற்கட்டமாக, சென்னை மாநகரில் அமைந்திருக்கும் 12 ஏரிகள் மற்றும் 4 கடற்கரைப் பகுதிகளைத் தேர்வு செய்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்த 250 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரித்திருக்கிறது.
இந்தத் திட்டம், பொழுதுபோக்கு சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள், மழைநீரை சேகரித்து வெள்ளத்தை தடுக்கும் அமைப்போடு உருவாக்கப்படும்.
ஸ்பாஞ்ச் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், விளையாட்டு வளாகங்கள், பல்நோக்கு மையங்கள் மற்றும் சந்தைகள், பேருந்து முனையங்கள், சுரங்கப்பாதைகளை நவீனபடுத்துதல், புதிய திட்ட சாலை இணைப்பு பகுதிகளை கண்டறிந்து மறுவடிவமைத்து மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மத்தால் 196 நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீட்டில், கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், செம்மஞ்சேரியில் அமையவுள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டு நகரம், தீவுத்திடலில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த பொருட்காட்சி மையம் மற்றும் போரூர் நகர்ப்புறப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட பரந்து விரிந்த நன்செய் நிலப் பூங்கா ஆகியவை குறிப்பிடத்தக்க திட்டங்கள்.
இதனை செயல்வடிவாக்க தற்பொழுது நடைமுறையில் இருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019-ஐ புதுப்பிக்கும் செயல்பாடுகளில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முழு ஈடுபாட்டோடு செயலாற்றி வருகிறது.
நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது பல முதலீட்டாளர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அவர்கள் பெரும்பாலும் என்னிடத்தில் கேட்டது என்னவென்றால், சென்னை யிலும், மாநிலம் முழுவதும் இன்னும் கூடுதலாக தொழில் பூங்காக்களும், இன்னும் கூடுதல் அலுவலகக் கட்டிடம் தேவைப்படுகிறது என்று சொன்னார்கள். எனவே, தொழில் துறை கோரிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் தொழில் அதிபர்கள், வங்கி அதிகாரிகள், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எட்டு அணிகள் இடம்பெற்றுள்ளன.
- எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்-இன் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் எட்டு அணிகள் இரு பிரிவுகளின் கீழ் விளையாடுகின்றன. க்ரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. க்ரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தொடரில் விளையாடும் அணிகள் தங்களது வீரர்களின் பட்டியலை ஏற்கனவே ஐ.சி.சி.-யிடம் சமர்பித்து இருந்தன. இந்த நிலையில், அணிகள் தங்களது வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை சமீபத்தில் தான் சமர்பித்தன. அந்த வகையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் எட்டு அணிகளின் வீரர்கள் இறுதிப் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
நியூசிலாந்து:
மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மார்க் சாம்ப்மென், கேன் வில்லியம்சன், வில் யங், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், வில்லியம் ஓ ரூர்க், லாக்கி ஃபெர்குசன், பென் சீயர்ஸ், மேட் ஹென்றி.
பாகிஸ்தான்:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர், கேப்டன்), பாபர் அசாம், ஃபகார் ஜமான், தையப் தாஹிர், குஷ்தில் ஷா, உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), கம்ரான் குலாம், சவூத் ஷகீல், சல்மான் ஆஹா, பஹீம் அஷ்ரப், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாகீன் அஃப்ரிடி.
வங்கதேசம்:
நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), மெஹதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), சவுமியா சர்கா, தவ்ஹித் ஹ்ரிடோய், தன்சித் ஹசன், மஹ்மதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஜேக்கர் அலி (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ஹொசைன் எமோன் (விக்கெட் கீப்பர்), ரிஷாத் ஹொசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, நஹித் ராணா, நசும் அகமது, தன்சிம் ஹசன் சகிப்.
ஆஸ்திரேலியா:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜேக் பிரேசர்-மெக்கர்க், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஹார்டி, க்ளென் மேஸ்வெல், சீன் அபோட், பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா, ஆடம் ஜாம்பா.
இங்கிலாந்து:
ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கட், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், ஷகிப் மஹ்மூத், மார்க் வுட்.
தென் ஆப்பிரிக்கா:
தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, ராஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ரியான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர்), ஹென்றிச் க்ளாசென் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், வியான் முல்டர், கார்பின் போஷ், ககிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி நிகிடி.
ஆப்கானிஸ்தான்:
ஹஸ்மத்துல்லா ஷாகிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா, செடிகுல்லா அடல், இப்ராகிம் ஜட்ரான், ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), குலப்தீன் நயிப், அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, ரஷித் கான், நங்கெய்லியா கரோட்டி, பசல்ஹக் ஃபரூக்கி, பரீத் அகமது மாலிக், நூர் அகமது, நவீத் ஜத்ரான்.
- சிறுவனின் தந்தை ராகுல் குப்தா குவாலியரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.
- இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் நேற்று [வியாழக்கிழமை] காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் தாயின் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடத்தப்பட்ட சிறுவன் 7 வயதான ஷிவாய் குப்தா. சிறுவனின் தந்தை ராகுல் குப்தா குவாலியரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார். குவாலியரில் முரான் பகுதியில் நேற்று சிறுவனை தாய் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்திக்கொண்டு செல்வது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தாயின் கண்களில் அவர்கள் மிளகாய்ப் பொடியை வீசியதால் அவர் நிலை தடுமாறி சுதாரிப்பதற்குள் அவர்கள் சிறுவனை கடத்திச் சென்றனர்.
அவர் தனது கணவரிடம் விரைந்து சென்று நடந்த முழு சம்பவத்தையும் கூறினார். தொடர்ந்து இருவரும் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காட்சிகளின் அடிப்படையில் கடத்தல்காரர்களைத் தேடும் பணியை போலீசார் தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதற்கிடையில் நேற்று மாலை கடத்தப்பட்ட 7 மணி நேரம் கழித்து சிறுவன் மீட்கப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்தார். சிறுவன் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கடத்தல்காரர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றத்திற்காக அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் மோகன் யாதவ் கூறினார்.
- ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
- இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் யுவராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், முருக பெருமானுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா வைத்து இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
இதை கண்டித்து சென்னையில் வேல் ஏந்தி ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், 'ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழி பாதை, நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.
பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும். ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவதை நீதி மன்றம் ஊக்குவிக்க கூடாது' என்று வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு என்றும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் என மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பித்தார். அதில் மேல் ஏந்தி சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு அளித்தார்.
- சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது.
- இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாடுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மார்ச் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 2.24 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 19.45 கோடி வழங்கப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகை 1.12 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 9.72 கோடி வழங்கப்படுகிறது. அரையிறுதி சுற்றில் தோல்வியை தழுவும் ஒவ்வொரு அணிக்கும் 5.6 லட்சம் அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4.86 கோடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை 6.9 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 60 கோடி ஆகும்.
க்ரூப் சுற்று போட்டிகளில் ஒவ்வொரு அணியும் பெறும் வெற்றிக்கு (ஒரு போட்டி) 34 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 லட்சம் வழங்கப்படும். ஐந்து மற்றும் ஆறாவது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு 3.5 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 3 கோடி வழங்கப்படுகிறது. ஏழு மற்றும் எட்டாவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா 1.4 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1.2 கோடி வழங்கப்படும்.
2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட இருக்கிறது. வருகிற 19-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 20-ம் தேதி நடைபெற இருக்கிறது.
- எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய விவாதங்களுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை என்பதே உண்மை.
- ஜனநாயகத்தின் மீது பாராளுமன்றத்தின் மீது இருக்கக்கூடிய மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.
காஞ்சிபுரத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கவர்னரே வேண்டாம் என்கிறோமே. கவர்னர் கவர்னராக செயல்படவில்லை. ஒரு அரசியல்வாதியாக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
* ஐஸ் என்று சொல்லுவோம் வருமான வரி, சிபிஐ, அமலாக்கத்துறை. இப்போது கவர்னர்களை 4-வது கரமாக தன்னுடைய ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு பிரச்சனையை உருவாக்குவதற்காக தொடர்ந்து எதிராக செயல்படுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.
* எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகளை கேட்கக்கூடிய பொறுமை ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆளும் பா.ஜ.க.வுக்கு இல்லை. எந்த எதிர்வாதமாக இருந்தாலும் யார் பேசினாலும் சரி எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகளை கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.
* நாங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கோ, எழுப்பக்கூடிய பிரச்சனைகளுக்கான விவாதங்களை ஏற்றுக்கொள்வதற்கோ அவர்கள் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய விவாதங்களுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை என்பதே உண்மை.
* ஜனநாயகத்தின் மீது பாராளுமன்றத்தின் மீது இருக்கக்கூடிய மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.
* இதுபோன்று பேசியவர்கள் பலரை அறிவாலயம் பார்த்திருக்கிறது. தி.மு.க. பார்த்திருக்கிறது. யார், யாரை பிரிப்பது என்பதை பார்ப்போம் என்று அண்ணாமலைக்கு அவர் பதிலடி அளித்தார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் உறுதி தன்மை குறித்து தொடர் ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன.
ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன. தொடர்ந்து இரும்பால் ஆன இணைப்பு பகுதியை செங்குத்தாக மேலே தூக்கி இறக்கி கப்பல்கள், ரெயில்களை இயக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் பொது மக்கள் விரைவில் புதிய ரெயில் பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பாம்பன் புதிய ரெயில் பாலம் இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து பாம்பன் பாலத்தில் இறுதிகட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் அதிகாரிகள் மண்டபம் வந்தனர். அங்கிருந்து புதிய ரெயில் பாலத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலத்தின் உறுதித்தன்மை, தூக்கு பாலத்தின் தரம் உள்ளிட்ட வைகளை இறுதி கட்டமாக ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ராமேசுவரம் ரெயில் நிலையத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
திறப்பு விழாவில் பங்கேற்க உள்ள நிலையில் மண்டபம் மற்றும் பாம்பனில் அதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
- ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது.
- விஜய் சேதுபதி நடிப்பில் டிரெயின் படத்தை இயக்கி வருகிறார்.
சித்திரம் பேசுதடி படத்தில் தொடங்கி அஞ்சாதே, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட தனித்துவமான படங்களை இயக்கியவர் மிஷ்கின்.
நந்தலாலா, சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் தேர்ந்த நடிகராகவும் திகழ்பவர். கடைசியாக இவர் நீதிபதியாக நடித்த பாலாவின் வணங்கான் படம் வெளியானது. தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்திலும் மிஷ்கின் நடித்துள்ளார்.

பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (பிப்ரவரி 13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், 'பேட் கேர்ள்' பட சர்ச்சை குறித்து பேசினார்.
'பேட் கேர்ள்' படம் எடுத்தது ஒரு பெண். டிரைலரை வைத்து ஒரு படத்தை முடக்குவதில் நியாயமே இல்லை. ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண் இயக்குநர் ஆவது மிகவும் முக்கியமான ஒன்று என்று தெரிவித்தார்.
பின்னர் மேடையில் இருந்த திரையில் படக்குழுவினர் ஒவ்வொருவரின் புகைப்படங்களாக காட்டி இயக்குநர் மிஷ்கினிடம், அவர்கள் குறித்து ஒரு வரியில் தொகுப்பாளர்கள் கருத்து கேட்டனர்.

மிஷ்கினின் புகைப்படம் திரையில் தோன்றிய போது அது குறித்து கருத்து தெரிவித்த அவர், "விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்" என்று ஒருவரியில் பதில் கூறிவிட்டு சென்றார். மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2, விஜய் சேதுபதி நடிப்பில் டிரெயின் ஆகிய படங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த மனு அந்த கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
- ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் பிப்ரவரி 14, 15-ந் தேதிகளில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.
பெங்களூரு:
தமிழகத்தில் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்-அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அவர் ரூ.66.65 கோடி மதிப்புள்ள சொத்துகளை சட்டவிரோதமாக வாங்கி குவித்ததாக ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை பெங்களூருவில் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இதில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த நேரத்தில் ஜெயலலிதா ஏற்கனவே மரணம் அடைந்ததை அடுத்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட 3 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக அரசிடம் உள்ள சுமார் 27 கிலோ தங்க-வைர நகைகளை ஏலம் விட உத்தரவிடுமாறு பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த மனு அந்த கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகைகளை கடந்த ஆண்டு மார்ச் 6, 7-ந் தேதிகளில் ஒப்படைக்கும்படி கர்நாடக அரசுக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவில் அடிப்படையில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜெ.தீபாவின் மனுவை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு, ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் பிப்ரவரி 14, 15-ந் தேதிகளில் ஒப்படைக்கும்படி கடந்த மாதம் (ஜனவரி) உத்தரவிட்டது.
இந்நிலையில் பெங்களூரு சிட்டி சிவில் கோா்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் நகைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
- ஐபோன் SE 4 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் போன்களில் ஒன்றாக இருக்கும்
- ஃபியூஷன் கேமரா தொழில்நுட்பத்துடன் கூடிய 48MP பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கலாம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் SE 4 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் "குடும்பத்தின் புதிய உறுப்பினரைச் சந்திக்கத் தயாராகுங்கள். புதன்கிழமை, பிப்ரவரி 19. #AppleLaunch" என்று பதிவிட்டுள்ளார்.
ஐபோன் SE 4 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் போன்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அதன் அம்சங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதுதொடர்பாக அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
சிப்செட்:
ஐபோன் SE 4 , ஐபோன் 16 இல் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த 3nm ப்ராசசர் A18 சிப்செட்டைக் கொண்டிருக்கும். இதன்மூலம், தேவைப்படும் பயன்பாடுகள் மற்றும் கேம்களை எளிதாகக் கையாள முடியும். கூடுதலாக, SE சீரிஸில் முதல் முறையாக மேம்பட்ட AI அம்சங்களுடன் ஆப்பிள் நுண்ணறிவு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
டிஸ்ப்ளே
ஐபோன் SE 4, ஐபோன் 14 போன்ற முந்தைய மாடல்களைப் போலவே, 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 6.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம்.
டைனமிக் ஐலேண்ட் க்கு பதிலாக நாட்ச் - முறை இதில் இருக்கலாம். மேம்பட்ட பாதுகாப்பிற்காக முந்தைய டச் ஐடி மாற்றியமைக்கப்பட்டு, இதில் ஃபேஸ் ஐடி முறை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பில்ட் டிசைன்:
ஐபோன் SE 4, ஐபோன் 14 ஐப் போலவே தட்டையான பக்கவாட்டு அலுமினியம் மற்றும் கண்ணாடி கட்டுமானத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கேமரா:
ஐபோன் SE 4, ஃபியூஷன் கேமரா தொழில்நுட்பத்துடன் கூடிய 48MP பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கலாம். இதில் அல்ட்ரா வைடு லென்ஸ் இல்லாவிட்டாலும், மேம்பட்ட புகைப்படம் எடுப்பதற்கு 2x ஆப்டிகல் ஜூம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பேட்டரி:
A18 சிப்செட் மூலம், ஐபோன் SE 4 இல் சிறந்த பேட்டரி ஆயுளை எதிர்பார்க்கலாம்.
- தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
- தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்?
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
சிறுவன் குடும்பத்தினருக்கு, தி.மு.க. கட்சியில் இருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது, தி.மு.க. அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? தி.மு.க. கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகி விடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை?
தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






